Friday, September 25, 2020

ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

 ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை வேறு உபயோகத்துக்குப் பயன் படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளர் டி.கே.சண்முகம் உயர் நீதிமன் றத்தில் தாக்கல் செய்த மனுவில், “திருவள்ளூர் மாவட்டம், அம்பத் தூர் தாலுகா, மேனாம்பேடு கிராமம் மற்றும் கொரட்டூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒழுங்கு படுத்தி, வரன்முறை செய்து பட்டா தர உத்தரவிட வேண்டும். நீர் இல்லாமல், குடிநீருக்கோ, பாச னத்துக்கோ நீண்டகாலம் பயன் படுத்தப்படாமல் இருக்கும் நீர் ஆதாரங்களில் ஆக்கிரமிப்பு இருந் தால் அங்கு பட்டா கொடுப்பதற்கு வகை செய்யும் அரசாணை 30-12-2006-ல் பிறக்கப்பட்டது. அதன்படி,

கொரட்டூர் ஏரி நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் இருப்ப தால், அங்கு ஆக்கிரமித்திருப்பவர் களுக்கு பட்டா தர வேண்டும்” என்று கோரியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், நீர் நிலைகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல் லும் என்று உத்தரவிட்டது.

மற்றொரு வழக்கில், நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருக் கிறது என்று காரணம் காட்டி, அங்கு ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

இரண்டு டிவிஷன் பெஞ்ச்களின் தீர்ப்பு முரண்பட்டதாக இருந்ததால், இந்த வழக்கு இரண்டு பேருக்கு மேற்பட்ட நீதிபதிகள் (முழு அமர்வு) விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்திய நாராயணன், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முழு அமர்வு விசாரித்து, “நீர் ஆதாரங்கள் சட்டத்தின் நோக்கமே நீர் நிலைகளைப் பாது காப்பதுதான். பிரதான வழக்கை மீண்டும் டிவிஷன் பெஞ்ச் விசாரிக்க வேண்டும்’’ என்று உத்தர விட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கை விசாரித்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகி யோர் கொண்ட முதல் அமர்வு விசாரித்து பிறப்பித்த தீர்ப்பு வருமாறு:

ஏரி, குளம் போன்ற நீர்நிலை கள் பொதுமக்களின் சொத்து. அதே நேரத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமே இருப்ப தாக கொள்ளக்கூடாது. பொதுமக்க ளுக்கும் அதில் பங்கு உள்ளது. மக்கள் அதிக சொத்து வாங்க வேண்டும் என்ற ஆசைப்படுவ தால் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப் படுகின்றன. நீர் நிலைகள் மனி தன் மற்றும் கால்நடைகளின் ஆதார மாக இருக்கிறது.

2007-ல் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு சட்டம் இயற்றியது. அரசே இந்த சட்டத்தை மறந்து, இயற்கை ஆதாரங்களை அழிக்க முற்படும்போது அதை மக்கள் எதிர்க்கின்றனர். நீர் நிலை களை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற மும் தீர்ப்பளித்துள்ளது. அதுபோல உயர் நீதிமன்றமும் பல உத்தர வுகள் பிறப்பித்துள்ளது. ஆனால், அந்த உத்தரவுகள் பின்பற்றப் படவில்லை.

அதனால், 2005-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் உயிர் மற்றும் பொருள் இழப்பு ஏற்பட்டது. இப்போது ஏற்பட்ட வெள்ளத்திலும் உயிர் மற்றும் பொருள் இழப்பு ஏற் பட்டிருக்கிறது. இதற்கு தவறான நிர்வாகமும், அதிகாரிகள் பின் பற்றும் நடைமுறைகளே காரணம். நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப் படுவதால், அங்கு தேங்க வேண் டிய மழைநீர் வெளியேறி மோச மான விளைவுகள் ஏற்படுகின்றன. மழை வெள்ளத்தில் வீடுகள் மூழ்குகின்றன. நீர்நிலைகளுக்கு உள்ளே வீடுகள் கட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இதுபோல நீர்நிலைகளை அழிக்க அனுமதிக்க முடியாது. நீர் நிலைகளை வேறு உபயோகத் துக்கு பயன்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை.

இந்த வழக்கில், ஏரிக்குள் நீண்டகாலமாக இருப்பதாக கூறு வதற்கு ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்க படவில்லை. அப்படியே இருந் தாலும் அந்த இடத்தில் அவர்க ளுக்கு உரிமை இல்லை.ஏனென் றால் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப் படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்

Thursday, September 24, 2020

பெண்கள் பாதுகாப்புச் சட்டம்

                                                                வன்முறை

இவ்வுலகிலே சீரும், சிறப்பும் வாய்ந்தவர்கள் யாரென்று கேட்டால், அனைவருமே நம்மைப் பெற்றெடுத்த தாய்மார்களைத்தான் கூறுவோம். தாய்மை என்பது பெண்களுக்கே உரிய தனிச்சிறப்பு. மனித குலத்தின் ஆரம்பக் காலக்கட்டத்தில் சமூகத்தை வழிநடத்தியவர்கள் பெண்கள்தான். அந்த பெண்வழி சமூகத்தில்தான் இன்றைய பெண்கடவுள்கள் தோன்றின.

கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதரின் வெற்றிக்குப் பின்புலத்திலும்  பெண்ணின் பங்கு உண்டு என்பது உலகறிந்த உண்மை. சமூகத்திலே பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கு வித்திடுபவர்கள் பெண்கள் என்பதற்கு எவ்வித ஐயமுமில்லை. இவ்வாறு வளர்ச்சிப் பாதையில் சமுதாயத்தை இட்டுச் செல்லும் பெண்கள் பாதுகாப்போடு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

ஆனால், நடைமுறையில் நாம் காண்பதோ நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. சீரும், சிறப்போடும் நடத்தப்பட வேண்டிய பெண்கள் பல்வேறு வகையான வன்முறைகளுக்கு இலக்காவது கொடுமையானது. ஆணாதிக்க சமூக கட்டமைப்புகளில் சிக்கி, ஆண்களின் ஆதிக்க சூழ்ச்சிகளால் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள். இவ்வுலகிலே ஏற்படும் எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண் களும், குழந்தைகளுமே. பெண்களின் நிலையை சற்று ஆராய்ந்து பார்த்தால் எந்த அளவுக்கு அவர்கள் சமுதாயத்திலே பல வகையான வன்முறைகளால் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரியும். 15 முதல் 45 வயதான பெண்களுள் மூன்றில் ஒரு பங்கினர் ஏதாவது ஒரு வகையான வன்முறைக்கு ஆளாகுகின்றனர். ஒட்டு மொத்த பெண்களில் 35% பேர் உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர். திருமணமான பெண்களில் 46% பேர் பல்வேறு வகையான வன்முறைகளால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வைத் தொடருகின்றனர்.

                                                             ஆணாதிக்கம்

பெண்கள் கல்வி கற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும், அந்த துறைகளில் உள்ள பெண்கள் பாதுகாப்போடு பணி செய்ய முடிகிறதா என்றால்  அது ஒரு பெரிய கேள்விக்குறிதான். பெரும் பாலான துறைகள் ஆண்களால் நடத்தப் படுவதாலும் பெரும்பான்மையான உயர் அதிகாரிகள் ஆண்களாக இருப்பதாலும் பெண்கள் எவ்வளவுதான் கல்வி கற்றிருந்தவர்களாக இருந்தாலும் அந்த துறைகளில் ஆணாதிக்கத்தின் கீழ் அடிமைகளாகவே உள்ளனர்.

நகர்புறங்களில் பல கம்பெனிகளிலும், தொழிற்சாலைகளிலும், தொலைக்காட்சி நிறுவனங்களிலும், ஊடகங்களிலும் பணி புரியும் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் பல வகையான பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் கிராமப் புறங்களில் வாழும் பெண்கள் பாதுகாப்பின்றி அதிகளவில் வாழ்க்கையை தொடருகின்றனர்.

                                                     பெண்கள் பாதுகாப்புச் சட்டம்

இவ்வாறு பாதுகாப்பின்றி வாழ்க் கையைத் தொடரும் பெண்களின் வாழ்வில் பாதுகாப்பு கிடைக்குமா? என்று எத்தனையோ பெண்களும், பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஆர்வாளர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.  அவர்களின் பல ஆண்டுகள் கனவை நிறைவேற்ற பெண்கள் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது. இந்திய அரசியல்  அமைப்புச்சட்டப் பிரிவுகள் 14 மற்றும் 15 இரண்டும், எல்லா வகையான வேறுபாடுகளையும் களைந்து, சமத்துவத்தோடும் சகோதரத்துவத்தோடும் வாழ்வதற்கான உரிமையை வலியுறுத்திக் கூறுகிறது. பிரிவு 21-ல் பெண்கள் எவ்வாறு மாண்போடும், சமமான வகையில் பொது இடங்களிலும் பணியிடங்களிலும் மதித்து நடத்தப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஆனால் நடைமுறையில் நாம் காண்பதோ பெண்களின் பாதுகாப்பற்ற நிலை. இந்நிலை இந்தியாவில் மிகவும் உயர்ந்துள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாக கண்டித்து பெண்கள் பாதுகாப்பினை வலியுறுத்தியது.

1993-ல் வியான்னாவில் நடந்த ""உலக மனித உரிமை மாநாட்டில்'' பெண்களின் உரிமைகளை மீறுதல் மிகக் கொடிய மனித உரிமை மீறல் என்பதைச் சுட்டிக்காட்டப்பட்டது. 1993-லிருந்து இந்திய அரசானது பல நிலைகளில் பெண்கள் பாதுகாப்பிற்கு முயற்சிகளை எடுத்த வண்ணமாக இருக்கின்றது. இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு 2010-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ""பணி இடங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2010''. இந்திய         அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பெண்களுக்கான முழுமையான பாதுகாப்பினை வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை. இச்சட்டத்தின் முக்கிய நோக்கமே, பணி இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருவதே ஆகும். அரசின் இந்த அரிய சட்ட முயற்சி பெண்கள் முன்னேற்றத்திற்கு மிகுந்த பயனளிக்கும்.

இச்சட்டம் எல்லா இடங்களிலும் பணி செய்யும் பெண்களுக்கு பொருத்தமானதாக உள்ளது. அரசுத்துறையாகவோ, தனியார் துறையாகவோ, வேறு எந்த நிறுவனங்களாக இருந்தாலோ அங்கு பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்பட்டால் இச்சட்டம் மூலம் நீதி பெறலாம். மேலும், பாலியல் வன்முறைக் குத் தூண்டிய அதிகாரிகளையோ, ஏனைய ஆண்களையோ, சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து தண்டிக்கலாம். வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பட்டால், பெண்கள் பல பணிகளில் பங்கெடுத்து நாட்டின் ஒட்டு மொத்த சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை செய்யலாம். இந்த பாதுகாப்புச் சட்டம் "பாலியல் வன்முறை' என்றால் என்ன என்ற தெளிவான விளக்கத்தையும் வழங்குகிறது. "பெண்கள் பணி செய்ய உகந்த சூழலை ஏற்படுத்தி தராத நிலையே பாலியல் வன்முறை, என்பதை வலியுறுத்தி, அத்தகைய செயல்களை அறவே தடைசெய்ய முயற்சிக்கிறது. பலதுறைகளில் பணி செய்யும் பெண்களுக்கு மட்டுமல்ல இச்சட்டம். ஒரு நிறுவனத்திற்கு வந்துபோகும் பெண்களாக இருந்தாலும், படிக்கின்ற பெண்கள், பள்ளி, கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி செய்வோர், மருத்துவமனைகளில் நோயுற்றிருப்போர் முழுமை யான பாதுகாப்பினை வழங்க முற்படுகிறது. இச் சட்டத்தின் கீழ் ஒவ்வோர் அமைப்பிலும் உள்ளார்ந்த புகார் குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் புகார் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இச்சட்டத்திற்கு கீழ்ப்படியாத அதிகாரிகள் சிறைத் தண்டனையும், 50,000/- க்கும் அதிகமான அபராதத்தையும் சந்திக்க நேரிடும். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்த 90 நாட்களில் விசாரணையை முடித்து நடவடிக்கையை எடுக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது.  இச்சட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வருவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பு. பெண்களின் பாதுகாப்பு கருதி, அவர்களின் பணி இடங்களில் தேவையற்ற வன்முறைச் செயல்களை ஒழிக்கும் முயற்சியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இச்சட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது.

பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை மீறல்கள் அனைத்தும் மனித உரிமை மீறல்களே. அத்தகைய மனித உரிமை மீறலை செய்யும் நபர் யாராக இருந்தாலும் எந்த பதவியிலிருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கு மிகவும் உதவி செய்திடும் வகையில் இச்சட்டம் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. சரியான வகைகளில் தாமதமின்றி இச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால், கண்டிப்பாக தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். நாட்டின் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமெனில் வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளில் பிணைவிடா குற்றம் – பிணைவிடு குற்றம் எவை?

பகுதி 5 உடந்தையாய் இருத்தல் பற்றி (107 – 120)

பிணை விடா குற்றம் 115, 118, 119 (குற்றம் முடிவுறாதிருத்தல் பிணைவிடு குற்றமாகும்) குற்றச் செயலைப் பொருத்து உடந்தையாய் இருப்பவர் பிணைவிடு – விடாக்குற்றம் என முடிவு செய்யப்படும் பிரிவுகள் 109 -114, 117, 119,120

பிடியாணை வேண்டும் குற்றமா – வேண்டாகுற்றமா என குற்றச் செயல் எதுவோ அதைப் பொருத்து அமையும்.

பகுதி 5 அ. குற்றமுறுசதி (120 அ, 120 ஆ)

பிணைவிடு – விடா குற்றமா, பிடியாணை வேண்டும் – வேண்டா குற்றமா என குற்றச் செயலைப் பொருத்தே அமையும்.

பகுதி 6 அரசுக்கு எதிரான குற்றங்கள் (121 – 130)

பிணைவிடு குற்றம் – 129 பிணைவிடா குற்றம் 121 -128, 130 இதில் அனைத்துப் பிரிவுகளும் பிடியாணை வேண்டாக் குற்றமாகும்.

பகுதி 7 தரைப் படை – கடற்படை – வான் படை சம்பந்தமான குற்றங்கள் (131 – 140)

பிணைவிடுகுற்றம் : 135 – 138, 140 பிணைவிடா குற்றம் 131 – 134 பிடியாணை வேண்டும் குற்றம் 137 (மற்ற பிரிவுகள் பிடியாணை வேண்டா குற்றங்கள்)

பகுதி 8 பொது அமைதிக்கு விரோதமான குற்றங்கள் (141 – 160)

பிணைவிடு குற்றம் – 143-145, 147, 148, 151-158, 160

விடாகுற்றம் : 153 அ, 153 அஅ, 153ஆ (பிரிவு 149, 150 குற்றச் செயலை பொருத்து அமையும்)

பிடியாணை வேண்டும் குற்றம் 154 – 156 (மற்ற பிரிவுகள் பிடியாணை வேண்டாக் குற்றமாகும்)

பகுதி 9 பொது ஊழியரால் செய்யப்படும் அல்லது அவர் சம்பந்தமான குற்றங்கள் பற்றி (161 – 171)

பிணைவிடு குற்றம் 166 – 169, 171 பிணைவிடா குற்றம் 161 – 165அ, 170 பிடியாணை வேண்டாக் குற்றம் 166, 168 (மற்ற பிரிவுகள் பிடியாணை வேண்டா குற்றம்)

பகுதி – அ தேர்தல்கள் தொடர்பான குற்றங்கள் பற்றி (171அ – 171ஐ)

பிணைவிடுகுற்றம் : அனைத்துப் பிரிவுகளும் (171உ – 171ஐ)

பிடியாணை வேண்டா குற்றம் 171 ஊ, மற்றவை பிடியாணை வேண்டும் குற்றமாகும்)

பகுதி 10 பொது ஊழியர்களின் சட்ட பூர்வமான அதிகாரத்தை அவமதித்தல் பற்றி (171 – 190)

பிணைவிடு குற்றம் 172 – 190

பிணை விடாகுற்றம் : 174 அ

பிடியாணை வேண்டும் குற்றம் 172 – 187, 189, 190 வேண்டாக்குற்றம் 174அ, 188

பகுதி 11 பொய் சாட்சியமும் பொது நீதிக்கு எதிரான குற்றங்களும் (191 – 229)

பிணைவிடு 193, 195, 197-221, 223,224, 225அ, ஆ, 228

பிணைவிடா : 194, 195அ, 222, 225, 227

பிடியாணை வேண்டும் குற்றம் : 193-221, 224, 217, 219, 220,223,225அ, 228 (மற்றவை பிடியாணை வேண்டாகுற்றம்)

பகுதி 12 நாணயம் மற்றும் அரசு முத்திரைகள் தொடர்பான குற்றங்கள் : (230-263அ)

பிணைவிடு : 259-263அ, பிணைவிடா குற்றம் : 231-258

பிடியாணை வேண்டாகுற்றம் அனைத்துப் பிரிவுகளும்

பகுதி 13 எடைகள் அளவைகள் தொடர்பான குற்றங்கள் (264-267)

பிணைவிடுகுற்றம் : 264-266, பிணைவிடா குற்றம் 267

பிடியாணை வேண்டும் 264-266, வேண்டா குற்றம் 267

பகுதி 14 பொது மக்களின் சுகாதாரம், பாதுக்காப்பு, வசதி. பண்பு நலன் மற்றும் ஒழுக்கம் இவற்றபப் பாதிக்கின்ற குற்றங்கள் (268-294 9(அ)


பிணைவிடு : அனைத்துப் பிரிவுகளும்

பிடியாணை வேண்டும் குற்றம் : 271-276, 278, 287, 288, 290, 292அ-294அ (மற்ற பிரிவுகள் பிடியாணை வேண்டாகுற்றம்)

பகுதி 15 – மதம் தொடர்பான குற்றங்கள் (295-298)

பிணைவிடு : 296, பிணைவிடா குற்றம் : 295, 295அ, 297, 298

பிடியாணை வேண்டும் குற்றம் : 298 (மற்ற பிரிவுகள் பிடியாணை வேண்டாக்குற்றம்)

பகுதி 16 மனித உடலை பாதிக்கும் குற்றங்கள் பற்றி ( 299-377)

உயிரை பாதிக்கும் குற்றங்கள் – 299-311

பிணைவிடு : 304அ, 309, பிணைவிடா குற்றம் : 302-304, 304ஆ, 305-308, 311

அனைத்துப் பிரிவுகளும் பிடியாணை வேண்டாக் குற்றம்

கருச்சிதைவித்தல், பிறக்காத குழந்தைகளுக்குக் கேடு செய்தல், கைக்குழந்தைகளை பாதுகாப்பு இன்றி விடுதல், பிறப்பை மறைத்தல் (312 – 318)

பிணைவிடு : 312, 317, பிணைவிடா குற்றம் : 313-316, 318

பிடியாணை வேண்டும் குற்றம் – 312 (மற்றவை பிடி கட்டளை வேண்டாக்குற்றம்)

காயம் ஏற்படுத்தல் பற்றி (319-338)

பிணைவிடு : 318, 323, 325, 330, 334-338

பிணைவிடா : 324, 326-329, 331-333

பிடியாணை வேண்டும் குற்றம் : 323, 334 (மற்ற பிரிவுகள் பிடியாணை வேண்டா குற்றம்)

சட்ட விரோதமாக தடுத்துவைப்பதும் அடைத்து வைத்தலும் (339-348)

பிணைவிடு : 314 – 348 (அனைத்துப் பிரிவுகளும்)

அனைத்து பிரிவுகளும் பிடிகட்டளை வேண்டாக்குற்றம்

குற்றமுறு வன்முறையும் தாக்குதலும் (349-358)

பிணைவிடு அனைத்துப் பிரிவுகளும்

பிடிகட்டளை வேண்டும் குற்றம் 352, 355, 358 (மற்றவை வேண்டாக்குற்றம்)

பிள்ளை பிடித்தல், ஆட்கடத்தல், அடிமை நிலை மற்றும் கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல் (359-374)

பிணைவிடு : 363, 370, 374

பிணைவிடா : 363ஹ - 369, 371-373

பிடிக்கட்டளை வேண்டும் குற்றம் 370 (மற்ற பிரிவுகள் பிடிக்கட்டளை வேண்டாக்குற்றம்)

வன்புணர்ச்சி பற்றி (375-376) இயற்கைக்கு மாறான குற்றங்கள் 377

பிணைவிடுக்குற்றம் 376அ – 376ஈ பிணைவிடாக்குற்றம் 367, 377

சொத்து தொடர்பான குற்றங்கள் – திருட்டு பற்றி (378 – 389) பிணைவிடுக்குற்றம் – 385, 388, 389 பிணைவிடா குற்றம் 379 – 384, 386, 387

அனைத்துப் பிரிவுகளும் பிடிகட்டளை வேண்டாக்குற்றம்.

கொள்கையும் கூட்டுக் கொள்ளையும் பற்றி (390-402)

அனைத்துப் பிரிவுகளும் பிணைவிடா குற்றம் – பிடிகட்டளை வேண்டாக்குற்றம்

குற்றமுறு சொத்துக் கையாடல் (403, 404) குற்றமுறு நம்பிக்கை மோசடி (405-409)

பிணைவிடுக்குற்றம் : 403-405, பிணைவிடா குற்றம் – 406-409

பிடிகட்டளை வேண்டும் குற்றம : 403-405, வேண்டாகுற்றம் 406-409.

திருட்டு சொத்தை பெற்றுக் கொள்ளுதல் (410-414) ஏமாற்றுதல் 415-420)

பிணைவிடுக்குற்றம் – 417-419, பிணைவிடாக்குற்றம் 411-414, 420

பிடிக்கட்டளை வேண்டும் குற்றம் 417, 418 (மற்றவை பிடிகட்டளை வேண்டாகுற்றம்)

மோசடியான சொத்து விற்பனை – சொத்துக்கு தீங்கு (412-440)

பிணைவிடுக்குற்றம் – 421 – 435, 440 பிணைவிடாக்குற்றம் 436-439

பிடிக்கட்டளை வேண்டும் குற்றம் 421 – 427, 434

குற்றமுறு அத்துமீறல் (441-462)

பிணைவிடுக்குற்றம் – 447-448, 451, 462

 பிணைவிடாக்குற்றம் 449, 450, 452-461 (451 இன்படி திருட்டாக இருத்தல்)

அனைத்துப் பிரிவுகளும் பிடிக்கட்டளை வேண்டாக்குற்றம்.

சொத்து ஆவணங்கள், அடையாளக் குறிகள் தொடர்பான குற்றங்கள் (463-477அ)

பிணைவிடுக்குற்றம் – 465, 469-477அ

பிணைவிடாக்குற்றம் 466-468, 476, 477

சொத்தையும் மற்ற அடையாளக்குறிகள் பற்றி (478-489) நாணயம் வங்கித்தாள் பற்றிய குற்றம் 489 அ-உ)

பிணைவிடுக்குற்றம் – 482-489, 489 இ,உ

 பிணைவிடாக்குற்றம் 489 அ, ஆ, ஈ

பிடிக்கட்டளை வேண்டும் குற்றம் 482-489, 489உ

குற்றமுறு ஊதிய ஒப்பந்த மீறுதல் (491) மணவாழ்க்கை தொடர்பான குற்றங்கள் (493-498) பெண்ணைக் கணவர் குடும்பத்தார் கொடுமைப்படுத்தல் 498அ

பிணைவிடுகுற்றம் 491-494-498

பிணைவிடாகுற்றம் 491-498, கு.பி.அ. வேண்டாகுற்றம் 498அ

அவதூறு (499-502) குற்றமுறு மிரட்டல், அவமதித்தல், தொந்தரவு செய்தல் பற்றி (503-510) குற்றங்கள் செய்ய முயற்சி (511)

பிணைவிடுகுற்றம் 500-504, 506-510

பிணைவிடாக்குற்றம் : 505 (511 குற்றத்தைப் பொறுத்து மாறுபடும்)

பிடிகட்டளை வேண்டும் குற்றம் 509-505, 511 ஆகியவை குற்றங்களைப் பொறுத்து)

இந்திய தண்டனைச் சட்டத்தைத் தவிர மற்ற சட்டங்களைப் பொருத்தவரை நடைமுறை : 3 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை (அ) தண்டனைத் தொகை, வழங்கக் கூடிய குற்றம் எனில் அது பிணைவிடு குற்றமாகவும் பிடிக்கட்டளை வேண்டும் குற்றமாகவும் கொள்ளப்படும்

 

ஜாமீன் கையெழுத்து போட்டுக் கொடுப்பவர்கள்?

ஜாமீன் கொடுத்தவரின் கடமைகளும் உரிமைகளும்:
---------------------------------------------------------------------------
கடனுக்கு உத்தரவாதம் கொடுப்பது என்பது என்றுமே பிரச்சினை தான். கடன் வாங்கியவர் நிம்மதியாக இருந்து கொள்வார். ஆனால் உத்தரவாதம் கொடுப்பவர் நிம்மதி இல்லாமல் தவிப்பார். இந்த மாதிரி சம்பவங்களை நீங்கள் அனைவரும் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். அவ்வாறு ஜாமீன் கையெழுத்து போட்டு நஷ்டப்படுபவர்கள் தாங்கள் யாருக்காக உத்தரவாதம் கொடுக்கிறார்களோ அவர்களை பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல், ஜாமீன் (ஷூரிட்டி) போட்டுக் கொடுப்பதிலிருந்து ஏற்படும் பிரச்சினை தான் இதற்கெல்லாம் காரணம்.

ஜாமீன் கையெழுத்து போட்டுக் கொடுப்பவர்கள் சட்டப்படி தங்கள் உரிமை மற்றும் கடமைகள் என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து தப்ப முடியும்.

இது எந்த சட்டத்தில் வருகிறது

இந்திய ஒப்பந்தச் சட்டம் (Indian Contract Act), 1872 ன் 8 ஆம் பகுதி தான் இண்டெம்னிடி அண்ட் கியாரண்டி (Indemnity and Gyranty) எனப்படும் இழப்பு, எதிர்காப்பு மற்றும் உத்தரவாதம் ஆகும். இந்த சட்டத்தின் 124 முதல் 147 வரையிலான பிரிவுகள் ஷூரிட்டி பற்றி கூறுகிறது.

ஜாமீன் (ஷூரிட்டி) என்றால்

ஜாமீன் (ஷூரிட்டி) என்றால் உத்தரவாதம் கொடுப்பவர் அல்லது உத்தரவாதி என்று பொருள். உதாரணமாக A என்ற நபர் B என்ற நபருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அல்லது B க்கு செய்வதாக ஒப்புக்கொண்ட ஒரு செயலை கொடுக்கவோ அல்லது செய்யவோ தவறினால், தாம் பொறுப்பு ஏற்பதாக இவர்கள் இருவரும் அல்லாத 3வது நபரான C என்பவர் கூறுவதைத்தான் உத்தரவாதம் என்கிறோம். அவ்வாறு உத்தரவாதம் கொடுப்பவர் தான் ஜாமீன் (ஷூரிட்டி) என்னும் உத்தரவாதி ஆவார்.

ஒருவருக்கு மற்றவர் உத்தரவாதம் கொடுப்பது என்பது முதல் நபர் கடன் வாங்கும் போது மட்டுமல்ல. அவர் ஏதேனும் வழக்கில் சிக்கி அவர் மீது கைது வாரண்ட் இருக்கும் போதோ அல்லது அவர் முன்ஜாமீன் கேட்கும் போதோ, அவருக்கு வேறு நபர் உத்தரவாதம் கொடுக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

கடன் கொடுத்தவர், பெற்றவர், உத்தரவாதம் கொடுத்தவர் :

சாதாரண புரோநோட் கடன் அல்லது அடமானக் கடனாக இருந்தால் கடன் கொடுத்தவர், கடன் பெற்றவர் என இரண்டு பேர் மட்டுமே இருப்பார்கள். ஆனால் Indemnity ல் ஒரு நபர், புரோநோட்டோ அல்லது அடமானப் பத்திரமோ வாங்கிக் கொண்டு, வேறொரு நபருக்கு கடன் கொடுக்கும் போது, அந்த கடனை பெற்றவர் அதனை திருப்பி தருவதற்கு 3வது நபர் உத்தரவாதம் கொடுப்பதால், இங்கு கிரெடிட்டார் என்ற கடன் கொடுத்தவர், பிரின்ஸ்பல் டெப்டார் (Principal Debtor) என்னும் கடன் வாங்கியவர் மற்றும் ஜாமீன் (ஷூரிட்டி) என்ற உத்தரவாதி ஆகிய மூன்று பேர் இருப்பார்கள்.

உத்தரவாதியின் நிலை :

மேலே கூறப்பட்டுள்ள மூன்று பேரில் 3வது நபரான உத்தரவாதிக்கு சற்று சங்கடமான நிலை தான். கடன் கொடுத்தவர், கடனை கொடுக்கும் முன்பாக போதிய பாதுகாப்பு (Security) பெற்றுக் கொண்டு தான் கொடுக்கிறார். கடன் பெற்றவர் திருப்பிக் கொடுக்காவிட்டால், உத்தரவாதியிடம் இருந்து வசூலித்து விடுகிறார். கடன் பெற்றவர் முடிந்தால் திருப்பிக் கொடுக்கிறார். இல்லாவிட்டால் அவருக்கு பதில் உத்தரவாதம் கொடுத்தவர் தான் கொடுப்பார். இந்த நடவடிக்கையால் எந்தவித பிரதிபலனும் பெறாத உத்தரவாதி தான் யாருக்காக உத்தரவாதம் கொடுத்தாரோ, அந்த நண்பர் அல்லது உறவினர் திருப்பிச் செலுத்தாத கடனுக்காக தன் பணத்தை அல்லது சொத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

மூன்று வகையான  உரிமைகள் :

1. முக்கிய கடனாளிக்கு எதிரான உரிமைகள்

2. கடன் கொடுத்தவருக்கு எதிரான உரிமைகள்

3. இதர இணை உத்தரவாதிகளுக்கு எதிரான உரிமைகள்

என உத்தரவாதியின் உரிமைகளை மூன்று வகைகளை பிரிக்கலாம்.

1. முக்கிய கடனாளிக்கு எதிரான உத்தரவாதியின் உரிமைகள் :

A. அறிவிப்பு கொடுக்கும் உரிமை
கடன் கொடுத்தவர் உத்தரவாதியிடம் பணம் கேட்டு வந்தால், அந்தக் கடனை உடனடியாக தீர்க்கும்படி முக்கிய கடனாளிக்கு அறிவிப்பு அனுப்ப உத்தரவாதிக்கு உரிமை உண்டு.

B. பற்று உரிமை மாற்றுதல் :
                              கடன் கொடுத்தவருக்கு கொடுக்கப்பட வேண்டிய தொகை முழுவதையும் செலுத்தி, கடனாளியின் பொறுப்பு முழுவதையும் தீர்த்த பிறகு, கடன் கொடுத்தவருக்கு உள்ள உரிமைகள் முழுவதும் உத்தரவாதிக்கு வந்துவிடும். இதுதான் பற்று உரிமை மாற்றுதல் எனப்படும் சப்ரோகேஷன் எனப்படும். (பிரிவு 140)

C. பத்திரங்கள் மீது உரிமை :
                        உத்தரவாதி பணம் முழுவதையும் செலுத்திய பிறகு முக்கிய கடனாளியின் பத்திரங்கள் மீது கடன் கொடுத்தவர் போல் நடவடிக்கை எடுக்கலாம். (பிரிவு 141)

D. இழப்பு எதிர்காப்பு உரிமை :
முக்கிய கடனாளி சார்பாக உத்தரவாதி செலுத்திய தொகை முழுமைக்கும் இழப்பு எதிர்காப்பு எனப்படும் Indemnity உரிமை அவருக்கு உண்டு. (பிரிவு 149)

E. கடனாளியை கட்டாயப்படுத்தும் உரிமை :
உத்தரவாதி, கடனாளி சார்பாக பணம் செலுத்துவதற்கு முன்பாக கடனாளியிடம் (அந்த கடன் தீர்க்கப்படாமல் இருந்தால்) தன்னை, கடனைத் தீர்க்கும் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கேட்கலாம்.

2. கடன் கொடுத்தவருக்கு எதிரான உத்தரவாதியின் உரிமைகள் :

A. பத்திரங்களை தன்வசம் ஒப்படைக்க கோருதல் :
கடனாளிக்கு பதிலாக உத்தரவாதி பணத்தை செலுத்தி கடனை தீர்த்திருந்தால், கடன் கொடுத்தவரிடம் இருக்கும் கடனாளியின் பத்திரங்களை தன்வசம் ஒப்படைக்க கோரலாம்.

B. #பத்திரங்களை விற்கச் சொல்லுதல் :
தான் வாங்கிய கடனுக்கு ஆதாரமாக கடனாளி, கடன் கொடுத்தவரிடம் கொடுத்திருந்த பத்திரங்களை விற்று, அந்த தொகையிலிருந்து அவருக்கு வரவேண்டிய கடன் தொகையை எடுத்துக் கொள்ளச் சொல்லி கடன் கொடுத்தவரிடம் கேட்கும் உரிமை உத்தரவாதிக்கு உள்ளது.

C.  கடனாளி  மீது  சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க கோருதல் :

தன்னிடம் பணம் கேட்டு கடன் கொடுத்தவர் வரும் போது, கடன் தொகையை வசூல் செய்ய கடனாளி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்க உத்தரவாதிக்கு உரிமை உண்டு.

3. இணை உத்தரவாதிகளுக்கு எதிராக
உத்தரவாதியின் உரிமை :

முக்கிய கடனாளி தன் கடனை தீர்க்காமல் இருந்துவிடும் பட்சத்தில், உத்தரவாதி அக்கடனை தீர்க்க வேண்டியது வரும். அந்த நேரங்களில் உத்தரவாதி இதர இணை உத்தரவாதிகளையும் அதில் பங்கு பெறுமாறு கேட்கலாம். அப்போது உத்தரவாதி மற்றும் இதர இணை உத்தரவாதிகள் எல்லோரும் சமமாக கடன்தாரருக்கு கொடுக்கப்படும் தொகையில் பங்கு பெற வேண்டும். அவ்வாறு எல்லா உத்தரவாதிகளும் சேர்ந்து கடனாளியின் கடன் முழுவதையும் தீர்த்த பிறகு, கடன் கொடுத்தவர் வசம் இருக்கும் கடனாளியின் பத்திரங்களில் அவரவர்களுக்கு உரிமை வந்துவிடுகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் அதில் அவரவர்களுக்குரிய பங்கினை பெறலாம்.

உத்தரவாதத்திலிருந்து வெளியேறுதல் :

இந்திய ஒப்பந்தச் சட்டம் பிரிவு 130,131 மற்றும் 133 ல் எந்தெந்த சூழ்நிலையில் உத்தரவாதி தான் கொடுத்த உத்தரவாதத்திலிருந்து வெளியேறலாம் என்று கூறுகிறது.

பிரிவு - 130 - உத்தரவாதத்தை திரும்ப பெறும் அறிவிப்பு கொடுப்பதன் மூலம்

பிரிவு - 131- உத்தரவாதி இறந்து விட்டால்

பிரிவு - 133- ஒப்பந்த விதிமுறைகளில் மாறுபாடுகள் ஏற்படும் போது

Tuesday, March 13, 2018

தவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது?

ஆன்லைன் மூலம், பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்கு அனுப்பும்போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒரே ஒரு எண் மாறினால்கூட சரியான நபருக்குப் போய்ச் சேரவேண்டிய பணம் எங்கோ இருக்கும் தவறான நபருக்குப் போய்ச் சேர்ந்துவிடும். இப்படி தவறான நபருக்கு நாம் பணத்தை

அனுப்பிவிட்டால், அந்தப் பணத்தை எப்படித் திரும்பப் பெறுவது..?
அந்தச் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்விகள் முக்கியமானவை. இந்தக் கேள்விகளுக்கான பதிலை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைமை மேலாளர் (ஓய்வு) ஷியாம் மனோகர் ஸ்ரீவத்சவாவிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைப்படி, பணப்பரிமாற்றம் செய்யும்போது சரியான பயனாளியின் கணக்கு எண் மற்றும் விவரங்களைக் கொடுப்பதற்கான முழுப்பொறுப்பும் பணம் செலுத்துபவரையே சாரும். பணப்பரிமாற்றத்தில் தவறான அக்கவுன்டுக்குப் பணம் சென்றடைவது போன்ற தவறுகளுக்குப் பணம் செலுத்துபவரே பொறுப்பாளியாக வேண்டும். குறிப்பிட்ட வங்கியோ அல்லது பணம் தவறுதலாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள கணக்குக்கு உரியவரோ எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

ஆன்லைன் பணப்பரிமாற்றங்களில் தவறான கணக்குக்குப் பணம் செலுத்தப்பட்டால், அந்த எண்ணில் யாருக்கும் வங்கிக் கணக்கு இல்லையெனில் தானாகவே பணம், செலுத்தியவரின் வங்கிக் கணக்குக்கே திரும்ப வந்துவிடும். எனவே, இத்தகைய தவறுகளால் எந்தச் சிக்கலும் ஏற்படாது.

ஒருவேளை அந்த எண்ணில் வேறு யாருக்கேனும் வங்கிக் கணக்கு இருக்கும்பட்சத்தில், அந்தப் பணத்தை அந்த அக்கவுன்டுக்கு உரியவரின் அனுமதியின்றி திரும்ப எடுக்க இயலாது.
இப்படித் தவறுதலாக இன்னொருவரின் அக்கவுன்டிற்குப் பணத்தைச் செலுத்தியது தெரிய வந்தால், பணம் செலுத்தியவர், உடனடியாக வங்கியை அணுகிப் பணத்தைத் தவறுதலாகச் செலுத்தியதற்கான ஆதாரங்களைக் கொடுத்தால், செலுத்தப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சியில் வங்கிக் கிளை ஈடுபடும்.

அதன்படி, எந்த வங்கி அக்கவுன்டிற்குத் தவறுதலாகப் பணம் செலுத்தப்பட்டதோ, அந்த வங்கிக்கு, நடந்த தவறுகள் குறித்த விவரங்களை அளித்துப் பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.

இந்தப் பணப் பரிமாற்றச் சிக்கலில் வங்கியானது, பணத்தை இழந்தவருக்கு, பணத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கு நிர்வாக ரீதியான பக்கபலமாக மட்டுமே செயல்படும்.
எந்த வங்கிக்குப் பணம் மாற்றப் பட்டுள்ளது, அந்த அக்கவுன்டுக்கு உரியவரின் தொடர்பு எண் போன்ற விவரங்களைப் பெற்றுத் தருவதற்கு முயற்சியெடுக்கும்.பணத்தைத் திரும்ப அளிப்பதற்கு அந்த நபர் ஒப்புக்கொண்டால், அதற்கான விண்ணப்பத்தை முறையாக அளித்துப்  பெற்றுத் தரவும் வங்கி உதவும்.
அதேபோல, பணம் தவறுதலாக மாற்றப்பட்ட அக்கவுன்டில், அந்த நபர் பணத்தை எடுக்க இயலாதபடி தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தவும் இயலும். அதன்பின் பணப்பரிமாற்றத் தவறு குறித்து எடுத்துச்சொல்லி, உரியவருக்குப் பணத்தைத் திருப்பியளிக்க ஒப்புக்கொண்டபின் தடை நீக்கப்படலாம்.

சிலநேரம் தனது அக்கவுன்டில் கூடுதலாகப் பணம் இருப்பதைக்கூடக் கவனிக்காமல் அவசரத் தேவைக்காக அந்தப் பணத்தைச் செலவழிக்கவும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும்.  அப்படி நடக்கும்பட்சத்தில் திரும்பவும் அந்தத் தொகையை, அந்த அக்கவுன்டில் நிரப்பும் வரை சற்றுப் பொறுத்திருக்கத்தான் வேண்டும். உடனே பணத்தைத் திரும்பத் தரவேண்டுமென அவரைக் கட்டாயப்படுத்த இயலாது. அவரவர் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்து, காலதாமதம் ஆகலாம்.

உதாரணமாக, ஒருவரின் அக்கவுன்டில் ஒரு லட்சம் ரூபாய் வரை தவறுதலாக வந்து சேர்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த அக்கவுன்டுக்கு உரியவருக்குப் பண நெருக்கடி இருந்து, அந்தத் தொகையை எடுத்துச் செலவழித்திருப்பாராயின், மீண்டும் அந்த ஒரு லட்சம் ரூபாயை அவர் திரும்பச் செலுத்தும்வரை காத்திருக்க வேண்டும். இன்னும் இரண்டு நாளில் பணத்தைப் போட வேண்டுமென்று கெடுவெல்லாம் விதிக்க முடியாது.

அதேபோல, அந்தப் பணத்தைத் திரும்ப அளிக்க மறுப்புத் தெரிவித்தால், அவர்மீது வங்கி, நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. ஏனெனில் முதல் தவறு, பணப் பரிமாற்றம் செய்தவருடையது. எனவே, கடுமை காட்டாமல் பக்குவமாக அந்தப் பணத்தைத் திரும்பப் பெற முயற்சி எடுக்க வேண்டும். இதில், பணத்தைப் பெற்றவர், அந்தப் பணத்தைத் தரவே முடியாதென முரண்டு பிடித்தால் மட்டும், சட்டப்படியான மேல் நடவடிக்கையில் இறங்கிப் பணத்தை மீட்டெடுக்க வேண்டும்
.
இதேபோல, உங்களுடைய வங்கிக் கணக்குக்கு வேறு யாருடைய வங்கிக் கணக்கிலிருந்தோ பணம் மாறி வந்திருப்பதாகத் தெரிந்தால், உடனே அதுகுறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தையோ அல்லது வங்கிக் கிளையையோ அணுகி, விவரத்தைத் தெரிவிக்க வேண்டும். அப்படித் தவறுதலாகப் பணம் வந்திருப்பது உறுதியானால், உரியவருக்குத் திருப்பிச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி வங்கியிடம் தெரிவிக்க வேண்டும். நேர்மையான அணுகுமுறை இரு தரப்பிலும் இருக்குமென்றால், இத்தகைய பணப் பரிமாற்றத் தவறுகளைத் தீர்ப்பது எளிது.

பணம் தவறுதலாக இன்னொரு அக்கவுன்டுக்குச் செல்லாமல் பணப் பரிமாற்றம் செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் சிலவற்றைப் பார்ப்போம். முதலில் ஆன்லைனில் பணப் பரிமாற்றம் செய்யும்முன்பு, எந்த அக்கவுன்டிற்கு பரிமாற்றம் செய்கிறோமோ, அந்த அக்கவுன்ட் விவரங்களை ஆன்லைனில் ஏற்றி சேமித்துவிட வேண்டும்.

இப்படிச் சேமித்துவிடுவதால், தவறான எண்ணுக்கு அனுப்பும் சூழ்நிலை ஏற்படாது. அதேபோல, இணைய மையங்களிலிருக்கும் கணினிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கணினிகளில் வைரஸ் பாதிப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படியிருந்தால்தான் ஹேக்கர்கள் சிக்கல் இருக்காது” என்றார் அவர்.

ஆன்லைன் பணப் பரிமாற்றம் என்பது இன்றைக்கு எல்லோரும் பின்பற்றும் வழிமுறையாக மாறிவிட்டது. பணத்தை மிக வேகமாகவும், குறைந்த செலவிலும் அனுப்ப இதுதான் மிகச் சிறந்த வழி. எனவே, கொஞ்சம் ஜாக்கிரதையாக இதைச் செய்தால், பாதுகாப்பாகப் பணத்தை அனுப்பி, நம்மால் நிம்மதியாக இருக்க முடியும்

ATM / BANK சம்பந்தமான Online புகார்

இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

அப்படியொரு சுவாரசியமான செய்தி தான்  சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.

அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.

உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.

வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.

இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.

சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10-ம் தேதி,மே 10-ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28-ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.

அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.

அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.

அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக

https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html

ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.

மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.

பின்னர் ஜூன் 18-ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.

அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.

மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .

இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }
"https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.

நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.

மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.

எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும். இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை.

PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html.


ஒரே சொத்தை இருவருக்கு விற்றால் அந்த சொத்தை எப்படி மீட்பது?

======================================
 தான் சம்பாதித்த‍ பணத்தில் சிறுகச் சிறுக சேமித்து ஒரு சொத்தை வாங்குகிறோம். அப்படி வாங்கும் சொத்தை விற்பவர் இன்னொருவ ருக்கும் போலியான ஆவணம் தயார் செய்து விற்றிருந்தால் அது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும்.

அப்படித ஒரே சொத்தை (#One_Property) இருவருக்கு விற்பது (Two Buyers) சட்டப்படி குற்றம் (#CriminalOffence)ஆகும். அவ்வாறு ஒருவர் விற்பனை செய்திருந்தால் இரண்டாவதாக செய்த விற்பனை செல்லாது. இ ருந்தாலும், அந்த சொத்தை முதலாவதாக வாங்கியவர் சட்டப்படி சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
 
1. கிரிமினல் வழக்கு :
--------------------------------
நேரடியாக, போலிஸ் புகார் கொடுத்து, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வைக்கலாம். அப்போது, மோசடி செய்தவர், முன் ஜாமீன் அல்லது ஜாமீன் போடும்போது, போலிஸ் உதவியுடன், அவர் எந்த நீதிமன்றத்தில் மனு போட்டுல்லாரோ, அங்கு, ஒரு வழக்கறிஞர் வைத்து, intervene மனு செய்யலாம். அப்படி செய்யும்போது, மோசடி பத்திரத்தை ரத்து செய்ய வலியுறுத்தலாம். அப்போது, பிணை கிடைக்க, மோசடி பத்திரத்தை ரத்து செய்ய நீதிமன்றம் ஆணையிடும்போது, அங்கேயே அலைச்சல் இல்லாமல், பிரச்சினை முடிய வாய்ப்பு உள்ளது.

2. பத்திரத்துறையில், மாவட்ட பதிவாளர் மூலம் ரத்து செய்ய மனு கொடுப்பது.
அந்த இரண்டாவது பத்திரத்தை முறைப்படி ரத்து செய்ய என்ன செய்ய வேண்டும்?
============================================
இரண்டாவதாக பதிவுசெய்யப்பட்டுள்ள பத்திரத்தின் பதிவுகளை ரத்துசெய்யக்கோரி, பதிவுச்சட்டம் 1908பிரிவு 82ன்கீழ் பதிவுத்துறை த் தலைவர் அவர்களுக்கு முதலில் உரிய ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பதிவுத்துறைத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி தங்களின் விண்ணப்பமானது தங்களது மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அனுப்பப்படும்.

மாவட்டப் பதிவாளர் அவர்கள், சமபந்தப்பட்ட இரண்டு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு ஆவணங்களை ஆய்வுசெய்வார்

உங்களது புகாரில் உண்மை இருப்பது மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களுக்கு தெரியவந்தால், இரண்டாவதாக பதிவு செய்யப்பட்ட பத்தி ரஙளை ரத்துசெய்ய சார்பதிவாளர் அவர்களுக்கு உத்தரவிடுவார்.

பதிவுச்சட்டம், 1908-பிரிவு 83ன்கீழ் சட்டத்திற்கு புறம்பாக இரண்டு நபர்களுக்கு ஒரே சொத்தை விற்பனை செய்த நபர் மீது, காவல்நி லையத்தில் புகார் அளித்து சட்டப்ப டியான நடவடிக்கை எடுக்கவும் சார்பதிவாளர் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.

3. சிவில் வழக்கு :
--------------------------
இது போக, இரண்டாவது பத்திரம் பதிந்து மூன்று வருடத்திற்குள் இருந்தால், சிவில் வழக்கு போடலாம். நீதிமன்ற கட்டணம் நூறு ரூபாய்க்குள்தான் வரும். சம்பந்தம் இல்லாமல், நம் சொத்தை, வேறு நபர்கள் விற்கும்போது, மார்க்கெட் மதிப்புக்கு, நீதிமன்ற கட்டணம் செலுத்த தேவை இல்லை. மோசடி கிரைய பத்திரம் செல்லாது என்று விளம்புகை பரிகாரம் கேட்கலாம்.