Showing posts with label General topic. Show all posts
Showing posts with label General topic. Show all posts

Thursday, September 24, 2020

ஜாமீன் கையெழுத்து போட்டுக் கொடுப்பவர்கள்?

ஜாமீன் கொடுத்தவரின் கடமைகளும் உரிமைகளும்:
---------------------------------------------------------------------------
கடனுக்கு உத்தரவாதம் கொடுப்பது என்பது என்றுமே பிரச்சினை தான். கடன் வாங்கியவர் நிம்மதியாக இருந்து கொள்வார். ஆனால் உத்தரவாதம் கொடுப்பவர் நிம்மதி இல்லாமல் தவிப்பார். இந்த மாதிரி சம்பவங்களை நீங்கள் அனைவரும் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். அவ்வாறு ஜாமீன் கையெழுத்து போட்டு நஷ்டப்படுபவர்கள் தாங்கள் யாருக்காக உத்தரவாதம் கொடுக்கிறார்களோ அவர்களை பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல், ஜாமீன் (ஷூரிட்டி) போட்டுக் கொடுப்பதிலிருந்து ஏற்படும் பிரச்சினை தான் இதற்கெல்லாம் காரணம்.

ஜாமீன் கையெழுத்து போட்டுக் கொடுப்பவர்கள் சட்டப்படி தங்கள் உரிமை மற்றும் கடமைகள் என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து தப்ப முடியும்.

இது எந்த சட்டத்தில் வருகிறது

இந்திய ஒப்பந்தச் சட்டம் (Indian Contract Act), 1872 ன் 8 ஆம் பகுதி தான் இண்டெம்னிடி அண்ட் கியாரண்டி (Indemnity and Gyranty) எனப்படும் இழப்பு, எதிர்காப்பு மற்றும் உத்தரவாதம் ஆகும். இந்த சட்டத்தின் 124 முதல் 147 வரையிலான பிரிவுகள் ஷூரிட்டி பற்றி கூறுகிறது.

ஜாமீன் (ஷூரிட்டி) என்றால்

ஜாமீன் (ஷூரிட்டி) என்றால் உத்தரவாதம் கொடுப்பவர் அல்லது உத்தரவாதி என்று பொருள். உதாரணமாக A என்ற நபர் B என்ற நபருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அல்லது B க்கு செய்வதாக ஒப்புக்கொண்ட ஒரு செயலை கொடுக்கவோ அல்லது செய்யவோ தவறினால், தாம் பொறுப்பு ஏற்பதாக இவர்கள் இருவரும் அல்லாத 3வது நபரான C என்பவர் கூறுவதைத்தான் உத்தரவாதம் என்கிறோம். அவ்வாறு உத்தரவாதம் கொடுப்பவர் தான் ஜாமீன் (ஷூரிட்டி) என்னும் உத்தரவாதி ஆவார்.

ஒருவருக்கு மற்றவர் உத்தரவாதம் கொடுப்பது என்பது முதல் நபர் கடன் வாங்கும் போது மட்டுமல்ல. அவர் ஏதேனும் வழக்கில் சிக்கி அவர் மீது கைது வாரண்ட் இருக்கும் போதோ அல்லது அவர் முன்ஜாமீன் கேட்கும் போதோ, அவருக்கு வேறு நபர் உத்தரவாதம் கொடுக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

கடன் கொடுத்தவர், பெற்றவர், உத்தரவாதம் கொடுத்தவர் :

சாதாரண புரோநோட் கடன் அல்லது அடமானக் கடனாக இருந்தால் கடன் கொடுத்தவர், கடன் பெற்றவர் என இரண்டு பேர் மட்டுமே இருப்பார்கள். ஆனால் Indemnity ல் ஒரு நபர், புரோநோட்டோ அல்லது அடமானப் பத்திரமோ வாங்கிக் கொண்டு, வேறொரு நபருக்கு கடன் கொடுக்கும் போது, அந்த கடனை பெற்றவர் அதனை திருப்பி தருவதற்கு 3வது நபர் உத்தரவாதம் கொடுப்பதால், இங்கு கிரெடிட்டார் என்ற கடன் கொடுத்தவர், பிரின்ஸ்பல் டெப்டார் (Principal Debtor) என்னும் கடன் வாங்கியவர் மற்றும் ஜாமீன் (ஷூரிட்டி) என்ற உத்தரவாதி ஆகிய மூன்று பேர் இருப்பார்கள்.

உத்தரவாதியின் நிலை :

மேலே கூறப்பட்டுள்ள மூன்று பேரில் 3வது நபரான உத்தரவாதிக்கு சற்று சங்கடமான நிலை தான். கடன் கொடுத்தவர், கடனை கொடுக்கும் முன்பாக போதிய பாதுகாப்பு (Security) பெற்றுக் கொண்டு தான் கொடுக்கிறார். கடன் பெற்றவர் திருப்பிக் கொடுக்காவிட்டால், உத்தரவாதியிடம் இருந்து வசூலித்து விடுகிறார். கடன் பெற்றவர் முடிந்தால் திருப்பிக் கொடுக்கிறார். இல்லாவிட்டால் அவருக்கு பதில் உத்தரவாதம் கொடுத்தவர் தான் கொடுப்பார். இந்த நடவடிக்கையால் எந்தவித பிரதிபலனும் பெறாத உத்தரவாதி தான் யாருக்காக உத்தரவாதம் கொடுத்தாரோ, அந்த நண்பர் அல்லது உறவினர் திருப்பிச் செலுத்தாத கடனுக்காக தன் பணத்தை அல்லது சொத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

மூன்று வகையான  உரிமைகள் :

1. முக்கிய கடனாளிக்கு எதிரான உரிமைகள்

2. கடன் கொடுத்தவருக்கு எதிரான உரிமைகள்

3. இதர இணை உத்தரவாதிகளுக்கு எதிரான உரிமைகள்

என உத்தரவாதியின் உரிமைகளை மூன்று வகைகளை பிரிக்கலாம்.

1. முக்கிய கடனாளிக்கு எதிரான உத்தரவாதியின் உரிமைகள் :

A. அறிவிப்பு கொடுக்கும் உரிமை
கடன் கொடுத்தவர் உத்தரவாதியிடம் பணம் கேட்டு வந்தால், அந்தக் கடனை உடனடியாக தீர்க்கும்படி முக்கிய கடனாளிக்கு அறிவிப்பு அனுப்ப உத்தரவாதிக்கு உரிமை உண்டு.

B. பற்று உரிமை மாற்றுதல் :
                              கடன் கொடுத்தவருக்கு கொடுக்கப்பட வேண்டிய தொகை முழுவதையும் செலுத்தி, கடனாளியின் பொறுப்பு முழுவதையும் தீர்த்த பிறகு, கடன் கொடுத்தவருக்கு உள்ள உரிமைகள் முழுவதும் உத்தரவாதிக்கு வந்துவிடும். இதுதான் பற்று உரிமை மாற்றுதல் எனப்படும் சப்ரோகேஷன் எனப்படும். (பிரிவு 140)

C. பத்திரங்கள் மீது உரிமை :
                        உத்தரவாதி பணம் முழுவதையும் செலுத்திய பிறகு முக்கிய கடனாளியின் பத்திரங்கள் மீது கடன் கொடுத்தவர் போல் நடவடிக்கை எடுக்கலாம். (பிரிவு 141)

D. இழப்பு எதிர்காப்பு உரிமை :
முக்கிய கடனாளி சார்பாக உத்தரவாதி செலுத்திய தொகை முழுமைக்கும் இழப்பு எதிர்காப்பு எனப்படும் Indemnity உரிமை அவருக்கு உண்டு. (பிரிவு 149)

E. கடனாளியை கட்டாயப்படுத்தும் உரிமை :
உத்தரவாதி, கடனாளி சார்பாக பணம் செலுத்துவதற்கு முன்பாக கடனாளியிடம் (அந்த கடன் தீர்க்கப்படாமல் இருந்தால்) தன்னை, கடனைத் தீர்க்கும் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கேட்கலாம்.

2. கடன் கொடுத்தவருக்கு எதிரான உத்தரவாதியின் உரிமைகள் :

A. பத்திரங்களை தன்வசம் ஒப்படைக்க கோருதல் :
கடனாளிக்கு பதிலாக உத்தரவாதி பணத்தை செலுத்தி கடனை தீர்த்திருந்தால், கடன் கொடுத்தவரிடம் இருக்கும் கடனாளியின் பத்திரங்களை தன்வசம் ஒப்படைக்க கோரலாம்.

B. #பத்திரங்களை விற்கச் சொல்லுதல் :
தான் வாங்கிய கடனுக்கு ஆதாரமாக கடனாளி, கடன் கொடுத்தவரிடம் கொடுத்திருந்த பத்திரங்களை விற்று, அந்த தொகையிலிருந்து அவருக்கு வரவேண்டிய கடன் தொகையை எடுத்துக் கொள்ளச் சொல்லி கடன் கொடுத்தவரிடம் கேட்கும் உரிமை உத்தரவாதிக்கு உள்ளது.

C.  கடனாளி  மீது  சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க கோருதல் :

தன்னிடம் பணம் கேட்டு கடன் கொடுத்தவர் வரும் போது, கடன் தொகையை வசூல் செய்ய கடனாளி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்க உத்தரவாதிக்கு உரிமை உண்டு.

3. இணை உத்தரவாதிகளுக்கு எதிராக
உத்தரவாதியின் உரிமை :

முக்கிய கடனாளி தன் கடனை தீர்க்காமல் இருந்துவிடும் பட்சத்தில், உத்தரவாதி அக்கடனை தீர்க்க வேண்டியது வரும். அந்த நேரங்களில் உத்தரவாதி இதர இணை உத்தரவாதிகளையும் அதில் பங்கு பெறுமாறு கேட்கலாம். அப்போது உத்தரவாதி மற்றும் இதர இணை உத்தரவாதிகள் எல்லோரும் சமமாக கடன்தாரருக்கு கொடுக்கப்படும் தொகையில் பங்கு பெற வேண்டும். அவ்வாறு எல்லா உத்தரவாதிகளும் சேர்ந்து கடனாளியின் கடன் முழுவதையும் தீர்த்த பிறகு, கடன் கொடுத்தவர் வசம் இருக்கும் கடனாளியின் பத்திரங்களில் அவரவர்களுக்கு உரிமை வந்துவிடுகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் அதில் அவரவர்களுக்குரிய பங்கினை பெறலாம்.

உத்தரவாதத்திலிருந்து வெளியேறுதல் :

இந்திய ஒப்பந்தச் சட்டம் பிரிவு 130,131 மற்றும் 133 ல் எந்தெந்த சூழ்நிலையில் உத்தரவாதி தான் கொடுத்த உத்தரவாதத்திலிருந்து வெளியேறலாம் என்று கூறுகிறது.

பிரிவு - 130 - உத்தரவாதத்தை திரும்ப பெறும் அறிவிப்பு கொடுப்பதன் மூலம்

பிரிவு - 131- உத்தரவாதி இறந்து விட்டால்

பிரிவு - 133- ஒப்பந்த விதிமுறைகளில் மாறுபாடுகள் ஏற்படும் போது

Tuesday, February 13, 2018

ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

                        இன்ஷூரன்ஸ் பாலிசி! யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த     15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும். 

நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும். 

                            மதிப்பெண் பட்டியல்! யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்? 

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.

மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505. 

கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

                                ரேஷன் கார்டு! யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர். 

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை 

எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த  45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை:  சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை  அனுப்பி வைக்கப்படும்.

                            டிரைவிங் லைசென்ஸ்!  யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.

எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

                            பான் கார்டு! யாரை அணுகுவது?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு      45 நாட்கள்.

நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். 

                            பங்குச் சந்தை ஆவணம்! யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண். 

எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

                                கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

                                  டெபிட் கார்டு! யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

கணக்குத் தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?   ரூ.100.

கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

                                    மனைப் பட்டா! யாரை அணுகுவது..?

வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?

நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?   ரூ.20.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும். 

                                   பாஸ்போர்ட்! யாரை அணுகுவது..?

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?  ரூ.4,000.

கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

                                      கிரெடிட் கார்டு!யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை: 15 வேலை நாட்கள்.

நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.  

Wednesday, December 20, 2017

ஏழ்மை நிலையர் (Indigent Person) என்பவர் யார்? நீதிமன்ற கட்டணம் செலுத்த முடியாதவரா? அல்லது சொத்து இல்லாதவரா?

உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 33 விதி 1 ல் ஏழ்மையான நபர்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதேபோல் கட்டளை 44 ல் ஏழ்மையான நபர்களால் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடுகள் குறித்து கூறப்பட்டுள்ளது.

உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 33 விதி 1 ன்படி பார்த்தால் வழக்கு சொத்தை தவிர வேறு சொத்து எதுவும் இல்லாதவராகவும் ரூ. 1000/- க்கு மிகாத சொத்துக்கு உரிமையாளராக இல்லாத நிலையில் இருக்க வேண்டும். அத்தகைய நபர்களுக்கு நீதிமன்ற கட்டணம் கட்டுவதிலிருந்து விலக்கு அளிக்க சட்டத்தில் இடமுண்டு. ஆனால் அவ்வாறு விலக்கு அளிக்கும் முன்பாக மேற்சொன்னவற்றோடு விலக்கு கோரும் நபரின் வேலை குறித்த தன்மை, அவருடைய வருமானம் (ஓய்வூதியத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்), வில்லங்கமில்லாத சொத்துக்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் ஆகியோரிடமிருந்து பெறும் பண உதவிகள் ஆகியவற்றையும் நீதிமன்றம் பரிசீலித்து நீதிமன்ற கட்டணம் செலுத்துவதிலிருந்து ஒரு நபருக்கு ஏழ்மை நிலையை காரணம் காட்டி விலக்கு அளிக்க வேண்டும்.

எனவே ஓய்வூதியம் பெற்று வரும் ஒரு நபர் தான் ஏழ்மை நிலையர் என்று கூறி நீதிமன்ற கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெற முடியாது. அதேபோல் தனது குழந்தைகள் தனக்கு பணம் ஏதும் கொடுப்பதில்லை என்பதையும், வங்கி கணக்கு புத்தகங்களையும் நீதிமன்றத்தில் விலக்கு கோரும் நபர் ஆஜர்படுத்தி நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

Civil Appeal Nos - 5493 with 5494/2011
(Arising out of SLP Nos - 9544 with 23472/2009)
மத்தாய் M. பைக்கெடி Vs K. அந்தோணி
AIR-2011-SC-3221

Wednesday, December 13, 2017

மனுக்களை ஒருவர் தாமே நீதிமன்றத்தில் நேரிடையாக தாக்கல் செய்யலாம்.

 மனுக்களை ஒருவர் தாமே நீதிமன்றத்தில் நேரிடையாக தாக்கல் செய்யலாம்.

          நீதித்துறை நடுவர் மன்றம்
              திருவைகுண்டம்

                 Crmp. No - 25/2017

P. தனேஷ்
S /O  பரமசிவன்
2/2 தெற்கு மாடத் தெரு
திருவைகுண்டம்                   .....    மனுதாரர்

                                 Vs

காவல் ஆய்வாளர்,
திருவைகுண்டம்
காவல் நிலையம், புதுக்குடி... எதிர்மனுதார்

மனுதாரர் பக்கம் வணக்கமாக தாக்கல் செய்யப்படும் மனு கு. வி. மு. ச பிரிவு 200 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 166 ன்படி

நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். திருவைகுண்டம் வடக்கு தெருவில் வசித்து வரும் சுப்பையா மற்றும் அவரது நண்பர் கணேசன் ஆகியோருக்கும் எனக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக சிவில் வழக்கு நடந்து வருகிறது. இதனால் என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்த மேற்படி இருவரும் 3.8.2017 ம் தேதி காலை சுமார் 10 மணிக்கு என் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த என்னை வழிமறித்து "ஏண்டா பொறம்போக்கு நாயே, நீ என்ன பெரிய மயிராடா, மரியாதையா கேஸை வாபஸ் வாங்கு, இல்லையென்றால் உன்னையும், உன் குடும்பத்தையும் வெட்டி கொன்று விடுவோம் என ஆபாசமாக பேசி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள்.

இதனால் என் உயிருக்கும், என் குடும்பத்தார் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இது சம்பந்தமாக திருவைகுண்டம் காவல்நிலைய ஆய்வாளருக்கு பதிவு அஞ்சலில் நான் 3.8.2017 ம் தேதி எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எனக்கும், என் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டு புகார் அனுப்பினேன். என்னுடைய புகார் கைது செய்தற்குரிய குற்றமாகும் (Cognizable Offence). ஆனால் திருவைகுண்டம் காவல்நிலைய ஆய்வாளர் என் புகார் மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை திருவைகுண்டம் காவல்நிலைய ஆய்வாளர் கு. வி. மு. ச பிரிவு 154 ன்படி செயல்படவில்லை. மேலும் உச்சநீதிமன்றம் W. P. NO - 68/2008 என்ற வழக்கில் FIR பதிவு செய்வது சம்மந்தமாக காவல்துறையினருக்கு வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றி என் புகார் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி என் புகார் மனுவின் மீது FIR பதிவு செய்யாத திருவைகுண்டம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 166 ன்படி திருவைகுண்டம் காவல்நிலைய ஆய்வாளர் குற்றம் புரிந்துள்ளார்.

எனவே சமூகம் நீதிமன்றத்தாரவர்கள் கருணை கூர்ந்து மேற்படி எதிர்மனுதார் மீது என் குற்றப் புகாரின் அடிப்படையில் FIR பதிவு செய்யாத காரணத்திற்காகவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றாத காரணத்திற்காகவும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 166 ன்படி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் படி வேண்டுகிறேன்.

நாள் - 10.8.2017                        புகார்தாரர்

இணைப்பு :

1. 3.8.2017 - தேதியிட்ட புகாரின் நகல்

2. எனது புகாரை எதிர்மனுதார் பெற்றுக் கொண்டதற்கான அஞ்சல் ஒப்புதல் அட்டை

3. FIR பதிவு செய்வது சம்மந்தமாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் நகல்

(குறிப்பு - மேற்படி உச்சநீதிமன்ற தீர்ப்பு - W. P. NO - 68/2008 தீர்ப்பு நாள் - 12.11.2013, Lalitha Kumari Vs Govt. Of UP & Others என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் படியும், மேற்படி தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் பிறப்பித்த நிலை ஆணை எண் (Standing Instruction) 58/2013, நாள் - 27.11.2013 ன்படி கைது செய்தற்குரிய குற்றங்களில், கு. வி. மு. ச பிரிவு 154 ன்படி காவல்துறையினர் FIR பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.)

Wednesday, November 29, 2017

சிலிண்டர் வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பமும் தெரிந்து கொள்ள வேண்டிய

சிலிண்டர் வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பமும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி.


ஒரு LPG சிலிண்டர் வாங்கி அது தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை….

அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும்
அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை…!

இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால்…
சிலண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரும் அந்த காப்பீட்டுத் தொகையை
கேட்டு உரிமை கோருவதில்லை…!

நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையிலும்
அந்த காப்பீட்டுக்கான பாலிசி தொகையும் சேர்த்துதான் செலுத்தி வருகிறோம்…!

இந்த காப்பீடு குறித்து அரசாங்கமோ, எண்ணெய் நிறுவனங்களோ கூட வாடிக்கயாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதும் இல்லை…!

சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேர்ந்தால்….

சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்!

(இதை உங்கள் சுவற்றிலும் பகிருங்கள் நண்பர்பளே… அனைவரும் அறிந்து கொள்ளட்டும்.)

பொது நல வழக்குகள்! – ரிட் மனுக்கள்!!

பொது நல வழக்குகள்! – ரிட் மனுக்கள்!!

PUBLIC INTEREST LITIGATION - WRIT PETTITIONS.
LAACO. / 16.09.2017
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
★🇮🇳 இந்திய அரசியலமைப்பு சாசனம் -1950 INDIAN CONSTITUTION ACT - 1950 கோட்பாடு - 226 (1)  ன் கீழ்  நீதிபேராணை வழக்குகளை தொடுக்கும் உரிமை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ✅

★🏛அரசாங்கம், மற்றும் அரசு துறை சார்ந்த,  நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களை செய்யாமல் விட்டாலோ கடமை தவறிய அரசூழியர்களினால் பாதிக்கப்பட்டவர்கள்
இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு நீதி வேண்டி நீதி பேராணை வழக்குகளை பதிவு செய்யலாம்.

★அதென்ன ரிட்?

★‘WRITTEN ORDER’ அதாவது எழுத்து ✍ மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, உயர்நீதிமன்றத்தில்  பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தாக்கல் செய்யும் மனு தான் ரிட்!

★எந்த விதமான பிரச்னைகளுக்கு எல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்?

★பொது நலன் பாதிக்கப்படும் போது, பொது நல வழக்குகள் (Public Interest Litigation)  தொடரலாம்.

★உதாரணமாக உங்கள் பகுதியில்  சாலை  மோசமாக இருந்தாலோ அல்லது புதிய சாலை அமைக்க கோரி  அந்தப் பகுதியின் அதிகாரத்திற்குட்பட்ட அரசுத்துறைகளுக்கு ஒரு மனு கொடுத்தும், அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், அந்தத் துறைக்கு சாலை அமைக்க உத்தரவு போடச் சொல்லி அரசாங்கத்தைக் கேட்கலாம்.

★தொழிற்சாலைகளிலிருந்து  வெளியேறும் கழிவு நீர், கழிவுகள்,  புகையினால் பொது மக்களுக்கும்  சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டால்  அருகில் இருக்கும் மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் புகார் செய்யலாம்.

★🏛 தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின்  21.09.2015. நாளிட்ட அரசாணை எண் :99 ன் படி முப்பது   நாட்களுக்குள் பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது  அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்தந்த துறைகள் நடவடிக்கை எடுக்கச் உத்தரவிடச் சொல்லி, ரிட் மனு தாக்கல் செய்யலாம்.

ஐந்து வகைகளில் ரிட் மனுக்களை  தாக்கல் செய்யலாம்.

✅✅✅✅✅✅✅✅✅✅✅

1. ‘ரிட் ஆஃப் மாண்டமஸ்’.  WRIT OF MANDAMUS
கீழ் நீதிமன்றங்களுக்கு ஆணையிடுதல்

★அதாவது, தனக்கு வரையறுக்கப்பட்ட கடமையை ஒரு அரசு அதிகாரி செய்யாமல்  விட்டாலோ, அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த நிறுவனம் சட்ட விரோதமான உத்தரவைப் பிறப்பிக்கப் போகிறது என்று தெரிந்தாலோ, அந்தக் காரியத்தை செய்யாமல் தடுக்க, ஆணையிட வேண்டும் என்று ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்.

★சாலைகள் , நீர்நிலைகள், அரசு நிலங்களில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தர விடக்கோரி ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம்.

‘2. செர்ஷியோரரி (certiorari) ரிட் மனு
நெறிமுறை உணர்த்துதல்

★உயர்நீதிமன்றத்தின்  அதிகாரத்தில் உள்ள, ஒரு நீதிமன்றம் அல்லது, தீர்ப்பு கொடுக்கும் அதிகாரமுள்ள ஒரு அரசு அதிகாரி, சட்ட விரோதமாக, ஒரு உத்தரவிட்டால், அந்த உத்தரவை ரத்து செய்யவும், அல்லது அந்த குறிப்பிட்ட நீதி மன்றத்துக்கோ அல்லது அரசு அதிகாரிக்கோ, சரியான நெறி முறையை உணர்த்தும்படி உத்தரவிடக்கோரி கேட்பது தான் செர்ஷியோரரி ரிட் மனு .

★உதாரணமாக, ஒரு திரையரங்கம்  கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் "நோ அப்ஜக்ஷன் " ஒருவர் கேட்கிறார்.

★அங்கே இருபத்தைந்து அடி தூரத்தில் மருத்துவமனை, பள்ளிக்கூடம், கோவில், மதுபானக்கடை  இருக்கிறது.

★மருத்துவமனை நோயாளிகள், பள்ளி மாணவர்கள், கோவிலுக்கு வரும் பொது மக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும்.

★அதனால், நோ அப்ஜக்ஷன் கொடுக்கக் கூடாது என்று பொதுமக்கள் ஆட்சேபித்தும் அந்த ஆட்சேஷபணையைப் பரிசீலிக்காமல், நோ அப்ஜக்ஷனை மாவட்ட ஆட்சியர் தந்தால், அந்த உத்தரவை எதிர்த்து ‘செர்ஷியோரரி ரிட்’ மனு தாக்கல் செய்யலாம்.

3. ‘கோவாரண்டோ’ (Quo warranto) ரிட் மனு
தகுதி முறை வினவுதல்

★எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது, தகுதி இல்லாமல், ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ அல்லது தனது பதவியின் அதிகார வரம்பை மீறி அவர் உத்தரவு பிறப்பித்தாலோ, அதை எதிர்த்து ‘கோவாரண்டோ ரிட்’ மனு  தாக்கல் செய்யலாம்.

4. பிரொகிபிஷன் (Prohibition) ரிட். மனு
தடை விதித்தல் ❌

★ஒரு நீதி மன்றம் தனது அதிகார வரம்பை  மீறி செயல் படாதவாறு தடை விதிக்கக்கோரி இந்த ரிட் மனுவினை தாக்கல் செய்யலாம்.

5 .‘ஹெபியஸ் கார்பஸ்’ (Habeas corpus) ரிட் மனு
ஆட்கொணர்வித்தல்

★இதற்குத்  ‘ஆள் கொணர் ஆணை’ என்று பொருள்.

★நமக்குத் தெரிந்த ஒருவர் தவறாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒருவரைக் காணவில்லை, அவரை யாரோ கடத்தி  அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலோ, இந்த ரிட் மனுவை நாம் தாக்கல் செய்யலாம்.

★இந்த மனுவை விசாரிக்கும் நீதிமன்றம், காவல் துறைக்கு அந்த நபரை கண்டு பிடித்து  நீதிமன்றத்தில்  நேரில் ஆஜர் படுத்தச் சொல்லி உத்தரவிடும்.

★இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ‘ஹெபியஸ் கார்பஸ்’ மற்றும் ‘கோவாரண்டோ ரிட்’ மனுக்களை யார் வேண்டுமானாலும்
தாக்கல் செய்யலாம்

★ஆனால், மற்ற ரிட் மனுக்களான ‘மாண்ட மாஸ்’, ‘செர்ஷியோரரி’ மற்றும் ‘ப்ரோகிபிஷன் ரிட்’ மனுக்களை பாதிக்கப்பட்ட நபர்கள் மட்டும் தான் தாக்கல் செய்ய வேண்டும் .

★🇮🇳 இந்திய தண்டனைச்சட்டம் -1860 சட்டப்பிரிவு 2 (2)  ன் படி ஒரு குற்றத்தினை பணியில் உள்ள அரசூழியர் ஒருவர் தெரிந்து செய்தாலோ அல்லது தெரியாமல் செய்தாலோ குற்றம்  குற்றமே. ✅

★கடமை தவறிய குற்றம் செய்யும் அரசூழியர்களுக்கு இந்தியத்தண்டனைச்சட்டப்பிரிவு -166 ன் கீழ் ஒரு வருடம் சிறை தண்டணை உண்டு.

★ஆனால் நடை முறையில் நீதிமன்றங்கள் அவ்வாறான தண்டனை வழங்காத காரணத்தினால்  பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தை நாடி நீதிபேராணை வழக்குகள் தொடுத்து பரிகாரம் பெறும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 😡

★மக்கள் வரிப்பணத்தில் ஊதியங்களையும், சலுகைகளையும், பெறும்  அரசூழியர்களும், காவலூழியர்களும் தங்கள் கடமையை சரிவர செய்தால் நீதிமன்றங்களை பாதிக்கப்பட்ட மக்கள் நாடி செல்லும் நிலை ஏற்படாது.


லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி...?

லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி...?

==========================================
I)ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. லஞ்ச ஒழிப்பு துறை அமைப்பானது, முற்றிலும், சென்னையில் தலைமைச்செயலகத்தில் இயங்கி வரும் CHIEF SECRETARY அந்தஸ்த்தில் உள்ள VIGILANCE COMMISSIONER- அவர்களின் கட்டுப்பாட்டிலும், சென்னை ஆலந்தூரில் உள்ள DGP அல்லது ADDL.DGP அந்தஸ்த்தில் உள்ள,ஒரு மூத்த IPS அதிகாரியின் தலைமையில் இயங்கிவரும்,DVAC என்றழைக்கப்படும் "Directorate of Vigilance and Anti-Corruption" என்ற இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டிலும் மட்டும்தான் செயல்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், மேற்சொன்ன மாவட்ட அதிகாரிகளின் செயல் பாடுகளையே கண்காணித்து, தவறு இறுப்பின் நடவடிக்கை எடுக்க கடமைப்பட்டவர்கள்.

II) லஞ்ச ஒழிப்புச்சட்டம்-என்று அழைக்கப்படும் PREVENTION OF CORRUPTION ACT 1988- பிரிவு-2 பிரகாரம், அரசுப்பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, மக்களால் பொதுப்பணிக்கென தேர்ந்தெடுக்கப்படும், பஞ்சாயத்துப் போர்டு தலைவர், வார்டு உறுப்பினர்கள், நகரம், மாவட்டம் மற்றும் முனிசிபல் கவுன்சிலர்கள், சேர்மேன் மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளும்- "PUBLIC SERVANTS" என்ற வரையரறைக்குட்பட்டதால், கடைநிலையில் உள்ள ஒரு வி.எ.ஓ.-வை எப்படி நூறுக்கும், இருநூறுக்கும், அந்தச்சட்டத்தின் கீழ், எளிதில் பொறி வைத்துப் பிடிக்கிறார்களோ, அதேபோல் பொறிவைப்பு நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள்தான்.

சமீபத்தில், திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் பல மாவட்டங்களில், பஞ்சாயத்துபோர்டு தலைவர்களைக்கூட லஞ்சஒழிப்பு போலீஸார் பொறிவைத்து பிடித்துள்ளார்கள்.

III)லஞ்சத்தில் நான்கு வகைகள் உண்டு. அவை பின்வருமாறு:

(a) Demanding bribe from any individual, either to do any official act, or to do any service or disservice to any one

(b) Mega Level-Organised Corruption, by colluding with each other, viz. the whole team of officials right from bottom to top, the contractors and the middle men, would be colluded with each other. In this type of corruption, the Public/Govt money alone will be siphoned

(c) Minor Level-Organised Corruption, wherein the enforcing officials in the field and the organised criminals in the same area, would collude with each other for sharing the ill-gotten money.

(Example- The Corrupt Officials would collude with the Prohibition Offenders, Gamblers, Brothel-house-runners, Smugglers and other anti social elements in their jurisdictions for ill-gotten money)

(d) Petty corruption ( Mostly practiced by Corruptive Traffic Police men with the road side vendors and the Last grade servants, almost in all the Government offices, wherein only a meager amount of Rupees, viz. Rs- 100/ to 500/ are involved)

IV)இந்த நான்கு வகையில், 1-வது வகையான லஞ்சத்தில் ஈடுபடுபவர்கள்தான் அடிக்கடி “பொறி வைப்பு” நடவடிக்கையில் சிக்குவார்கள்.ஏனெனில், இதில் பாதிக்கப்பட்ட நபர் Motivate-ஆகி புகார் அளிக்க தயாராக இருப்பார்.

2-வது வகையான லஞ்சம் வொயிட்காலர் (white color) லஞ்சம் எனப்படும். இந்த வகை லஞ்சத்தில் இழப்புக்குண்டாவது அரசாங்கம்தான். இழப்புக்குண்டாகும் அரசுப்பணத்தின் அளவு கற்பனைக்கு எட்டாததாக இருக்கும். எப்போதாவது சில நேரங்களில் அத்திபூத்தார் போல சிலநேர்மையான அதிகாரிகளின் கண்களில் படும்போது மட்டும் திடீரென வெடித்து பரபரப்பாகும்.இந்த வகையான லஞ்சத்தால் எற்படும் பாதிப்பு கேன்ஸர் போன்றது. ஏனெனில், இதன் பாதிப்பு, கண்களுக்கு உடனடியாகத்தெரியாது,

ஆனால், நாளடவில் ஏற்படும் பாதிப்பு மரணத்திற்கு ஒப்பானது.

3-வது வகையான லஞ்சத்தில்தான், சமூகம் சீரழிவது கண்ணுக்கு எதிரேயே தெரியும். கள்ளச்சாரயம், சூதாட்டங்கள், ப்ராத்தல்-ஹவுஸ்கள், கலப்படங்கள், கட்டப்பஞ்சாயத்துக்கள், இன்னும் பல.

4-வது வகை லஞ்சம் பொதுமக்களுக்கு அன்றாடத் தொல்லைகள் தரும் வகையைச் சேர்ந்தது.100ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் லஞ்சத்தில் ஈடுபடும் ஒரு கடை நிலை ஊழியரை தண்டிப்பது பரிதாபத்துக்கு உரியதாகத்தெரிந்தாலும், பொது இடங்களில் அச்செயல் மிகுந்த தொல்லைக்குரியதாகவே தெரியும்.4-வது வகையில் சொல்லப்பட்டுள்ள Petty-Corruption என்பது பிச்சைக்காரர்கள் அதிகார தொனியில், பிச்சை எடுப்பது போலத்தான்.

V) அதே போல, லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையிலும்,மூன்று வகைகள் உண்டு.

1) Trap Case. ( பொறி வைத்துப்பிடித்தல் )

2) Regular case. (FIR will be registered later based on the outcome of (a)Detailed enquiry (b) Preliminary enquiry(c) Surprise Check (d) even sometimes from Vigilance reports.

3)Regular case for D.P Assets ( FIR will be registered by DVAC for the possession of Disproportionate Assets by the public servants.FIR will be registered ,only after the Vigilance Commision and the DVAC satisfied from the preliminary enquiry or Detailed enquiry that there is a case of prima facie of D.P.Assets against the corruptive public servants. )

எப்படி புகார் அளிப்பது:

VI) இதில், லஞ்சம்கொடுத்தால்தான் வாயையே தொறப்பேன் என்று செயல் படும் சில Corruptive Officials மீது பொறிவைப்பு நடவடிக்கை வேண்டுவோர், அந்தந்த மாவட்ட தலைநகரில் ஒரு டி.எஸ்.பி தலைமையில் செயல் படும் லஞ்ச ஒழிப்பு பிரிவிற்கு நேரில் சென்று விபரம் கூறினால் போதும். பொறி வைத்து முடித்து, அந்த லஞ்ச அதிகாரிகளை கைதுசெய்யும் வரை அவர்களே உடனிருந்து செயல் படுவார்கள். பொதுமக்கள் தாங்கள் அவ்வாறு புகார் அளித்தால், ‘நம் அரசு வேலையை முடித்துக் கொடுக்க மாட்டார்களே என்று கவலைப்பட வேண்டாம். பொறிவைப்பு நடவடிக்கை முடிந்ததும், அந்த வேலையை செய்து கொடுக்க, லஞ்ச ஒழிப்பு போலீஸாரே உரிய உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு,ஆவன செய்து கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது.

VII) 2, மற்றும் 3-வது வகையான லஞ்சம் தொடர்பான குற்றங்களுக்கு, பெரும்பாலும் பொறிவைப்பு நடவடிக்கைகான புகார்கள் வராது. காரணம், இது ஒரு Collusive Corruption. இவற்றை Whistle-Blower கள்தான் வெளிக்கொண்டுவரவேண்டும். இந்த வகையான Collusive Natured Corruption- தொடர்பான குற்றங்களுக்குஎதிராக, FIR போடுவதற்கு அடிப்படையாகத்தேவைப்படுகின்ற Detailled Enquiry/ Preliminary Enquiry/ Surprise Check செய்வதற்கு தேவையான தகவல்கள், லஞ்சப்பணம் transaction நடைபேறும் இடம், Illegal Assets பற்றிய செய்திகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்த தரமற்றஅரசுப்பணிகள் (Sub-standard Works) பற்றிய தகவல்கள், மாமூல் நடைபெறும் விதம், அவை நடைபெறும் இடம் மற்றும் அதில் Colludeஆகியுள்ள Corrupt Officials மற்றும் வாங்கிக் கொடுக்கும் Middle men மற்றும் சமூகவிரோதக்குற்றங்கள் செய்யும் Organised Offenders பற்றிய விபரங்களை, அனுப்புபவர் பெயர் முகவரி எதுவும் குறிப்பிடாமல், புகாராகவோ அல்லது இமெயில் மூலமகவோ,சென்னையில் இதனடியில் கூறிஉள்ள அதிகாரிகளுக்கு அனுப்பினால் நிச்சயம் அது உரிய நடவடிக்கைகு வரும்.

VIII)ஆனால், இந்த வகையான வழக்குகளில், வழக்கின் தன்மையைப்பொறுத்துத்தான், கைது போன்ற நடவடிக்கைகள் செய்வார்கள். இதில், பொறிவைப்பு நடவடிக்கை போல உடனடி கைது இல்லாவிட்டாலும், சம்பந்தப்பட்ட லஞ்சப்பேர்வழி காலப்போக்கில் சட்னியாகிவிடுவார்.

IX)விஜிலன்ஸ் கமிஷனர் மற்றும் DVAC- முகவரிகள் பொதுமக்கள் பயன் பாட்டுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

1) Vigilance Commissioner
Personnel and Administrative Reforms Department Secretariat, Chennai 600 009 PBX No. 044-25665566
Email: parsec@tn.gov.in

(2)The Director,
Vigilance and Anti-Corruption,
293,MKN Road, Collectors Nagar, Alandur,Chennai,Tamil Nadu-600016.
Chennai – 600 028.
Phone-044-22321090/22321085/22310989/
22342142
E-mail: dvac@nic.in

X) மத்திய அரசுப்பணியில் உள்ளவர்கள் மீது லஞ்சப்புகார்களை அளிக்கும்பட்சத்தில், மாநில அரசுகட்டுப்பட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை எடுக்க முன்வர மாட்டார்கள். அப்புகார்களை கீழே அளிக்கப்பட்டுள்ள CBI-Anti-Corruption பிரிவிற்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்தாலே போதும். அவர்களேஉங்கள் இடத்திற்கு, உங்களைத்தேடி வந்து புகாரைப்பெற்று சம்பந்தப்பட்ட Corrupt Officer-மீது பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

CHENNAI ZONE

Joint Director and Head of Zone,
III Floor, E.V.K., Sampath Building, College Road, Chennai 600006.
044-28232756 (Direct),
044-28272358(General),
044-28232755 (FAX) hozchn[at]cbi[dot]gov[dot]in 09444446240
State of Tamil Nadu, Kerala & Pondicherry.