செக் ரிட்டர்ன்… வழக்கு தொடருவதில் புதிய சட்டத் திருத்தம்!
பணம் தரவேண்டிய ஒருவர் உங்களுக்குக் காசோலை தருகிறார். ஆனால், அந்தக் காசோலையில் பணம் இல்லை என்று திரும்ப வருகிறது. செக் தந்தவர் மீது வழக்குத் தொடர வேண்டும். அந்த வழக்கை எங்குத் தொடர வேண்டும் என்பதில் நடைமுறையில் உள்ள சட்டத்தில் அரசு திருத்தத்தைக் கொண்டுவரவுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தைப் பார்க்கும்முன், ஏற்கெனவே என்ன மாதிரியான நடைமுறை உள்ளது என்று பார்ப்போம்
பணத்தை மொத்தமாக எடுத்துச் சென்று பரிமாற்றம் செய்வதற்குப் பதிலாகப் பணத்துக்கு நிகரான ஒரு ஆவணத்தைப் பயன்படுத்தும் பழக்கம் ஒழுங்குமுறையின்றி இருந்து வந்தது. அதனை நெறிமுறைப்படுத்த மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் பணத்துக்கு மாற்று ஆவணமாக ஒருவர் பிராமிஸரி நோட், பில் ஆஃப் எக்ஸ்சேஞ்ச், காசோலை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் என்று கூறியது.இந்தச் சட்டம் சிவில் சட்டமாக இருந்தது.அதாவது இந்தச் சட்டத்தை மீறீனால், சிவில் வழக்குகள் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.
காசோலை மூலமான பரிவர்த்தனையை அதிகப்படுத்த வும், நம்பகத்தன்மையை ஊக்கு விக்கவும் இந்தச் சட்டத்தில் 1988-ல் திருத்தம் கொண்டுவரப் பட்டது. அதன்படி பணமில்லா மல் காசோலை திரும்பினால் சட்டப்படிக் குற்றம் என்றும், அதன்மேல் குற்ற நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சட்டம் திருத்தப்பட்டது. அதன் அடிப் படையில் நாடு முழுவதும் மிக அதிகமான காசோலை மோசடி வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டன.
ஆனால், காலப்போக்கில் குற்றவியல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 30 சதவிகிதத்துக்கும் மேலான வழக்குகள் காசோலை மோசடி வழக்குகளாக இருந்தன. இதற்காக 2002-ல் வழக்குகளை விரைவாக முடிக்க அரசு சட்டத் திருத்தத்தை கொண்டுவந்தது.அதன்படி காசோலை மோசடி குற்றத்துக்கான சிறை தண்டனையை 1 வருடத்தில் இருந்து 2 வருடமாக உயர்த்தியது.
இப்படி சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டாலும், காசோலை மோசடி வழக்கை எந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது என்பதில் சரியான விளக்கம் சட்டத்தில் இல்லை. அதனால் நீதிமன்ற தீர்ப்புகள்தான் வழிகாட்டியாக இருந்தன.அதன்படி பிரிவு 138-க்குக் கீழான காசோலை மோசடி வழக்கை கீழ்க்கண்ட ஏதாவது ஒரு இடத்துக்கு உட்பட்ட நீதிமன்றத் தில் தாக்கல் செய்து கொள்ளலாம். குறிப்பிட்டு இந்த நீதிமன்றத்தில் மட்டும்தான் வழக்குத் தொடர வேண்டும் என உறுதியான நிலை இல்லை.
1. காசோலை பெறுபவர் /புகார்தாரர் இருக்கும் இடம்
2. காசோலை வழங்கியவர்/குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும் இடம் 3. காசோலை வழங்கிய வங்கி உள்ள இடம்
4. காசோலையை பணமாக்க செலுத்தப்பட்ட வங்கி இருக்கும் இடம்.
இதற்கேற்ப இந்தியா முழுவதும் கிளைகள் உள்ள ஒரு தனியார் வங்கி, ஒரு வாடிக்கை யாளரிடம் இருந்து கடனுக்காகப் பெற்ற காசோலைகளில் பணம் இல்லை என திரும்ப வந்தது. அந்த வங்கியின் தலைமை இடமான மும்பையிலும், மேலும் டெல்லி மற்றும் கொல்கத்தாவில் வழக்குத் தொடர்ந்தது. ஒரே நபர் மீது ஒரே பரிவர்த்தனைக்காக மூன்று வெவ்வெறு இடங்களில் ஒரே நிறுவனம் வழங்குத் தொடர்ந்தது பழிவாங்கும் விஷயமாக அமைந்தது.
இதனையெல்லாம் சரி செய்யும் விதத்தில் 2014-ல் மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதி மன்ற அமர்வு இதற்குத் தீர்வு கண்டு,
காசோலை எந்த வங்கியில் இருந்து வழங்கப்பட்டதோ அந்த வங்கி அமைந்துள்ள நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றத் தில் வழக்குத் தொடரலாம் எனக் கூறியது. இதனால் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த பல லட்சம் வழக்குகள் ஒரு நீதிமன்றத்திலிருந்து வேறு நீதி மன்றங்களுக்கு நாடு முழுவதும் மாற்றப்பட்டது. பிரச்னை தீர்ந்ததா என்றால் இல்லை.
இந்த தீர்ப்பு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் சிரமம் தருவதாக அமைந்ததால் அவர்கள் மத்திய அரசை அணுகி தங்கள் சிரமத்தை முன் வைத்தார்கள். அதன் காரணமாக தற்போது அரசு இந்தச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வரவுள்ளது. இனி காசோலை பெற்றவர்/புகார்தாரர், தான் காசோலையைச் செலுத்தும் வங்கிக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் வழக்கைத் தொடரலாம்.
மேலும், ஒரே பரிவர்த்தனையில் ஒருவர் வழங்கிய பல காசோலைகள், அனைத்தும் திரும்பி இருந்தாலும் வெவ்வேறு இடங்களில் வழக்குப் பதிவுசெய்ய முடியாது. அனைத்து வழக்குகளும் ஒரே நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என்ற திருத்தத்தைக் கொண்டு வரவுள்ளது.
இந்தச் சட்டம் திருத்தப்படும் பட்சத்தில் உங்களுக்குக் காசோலை தந்து அதில் பண மில்லை என்று திரும்பவந்தால், நீங்கள் காசோலையைச் செலுத்திய வங்கி எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றத்திலேயே வழக்குத் தொடரலாம். இதற்காக இனி நீண்ட தூரம் அலைந்து வழக்குத் தொடரும் சிரமம் தனிநபருக்கோ அல்லது வங்கிகளுக்கோ இருக்காது.
பணம் தரவேண்டிய ஒருவர் உங்களுக்குக் காசோலை தருகிறார். ஆனால், அந்தக் காசோலையில் பணம் இல்லை என்று திரும்ப வருகிறது. செக் தந்தவர் மீது வழக்குத் தொடர வேண்டும். அந்த வழக்கை எங்குத் தொடர வேண்டும் என்பதில் நடைமுறையில் உள்ள சட்டத்தில் அரசு திருத்தத்தைக் கொண்டுவரவுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தைப் பார்க்கும்முன், ஏற்கெனவே என்ன மாதிரியான நடைமுறை உள்ளது என்று பார்ப்போம்
பணத்தை மொத்தமாக எடுத்துச் சென்று பரிமாற்றம் செய்வதற்குப் பதிலாகப் பணத்துக்கு நிகரான ஒரு ஆவணத்தைப் பயன்படுத்தும் பழக்கம் ஒழுங்குமுறையின்றி இருந்து வந்தது. அதனை நெறிமுறைப்படுத்த மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் பணத்துக்கு மாற்று ஆவணமாக ஒருவர் பிராமிஸரி நோட், பில் ஆஃப் எக்ஸ்சேஞ்ச், காசோலை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் என்று கூறியது.இந்தச் சட்டம் சிவில் சட்டமாக இருந்தது.அதாவது இந்தச் சட்டத்தை மீறீனால், சிவில் வழக்குகள் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.
காசோலை மூலமான பரிவர்த்தனையை அதிகப்படுத்த வும், நம்பகத்தன்மையை ஊக்கு விக்கவும் இந்தச் சட்டத்தில் 1988-ல் திருத்தம் கொண்டுவரப் பட்டது. அதன்படி பணமில்லா மல் காசோலை திரும்பினால் சட்டப்படிக் குற்றம் என்றும், அதன்மேல் குற்ற நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சட்டம் திருத்தப்பட்டது. அதன் அடிப் படையில் நாடு முழுவதும் மிக அதிகமான காசோலை மோசடி வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டன.
ஆனால், காலப்போக்கில் குற்றவியல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 30 சதவிகிதத்துக்கும் மேலான வழக்குகள் காசோலை மோசடி வழக்குகளாக இருந்தன. இதற்காக 2002-ல் வழக்குகளை விரைவாக முடிக்க அரசு சட்டத் திருத்தத்தை கொண்டுவந்தது.அதன்படி காசோலை மோசடி குற்றத்துக்கான சிறை தண்டனையை 1 வருடத்தில் இருந்து 2 வருடமாக உயர்த்தியது.
இப்படி சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டாலும், காசோலை மோசடி வழக்கை எந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது என்பதில் சரியான விளக்கம் சட்டத்தில் இல்லை. அதனால் நீதிமன்ற தீர்ப்புகள்தான் வழிகாட்டியாக இருந்தன.அதன்படி பிரிவு 138-க்குக் கீழான காசோலை மோசடி வழக்கை கீழ்க்கண்ட ஏதாவது ஒரு இடத்துக்கு உட்பட்ட நீதிமன்றத் தில் தாக்கல் செய்து கொள்ளலாம். குறிப்பிட்டு இந்த நீதிமன்றத்தில் மட்டும்தான் வழக்குத் தொடர வேண்டும் என உறுதியான நிலை இல்லை.
1. காசோலை பெறுபவர் /புகார்தாரர் இருக்கும் இடம்
2. காசோலை வழங்கியவர்/குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும் இடம் 3. காசோலை வழங்கிய வங்கி உள்ள இடம்
4. காசோலையை பணமாக்க செலுத்தப்பட்ட வங்கி இருக்கும் இடம்.
இதற்கேற்ப இந்தியா முழுவதும் கிளைகள் உள்ள ஒரு தனியார் வங்கி, ஒரு வாடிக்கை யாளரிடம் இருந்து கடனுக்காகப் பெற்ற காசோலைகளில் பணம் இல்லை என திரும்ப வந்தது. அந்த வங்கியின் தலைமை இடமான மும்பையிலும், மேலும் டெல்லி மற்றும் கொல்கத்தாவில் வழக்குத் தொடர்ந்தது. ஒரே நபர் மீது ஒரே பரிவர்த்தனைக்காக மூன்று வெவ்வெறு இடங்களில் ஒரே நிறுவனம் வழங்குத் தொடர்ந்தது பழிவாங்கும் விஷயமாக அமைந்தது.
இதனையெல்லாம் சரி செய்யும் விதத்தில் 2014-ல் மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதி மன்ற அமர்வு இதற்குத் தீர்வு கண்டு,
காசோலை எந்த வங்கியில் இருந்து வழங்கப்பட்டதோ அந்த வங்கி அமைந்துள்ள நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றத் தில் வழக்குத் தொடரலாம் எனக் கூறியது. இதனால் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த பல லட்சம் வழக்குகள் ஒரு நீதிமன்றத்திலிருந்து வேறு நீதி மன்றங்களுக்கு நாடு முழுவதும் மாற்றப்பட்டது. பிரச்னை தீர்ந்ததா என்றால் இல்லை.
இந்த தீர்ப்பு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் சிரமம் தருவதாக அமைந்ததால் அவர்கள் மத்திய அரசை அணுகி தங்கள் சிரமத்தை முன் வைத்தார்கள். அதன் காரணமாக தற்போது அரசு இந்தச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வரவுள்ளது. இனி காசோலை பெற்றவர்/புகார்தாரர், தான் காசோலையைச் செலுத்தும் வங்கிக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் வழக்கைத் தொடரலாம்.
மேலும், ஒரே பரிவர்த்தனையில் ஒருவர் வழங்கிய பல காசோலைகள், அனைத்தும் திரும்பி இருந்தாலும் வெவ்வேறு இடங்களில் வழக்குப் பதிவுசெய்ய முடியாது. அனைத்து வழக்குகளும் ஒரே நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என்ற திருத்தத்தைக் கொண்டு வரவுள்ளது.
இந்தச் சட்டம் திருத்தப்படும் பட்சத்தில் உங்களுக்குக் காசோலை தந்து அதில் பண மில்லை என்று திரும்பவந்தால், நீங்கள் காசோலையைச் செலுத்திய வங்கி எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றத்திலேயே வழக்குத் தொடரலாம். இதற்காக இனி நீண்ட தூரம் அலைந்து வழக்குத் தொடரும் சிரமம் தனிநபருக்கோ அல்லது வங்கிகளுக்கோ இருக்காது.