Showing posts with label Civil Type case. Show all posts
Showing posts with label Civil Type case. Show all posts

Tuesday, March 13, 2018

ஒரு உரிமையியல் வழக்கில் பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பாமல், வாதிக்கு ஆதரவாக Injunction அல்லது stay வழங்கும்போது, அதற்கான காரணத்தை நீதிமன்றம் கூறாமல் உத்தரவுகளை பிறப்பிக்க முடியுமா?

     உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 39 விதி 3 ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி விசாரணை நீதிமன்றம் ஒரு வழக்கில் பிரதிவாதிக்கு எந்தவிதமான அறிவிப்பும் அனுப்பாமல் உறுத்துக் கட்டளை உத்தரவு வழங்க விரும்பினால், அவ்வாறு வழங்கப்படுவதற்கான காரணத்தை பதிவு செய்ய வேண்டும் உச்சநீதிமன்றம் "சிவகுமார் சதா Vs டெல்லி மாநகராட்சி (1999-3-SCC-161" என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.

        மேலும் "Dr. V. தேவசகாயம் Vs சத்தியதாஸ் (2002-2-LW-672)" என்ற வழக்கில், ஒரு வழக்கில் எதிர்மனுதாரருக்கு அறிவிப்பு அனுப்பாமல் அவருக்கு எதிராக நீதிமன்றம் ஏதேனும் தடை உத்தரவை பிறப்பிக்கும் பொழுது அதற்கான காரணத்தை அந்த உத்தரவில் குறிப்பிட வேண்டும் என்றும் அவ்வாறு காரணங்களை குறிப்பிடாமல் அளிக்கப்பட்ட உத்தரவு ஒரு நிமிடம் கூட நடைமுறையில் இருக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

       மேலும் உச்சநீதிமன்றம் இதே கருத்தை வலியுறுத்தி "1994-4-SCC-225" என்ற வழக்கிலும் தீர்ப்பு கூறியுள்ளது.

   உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 39 விதி 3 ல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. அந்த முறையில் தான் அந்த விஷயம் நடைபெற வேண்டும். கீழமை நீதிமன்றங்கள் அந்த விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டு ஒரு உத்தரவை வழங்கினால் அந்த உத்தரவுகள் ரத்து செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

   எனவே ஒரு உரிமையியல் வழக்கில் பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பாமல், விரிவான காரணங்களை கூறாமல் வாதிக்கு ஆதரவாக உறுத்துக் கட்டளை உத்தரவு வழங்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRP. NO - 2073/2012

M/s சண்முகம் பவுண்டேஷன் Vs சிவகாமி மற்றும் பலர்

2012-4-LW-CIVIL-670

Friday, February 9, 2018

கையெழுத்துக்களை மெய்ப்பிக்கும் முறைகள்!

இன்று பல வழக்குகளுக்கு கையெழுத்துக்கள்தான் மூல காரணமாக இருக்கிறது. அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

➤  இது கையெழுத்தே இல்லை.

➤  இது என்னோட கையெழுத்து இல்லை.

➤  இது அவருடைய கையெழுத்து இல்லை

➤  இது  யாரோட கையெழுத்து என்று தெரியவில்லை.

மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படுகிறது. பிறர்  கையெழுத்தை நாம் எழுதுவதும் கையெழுத்து போடத் தெரிந்த ஒருவர் கையெழுத்து போட வேண்டிய இடத்தில், தன்னுடைய கையெழுத்தைப் போடாமல், தனது பெயரை தானே எழுதினாலும் அவை தண்டணைக்குரிய குற்றம் ஆகும்.

இந்த போலியான கையெழுத்துக்கள் எப்படி மெய்ப்பிக்கப்படுகிறது?

கையெழுத்துக்கு உரியவர் உயிரோடு இருந்தால்...?

1) ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இருக்கின்றார் என்றால்,  நேரடியாக அழைத்து விசாரணை அதிகாரி அவரை விசாரிக்கலாம். அவர் அதை தன்னுடைய கையெழுத்து இல்லை என்று கூறும் பட்சத்தில் அதனை பொய் கையெழுத்து என்று முடிவு செய்யலாம்.

கையெழுத்துக்கு உரியவர் உயிரோடு இல்லை என்றால்...?

2) ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இல்லை என்றால், அவரது கையெழுத்தை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அல்லது உடன் பணி புரிந்தவர்கள் ஆகியோர்களிடம் விசாரணை அதிகாரி  விசாரிக்கலாம்.  அவர்கள் அதை இறந்தவருடைய கையெழுத்து இல்லை என்று கூறும் பட்சத்தில் அதனை பொய் கையெழுத்து என்று முடிவு செய்யலாம்.

 கையெழுத்துக்கு உரியவரும், சாட்சியும் உயிரோடு இல்லை என்றால்...?

3)  ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இல்லை மேலும்  அவரது கையெழுத்தை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அல்லது உடன் பணி புரிந்தவர்கள் என்று யாருமே இல்லை அல்லது உயிருடன் இல்லை என்றால், அந்தக் கையெழுத்துக்குரிய ஆவணத்தையும், கையெழுத்துப் போட்டவரது வேறு ஒரு பழைய ஆவணத்தையும் Forensic field என்று சொல்லப்படக்கூடிய தடயவியல் துறையின் ஆய்வகத்திற்கு அனுப்பி ஒப்பிட்டுப் பார்த்து, அவர்கள் தரக்கூடிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் அந்தக் கையெழுத்து பொய்யானதா? உண்மையானதா? என்று விசாரணை அதிகாரி முடிவு செய்ய வேண்டும்

Thursday, January 18, 2018

பட்டாவை மட்டும் வைத்து ஒருவர் சொத்தில் உரிமை கொண்டாட முடியாது.

 பட்டா ஒருவருக்கு வழங்கப்பட்டுவிட்டதாலேயே அந்த சொத்து அவருக்கு உரிமையுடையதாகிவிடாது.

Patta and adagal will not confer title
(2002-4-LW-780)

It is trite proposition of law that patta would not constitute title
Srinivasan and six others Vs Sri Madhuyarjuneswarawami, pettavaithalai, Trichy District by its Executive officer and Others
(1998-1-CTC-630)

As it is well known that patta alone would not constitute title, but it can only be taken as piece of evidence in support of the other documentary or probable evidence adduced on the side of a party
(2009-2-LW-783)

Grant of patta was challenged in Writ petition - Held Entries in revenue records donot create or entinguish title no presumptive Value such entries are only for the purpose of payment of land revenue
(2005-2-LW-626)

Saturday, December 16, 2017

சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிறக்காத குழந்தைக்குச் சொத்து (Unborn child) ஒருவர் கொடுக்க முடியுமா?

இந்தியாவில் உள்ள சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882-ன் பிரிவு 5-ன்படி எந்த சொத்துக்களையும் ஒருவருக்கு மற்றொருவருக்கு உரிமை மாற்றிக் கொடுத்துக் கொள்ளும்போது, (விற்பனை, செட்டில்மெண்ட், போன்றவை), இரண்டு உயிருள்ள நபர்களுக்குள் மட்டுமே கொடுத்துக் கொள்ளமுடியும் அல்லது பரிமாறிக் கொள்ள முடியும் என்று சொல்லியுள்ளது. மேலும், உயிருள்ள நபர் என்பது, மனிதர்களையும், மனிதர்களால் நடத்தப்படும் நிறுவனங்களையும், (அது பதிவு செய்யப் பட்டிருந்தாலும், அல்லது பதிவு செய்யப்படாமல் இருந்தாலும்) உள்ளடக்கியே உயிருள்ள நபர் என்றே கருதப்படும் எனவும் விளக்குகிறது.

இவ்வாறு தெளிவாக சொல்லிப்பட்டிருக்கையில், எப்படி பிறக்காத (உயிரில்லாத) ஒரு குழந்தைக்கு கொடுக்க முடியும் என்ற கேள்வி எழும்.
இந்திய சொத்துரிமை மாற்றுச் சட்டத்தில், முஸ்லீம் அல்லாதவர்களுக்கு என்றே, 2-ம் அத்தியாயம் உள்ளது. அதிலுள்ள பிரிவுகள் 5 முதல் 53-ஏ வரை உள்ளவைகள், விதிவிலக்கான அல்லது வித்தியாசமான சில சொத்து மாற்றங்களைக் குறிப்பிடுகிறது. அவ்வாறு சொல்லப் பட்டுள்ளவைகளில் பிரிவு 13-ல் தான், “பிறக்காத குழந்தைக்கு சொத்தை மாற்றுவதைப் பற்றிசொல்லப்பட்டுள்ளது.
பிரிவு:13: “பிறக்காத குழந்தைக்கு, அந்த குழந்தைக்கு பயன் அளிக்கும் வகையில் ஒரு சொத்தை கொடுக்கலாம் என்றும்; அவ்வாறு கொடுத்த சொத்தை பெறுவதற்கு அந்த குழந்தை இந்த உலகில் இல்லாமல் இருப்பதால், அதற்கு முன், அதை உயிருள்ள ஒருவர், தன்கைவசம் வைத்திருத்து, அந்த குழந்தை பிறந்தவுடன் அதனிடம் சேர்த்து விடவேண்டும்என்று அந்த பிரிவில் சொல்லப்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறு அந்த பிறக்காத குழந்தைக்கு கொடுக்கும் சொத்தை, அனுபவிக்கும் உரிமையை கட்டுப்படுத்தாமல், (அதன் ஆயுட்கால உரிமை என்று எழுதாமல்) முழுஉரிமையுடன் அந்த குழந்தை பிறந்தவுடன் அனுபவிக்க ஏதுவாக கொடுத்திருக்க வேண்டும்.
மேலும், “பிறக்காத குழந்தைஎன்பது இதுவரை பிறக்காமல் அதாவது கருவில்கூட உருவாகாமல் இருக்கும் குழந்தை என்றே சட்டம் கருதுகிறது. ஆனால், கருவில் வளரும் குழந்தை, இந்த உலகில் உயிருடன் இருக்கும் குழந்தைஎன்றே கருத வேண்டும்.
உயில் எழுதி வைக்கும்போதும், இவ்வாறான பிறக்காத குழந்தைக்கு சொத்து சேரும்படியும் உயிலை எழுதி வைக்கலாம்.

மனைவி சொத்தில் கணவனுக்கு உரிமை உண்டா?

மனைவி சொத்தில் கணவனுக்கு உரிமை உண்டா?


ஒரு சொத்துக்கு வாரிசுதாரர்கள் எந்த வகையில் உரிமை கோர முடியும் என்பது அந்தச் சொத்து எந்த வகையில் வந்தது என்பதைப் பொறுத்து இருக்கிறது. பூர்வீகச் சொத்தாக இருந்தால் அதில் உடைமையாளரின் மகனுக்கும் பின் அவருடைய பேரனுக்கும் உரிமை உண்டு.
அதே சமயத்தில் ஒருவர் தன் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தாக இருந்தால் அந்தச் சொத்துக்கான உரிமை அவருக்கு மட்டுமே உரித்தானது. அந்தச் சொத்தில் மற்ற எவரும் உரிமை கோர முடியாது. அவருடைய காலத்திற்குப் பிறகு அந்தச் சொத்தை தன் விருப்பப்படி யாருக்கும் எழுதி வைக்கும் உரிமை அவருக்கு உண்டு. அது எவருடைய தலையீடுக்கும் அப்பாற்பட்டது.
அவரது வாரிசோ, உறவினரோ யாரும் அந்தச் சொத்தின் மீது உரிமை கொண்டாடவும் முடியாது. இன்னொரு முறையில் பார்த்தால் மனைவியின் சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா என்னும் ஒரு கேள்வி வருகிறது. மேற்சொன்ன முறையில் பார்த்தால் ஒரு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்து வந்தாலும், அது அந்தப் பெண்ணுக்கு மட்டுமே உரிமை உடைய சொத்து.
அதாவது பெற்றோர் தன் பெண்ணில் நலத்திற்காக அவருக்கு ஒரு சொத்தை எழுதிவைக்கிறார் என்றால், அந்தச் சொத்து அவளுக்கு மட்டுமானதுதான். ஒரு கணவன் தன் சுய சம்பாத்தியம் மூலம் தன் மனைவி பெயருக்கு ஒரு சொத்தை வாங்குகிறார் என வைத்துக்கொண்டால் அந்தச் சொத்திலும் கணவன் உரிமை கொண்டாட முடியாது.
எந்த வகையில் ஒரு பெண்ணின் பெயரில் சொத்துப் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் அதற்கு அந்தப் பெண் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் ஒரு பிரிவு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்து வந்தாலும் அது அவருக்கு மட்டுமே உரிமை உடைய தனிபட்ட சொத்து என்கிறது. இதன்படி கணவன், மனைவி பெயரில் இருக்கும் சொத்தில் தனக்கும் உரிமை உண்டு எனச் சொந்தம் கொண்டாட முடியாது என்பது தெளிவாகிறது. ஒரு பெண் தனக்கு உரிமைப்பட்ட சொத்தைத் தன் காலத்திற்குப் பிறகு யாருக்கும் எழுதி வைக்க முடியும்.
கணவன் தன் வருமானத்தின் மூலம் வாங்கிய சொத்தை மனைவி பெயரில் பத்திரப் பதிவு செய்திருந்தாலும் அந்தச் சொத்தில் கணவருக்கு உரிமை இல்லை. அதே சமயம் சட்டப்படி அந்தச் சொத்தைப் பெற ஒரு வழி இருக்கிறது. அந்தச் சொத்து வாங்கியதற்காகச் செலுத்தப்பட்ட பணம் தன்னால் மட்டுமே அளிக்கப்பட்டது என்பதை உரிய ஆவணங்களுடன் நிரூப்பிக்கும்பட்சத்தில் இது சாத்தியம்.




பூர்வீக சொத்தில் மகளுக்கும் சமபங்கு...சட்டத்தில் ஒரு தெளிவு .

பூர்வீக சொத்தில் மகளுக்கும் சமபங்கு...சட்டத்தில் ஒரு தெளிவு .



பூர்வீக சொத்தில் மகளுக்கும் சமபங்கு:2005-ல் வந்த புதிய சட்டத் திருத்தம்:இதுவரை குழப்பமாகவே இருந்துவந்த சட்டத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டுள்ளது.


சொத்துக்களில் 2 வகைகள்;

1)தனிச் சொத்து. (தானே கிரயம் வாங்கியது போன்றவை).

2)பூர்வீகச் சொத்து (அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா சொத்துக்கள்).

தனிசொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சரிசமமான உரிமை உண்டு என 1956ல் வந்த இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அந்த சட்டத்தில், பூர்வீக சொத்துக்களில் மகன், பேரன், கொள்ளுப்பேரன் இவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றும், மகள், பேத்திகளுக்கு உரிமை கிடையாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.


இதை ஒருவாறு சரிசெய்து, 1989-ல் தமிழ்நாடு அரசு தனியே ஒரு சட்டம் கொண்டுவந்தது. அதன்படி, இந்த சட்டம் வந்த நாளான 1989-வரை திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களை மட்டும் கூட்டுகுடும்ப உறுப்பினராக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு பூர்வீக சொத்தில் மகனைப்போலவே மகளுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்றும், திருமணமாகி கணவர் வீட்டுக்குச் சென்ற மகளுக்கு, தந்தையின் பூர்வீக சொத்தில் பங்கு கிடையாது என்றும் சட்டத் திருத்தம் வந்தது.


பின்னர், மத்திய அரசு, 2005 ல் இந்தியா முழுமைக்கும் உள்ள அந்த 1956ம்வருட இந்து வாரிசு உரிமைசட்டத்தை திருத்தி, அதன்படி மகள்கள் திருமணம் ஆகி இருந்தாலும், ஆகாமல் இருந்தாலும் எல்லோருமே கூட்டுக்குடும்ப உறுப்பினர்கள்தான் என்றும் எனவே மகனைப் போலவே, மகளுக்கும் பூர்வீக சொத்தில் சரிசம பங்கு உண்டு என்றும் புதிய சட்டத்தை இயற்றியது.


இந்த 2005 புதிய மத்திய திருத்தச் சட்டத்தின்படி கீழ்கண்ட புதிய விளக்கம் உள்ளது.இந்த திருத்தல் சட்டம் 9.9.2005 முதல் அமலுக்கு வந்தது.அதற்குபின் எல்லா மகள்களும், மகன்களைப் போலவே  பூர்வீக சொத்தில் சரிசமமான சொத்துரிமை பெறலாம்.மகள்கள் பிறந்தவுடனேயே, மகன்களைப்போலவே, பூர்வீக சொத்தில் பங்கு ஏற்கனவே வந்துவிட்டது என்றும், எனவே அவர்கள் திருமணம் செய்துகொண்டு கணவர் வீட்டுக்குச் சென்றிருந்தாலும், திருமணம் ஆகாமல் பிறந்த வீட்டில் இருந்தாலும், இந்த உரிமை உண்டு.

ஆனால், 20.12.2004 க்கு முன், அவர்களின் பூர்வீகச் சொத்தை பழைய சட்டப்படி பாகப்பிரிவினை செய்து பிரித்துக் கொண்டிருந்தால், அல்லது வெளிநபர்களுக்கு விற்று விட்டிருந்தால் அவ்வாறு பத்திரம் எழுதிப் பதிவு செய்து கொண்ட சொத்தில் மகள்கள் பங்கு கேட்கமுடியாது.20.12.2004 வரை பூர்வீக சொத்தானது அந்த குடும்பத்தில் இருந்தால், அந்த சொத்தில் மகள் சரிசம பங்கு கோரலாம்.பொதுவாக ஒரு சட்டமானது, அது அமலுக்கு வந்த தேதியிலிருந்துதான் உரிமைகள் வரும், (Prospective). ஆனால் இந்த சட்டம் (Retrospective) அதாவது, மகள் பிறந்த தேதியிலிருந்தே அவருக்கு உரிமை கொடுத்துவிட்டது.

அதுதான் இந்த சட்டத் திருத்ததின் சிறப்பம்சம் என சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டுகளும் தீர்ப்புகள் வழங்கி வருகின்றன.

Bombay High Court, Nagpur Bench, in a Second Appeal.Leelabai vs Bhikabai Shriram Pakhare, 2014(4) MHLJ 312 Bom.

Wednesday, November 29, 2017

கையெழுத்துக்களை மெய்ப்பிக்கும் முறைகள்!


கையெழுத்துக்களை மெய்ப்பிக்கும் முறைகள்!

இன்று பல வழக்குகளுக்கு கையெழுத்துக்கள்தான் மூல காரணமாக இருக்கிறது. அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

➤  இது கையெழுத்தே இல்லை.

➤  இது என்னோட கையெழுத்து இல்லை.

➤  இது அவருடைய கையெழுத்து இல்லை

➤  இது  யாரோட கையெழுத்து என்று தெரியவில்லை.

மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படுகிறது. பிறர்  கையெழுத்தை நாம் எழுதுவதும் கையெழுத்து போடத் தெரிந்த ஒருவர் கையெழுத்து போட வேண்டிய இடத்தில், தன்னுடைய கையெழுத்தைப் போடாமல், தனது பெயரை தானே எழுதினாலும் அவை தண்டணைக்குரிய குற்றம் ஆகும்.

இந்த போலியான கையெழுத்துக்கள் எப்படி மெய்ப்பிக்கப்படுகிறது?

கையெழுத்துக்கு உரியவர் உயிரோடு இருந்தால்...?

1) ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இருக்கின்றார் என்றால்,  நேரடியாக அழைத்து விசாரணை அதிகாரி அவரை விசாரிக்கலாம். அவர் அதை தன்னுடைய கையெழுத்து இல்லை என்று கூறும் பட்சத்தில் அதனை பொய் கையெழுத்து என்று முடிவு செய்யலாம்.

கையெழுத்துக்கு உரியவர் உயிரோடு இல்லை என்றால்...?

2) ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இல்லை என்றால், அவரது கையெழுத்தை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அல்லது உடன் பணி புரிந்தவர்கள் ஆகியோர்களிடம் விசாரணை அதிகாரி  விசாரிக்கலாம்.  அவர்கள் அதை இறந்தவருடைய கையெழுத்து இல்லை என்று கூறும் பட்சத்தில் அதனை பொய் கையெழுத்து என்று முடிவு செய்யலாம்.

 கையெழுத்துக்கு உரியவரும், சாட்சியும் உயிரோடு இல்லை என்றால்...?

3)  ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இல்லை மேலும்  அவரது கையெழுத்தை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அல்லது உடன் பணி புரிந்தவர்கள் என்று யாருமே இல்லை அல்லது உயிருடன் இல்லை என்றால், அந்தக் கையெழுத்துக்குரிய ஆவணத்தையும், கையெழுத்துப் போட்டவரது வேறு ஒரு பழைய ஆவணத்தையும் Forensic field என்று சொல்லப்படக்கூடிய தடயவியல் துறையின் ஆய்வகத்திற்கு அனுப்பி ஒப்பிட்டுப் பார்த்து, அவர்கள் தரக்கூடிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் அந்தக் கையெழுத்து பொய்யானதா? உண்மையானதா? என்று விசாரணை அதிகாரி முடிவு செய்ய வேண்டும்.

Tamilnadu Forensic Sciences Department and Lab. 

Stay_order_vs_Injunction

Stay_order_vs_Injunction 

➽  Injunction_Order
An injunction is an order of the court compelling a person to do or not to carry out a particular action.

➽   Stay_Order
An order of stay indicates stoppage, arrest or suspension of judicial proceeding Among various other uses, an order of stay is primarily passed against execution (putting the decree into practice) of a decree (an adjudication determining the rights of the parties).

☞ A stay is made against execution of a decree to enable the judgment-debtor to appeal to an appellate court against such a decree

➪ 1- (Order 21, Rule 26;
➪ 2-Order 41, Rule 5 the CPC, 1908).

Such an order prohibits commencement of any proceeding for execution of the said decree.
An order of stay of proceedings may also be made against
➠ 1-a sale (Order 21, Rule 59),
➠ 2-in a suit against a corporation (Order 30),
➠ 3-in a suit involving a minor (Order 32), ➠-4interpleader suits          (Order 35),
➠ 5-summary suits (Order 37),
➠ 6-in case of reference to a High Court (Order 46).

▼ An order of stay of proceedings is available to the Civil Courts by virtue of their inherent power under Section 151 as well as to the Supreme Court and the High Courts .▲

☞  Difference
➤ 1-It has become clear from the above, an injunction is applicable against a
person while an order of stay operates against a court.
➤  2-An injunction operates as soon as it is issued but a stay order operates only when it is communicated to the court to which it is issued
➤ 3-Proceedings taken in contravention of a stay order are void ab initio while those against an injunction are not null and void but subject to punishment..