Showing posts with label Hindu marriage type cases. Show all posts
Showing posts with label Hindu marriage type cases. Show all posts

Tuesday, March 13, 2018

மாற்றாந்தாய் ஒருவர் தன் கணவனின் இரண்டாம் தார பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா?

இந்த வழக்கில் கண்ட எதிர்மனுதாரான ராதாபாய் என்பவர் முதல் மனைவி ஆவார். அவருக்கு குழந்தைகள் இல்லாததால் அவர் கணவர் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த இரண்டாம் தார மனைவிக்கு இரண்டு குழந்தைகள். ஒருவர் டாக்டர். மற்றொருவர் இன்ஜினியர். இவர்களின் தந்தை இறந்து போனார். இறக்கும் போது சில சொத்துக்களை விட்டுச் சென்றார். அந்த சொத்துக்களை இரண்டாம் தார மனைவியின் பிள்ளைகளே அனுபவித்து வருகிறார். கணவர் இறந்து விட்டதால் முதல் மனைவியான ராதாபாய் அனாதை ஆகிப் போனார். எனவே தன் கணவரின் இரண்டாம் தார பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதாபாய்க்கு மாதம்தோறும் கணவரின் இரண்டாம் தார பிள்ளைகள் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். அதனை எதிர்த்து இரண்டாம் தார மனைவியின் பிள்ளைகள் இந்த மேல்முறையீட்டு மனுவை பாம்பே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இரண்டாம் தார பிள்ளைகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், மாற்றாந்தாய் ஒருவர் ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறி பாம்பே உயர்நீதிமன்றம் "ரமாபாய் Vs தினேஷ்" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார். அந்த வழக்கில் பாம்பே உயர்நீதிமன்றம், ஒரு மாற்றாந்தாய்க்கு உள்ள சட்டப்பூர்வமான உரிமைகளை குறித்து விவாதித்திருந்தது. மேலும் கு. வி. மு. ச பிரிவு 125 ல் கூறப்பட்டுள்ள தாய் என்கிற விளக்கத்திற்குள் மாற்றாந்தாய் வருவதில்லை என்றும் அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது.

முதல் மனைவியும், மாற்றாந்தாயுமான ராதாபாய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், உச்சநீதிமன்றம் "D. வடோடரியா Vs குஜராத் மாநில அரசு (1996-4-SCC-497)" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார். அதில் கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் மாற்றாந்தாய்க்கு ஜீவனாம்சம் கோருவதில் உள்ள உரிமைகள் குறித்து விவரிக்கும் பொழுது கீழ்க்கண்டவாறு கூறியுள்ளது.

" குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 ஐ, அந்த பிரிவு இயற்றப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எளிமையாக பயன்படுத்த வேண்டும். குழந்தை இல்லாத மாற்றாந்தாய் தன்னுடைய கணவனின் மற்றொரு மனைவி மூலம் பிறந்த மகனிடம், தான் ஒரு விதவை அல்லது கணவரால் பராமரிக்க முடியாத நிலையில் இருக்கும் பெண் என்கிற காரணங்களின் அடிப்படையில் ஜீவனாம்சம் கோரலாம் என்று கூறியுள்ளது.

மேலே சொல்லப்பட்ட தீர்ப்பை பாம்பே உயர்நீதிமன்றம் "சரோஜ் கோவிந்த் முக்கவார் Vs சந்திரகலா பாய் (2009-ALLMR-CRL-1139)" என்ற வழக்கில் மேற்கோள் காட்டி தீர்ப்பு கூறியுள்ளதாகவும் கூறி வாதிட்டார்.

எனவே மாற்றாந்தாய் ஒருவர் தன் கணவனின் இரண்டாம் தார பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் பெற எவ்வித தடையும் இல்லை என்று பாம்பே உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

Criminal Appeal No - 1486/2001

Dr.Ravi Kumar and others Vs Radha Bai and Others

2013-1-DMC-509

Monday, December 25, 2017

தன்னுடைய பதிவு செய்த முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்திருந்தால் எந்தச் சூழ்நிலையில் அந்தத் திருமணத்தை ரத்து நீதிமன்றம் உத்தரவிட முடியும்?

நடிகர் பிரசாந்த் விவாகரத்து வழக்கு

இந்த வழக்கின் மேல்முறையீட்டாளரான கிரகலட்சுமிக்கும், எதிர்மனுதாரான நடிகர் பிரசாந்த்க்கும் 1.9.2005 ஆம் தேதி இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு சிறிது காலம் அவர்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினார்கள். கிரகலட்சுமி கர்ப்பம் அடைந்தார். அவருடைய கர்ப்பம் 2.1.2006 ஆம் தேதி மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. அவர் அன்றைய தினமே குழந்தை பெற்றுக் கொள்வதற்காக கிரகலட்சுமி அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்  அதன்பிறகு 31.7.2006 ஆம் தேதி அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

கிரகலட்சுமி தாய் வீட்டுக்கு சென்றபிறகு இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினைகள் அதிகமானது. பிரசாந்த்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி, குழந்தை பிறந்தது மற்றும் குழந்தைக்கு பெயர் வைத்த நிகழ்ச்சி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பிரசாந்த் எவ்வளவோ முயற்சி செய்தும் கிரகலட்சுமியுடன் சேர்ந்து வாழ முடியவில்லை. அதனால் பிரசாந்த் சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் O. P. No - 2721/2006 என்ற எண்ணில் தன்னோடு தன் மனைவியை சேர்ந்து வாழ உத்தரவிடுமாறு கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், கிரகலட்சுமி, பிரசாந்த் மீது இ. த. ச பிரிவு 498(A) மற்றும் வரதட்சணை தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஒரு புகாரை அளித்தார். அதனால் அவர்களுக்கிடையே பிரச்சினை அதிகமானது.

இந்நிலையில் பிரசாந்த் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடையும் வகையில் ஒரு தகவல் அவருக்கு 11.6.2007 ஆம் தேதி கிடைத்தது. அது என்னவென்றால் கிரகலட்சுமிக்கு ஏற்கனவே நாராயணன் வேணு பிரசாத் என்பவருடன் 30.11.1998 ஆம் தேதி திருமணம் நடைபெற்று அந்த திருமணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருப்பதும் ஆகும். உடனே பிரசாந்த் அதனை உறுதிப்படுத்த சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த திருமணச் சான்றிதழ் நகலை பெற்றார்.

அதன்பிறகு முதல் திருமணத்தை மறைத்து தன்னை கிரகலட்சுமி இரண்டாவதாக ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என காவல்நிலையத்தில் ஒரு புகாரை அளித்தார். அதன்பிறகு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் இந்து திருமணச் சட்டம் பிரிவு 12(1)(c) ன்படி தன்னுடைய திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவிற்கு கிரகலட்சுமி எதிருரை தாக்கல் செய்தார். அதில் தான் கர்ப்பம் அடைந்த உடன் தன்னுடைய கணவரின் குடும்பத்தினர் தங்களுடைய போக்கை மாற்றிக் கொண்டனர். மேலும் தன்னுடைய கருவை கலைக்கும்படி வற்புறுத்தியதோடு தனக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்தினார்கள் என்றும், 2.1.2006 ஆம் தேதி தன்னை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார்கள் என்றும் கூறியிருந்தார். மேலும் குடும்ப நல நீதிமன்றத்தில் சேர்ந்து வாழ தன் கணவர் மனு போட்ட மனு நிலுவையில் இருக்கும் போது அவரும், அவரது குடும்பத்தினரும் சொத்தில் பங்கு வாங்கி வரச் சொல்லி மிரட்டியதால்தான் அவர்கள் மீது இ. த. ச பிரிவு 498(A) மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்ததாகவும் கூறியிருந்தார். மேலும் பிரசாந்த்ம், நாராயணன் வேணு பிரசாத் என்பவரும் சேர்ந்து பொய்யான ஆவணத்தை உருவாக்கி தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளதாகவும், அவ்வாறு தனக்கு எந்த திருமணமும் நடைபெறவில்லை என்றும் கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த குடும்பநல நீதிபதி பிரசாந்த் கேட்டபடி திருமணத்தை செல்லாது என்று தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பை எதிர்த்து கிரகலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டை தாக்கல் செய்தார்.

வழக்கை நீதிபதி திரு. G. M. அக்பர் அலி விசாரித்தார்.

கிரகலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், இந்து திருமணச் சட்டம் பிரிவு 12(1)(c) ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்புடையதல்ல என்றும், கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்று குறிப்பிட்டு தாக்கல் செய்திருக்கும் சான்றிதழை சட்டப்படியான ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அந்த ஆவணத்தை பொது ஆவணமாக கருத முடியாது என்றும், அதிலுள்ள சங்கதிகளை நிரூபிக்க திருமண பதிவாளர் உட்பட யாரையும் பிரசாந்த் தரப்பில் விசாரிக்கவில்லை என்றும் கிரகலட்சுமிக்கு ஏற்கனவே நடைபெற்றதாக கூறப்படும் திருமணம் நிரூபிக்கப்படாத நிலையில் விசாரணை நீதிமன்றம் பிரசாந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில் முடிவுக்கு வந்தது தவறு என்றும், பிரசாந்த்க்கும், நாராயணன் வேணு பிரசாத்க்கும் தொடர்பு உள்ளது என்றும், இருவரும் சேர்ந்து சதி செய்துள்ளனர் என்றும் கிரகலட்சுமி தனது முதல் திருமணத்தை மறுத்துள்ளதால் அதனை பிரசாந்த் தான் தகுந்த ஆதாரங்களுடன் மெய்பிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அவர்

தஸ்தேன் Vs தஸ்தேன் (AIR-1973-SC-1534)

ரோசம்மாள் இரத்தினம்மாள் Vs ஜூசா மரியான் (CDJ-2000-SC-355)

தனியாகார் Vs டாக்டர் அபிஜிதராய்

மதன் மோகன் சிங் Vs ரஜினிகணி (2010-9-SCC-2009)

நீலம்குமார் Vs தயாராணி (2010-13-SCC-298)

சித்திக் Vs இராமலிங்கம் (2011-4-LW-805)

ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார்.

நடிகர் பிரசாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், பிரசாந்த் இந்து திருமணச் சட்டம் பிரிவு 11 ன் கீழ் மனுவை தாக்கல் செய்யவில்லை. எனவே கிரகலட்சுமிக்கு நடைபெற்ற முதல் திருமணத்தை பிரசாந்த் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. திருமணத்திற்காக பிரசாந்தின் சம்மதத்தை கிரகலட்சுமி மறைத்து பெற்றுள்ளதால் அந்த திருமணம் செல்லாது என்று அறிவிக்க கோரி பிரசாந்த் இந்து திருமணச் சட்டம் பிரிவு 12(1)(c) ன் கீழ் வழக்கை கீழ் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்  என்றும் மேலும் கிரகலட்சுமி சம்பந்தப்பட்ட முதல் திருமணத்தின் சார்பதிவக அலுவலக சான்றிதழ் பொது ஆவணம் என்றும் அதன் மூலம் கிரகலட்சுமி மோசடி செய்ததை பிரசாந்த் நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளார் என்றும் கூறினார். மேலும் அவர்

மஞ்சுளா Vs மணி (1998-C.R.L.J-1476)

திருமதி. தயாமதி பாய் Vs K. M. ஷாப் (2004-7-SCC-107)

ஆய்வாளர் Vs நரசிம்மாச்சாரி (2005-8-SCC-364)

 ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கீழ்கண்ட கேள்விகளை எழுப்பினார்.

1. திருமணத்தை பதிவு செய்திருப்பதால் அந்த திருமணம் நிரூபிக்கப்பட்ட ஒன்றாகுமா?

2.  திருமணச் சான்றிதழை பொது ஆவணமாக கருத முடியுமா? அதனடிப்படையில் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 114(c) ன்படி ஒரு அனுமானத்திற்கு நீதிமன்றம் வர முடியுமா?

3. அவ்வாறு முதல் திருமணத்தை மறைத்ததால் அதனை இந்து திருமணச் சட்டம் பிரிவு 12(1)(c) ன் கீழ் மோசடி எனக் கருதி இரண்டாவது திருமணத்தை சட்டப்படியான திருமணம் அல்ல என்று அறிவிக்க முடியுமா?

4. பிரசாந்த் கோரியபடி அவருக்கு நடைபெற்ற திருமணத்தை ரத்து செய்ய முடியுமா?

நடிகர் பிரசாந்தின் ஒப்புதலை கிரகலட்சுமி தனக்கு ஏற்கனவே நடைபெற்ற திருமணத்தை மறைத்து மோசடியாக பெற்றுள்ளதை அடிப்படையாக கொண்டு தாக்கல் செய்துள்ளார்.

இந்து திருமணச் சட்டம் பிரிவு 12(1)(c) ன்படி திருமணத்திற்கான ஒப்புதலை மனுதாரர் அல்லது அவருடைய காப்பாளரின் ஒப்புதலை ஏமாற்றி மோசடி செய்து அல்லது வன்முறையை பயன்படுத்தி பெற்றிருந்தால் அந்த திருமணம் சட்டப்படியான ஏற்கத்தக்க திருமணமாக கருத முடியாது.

இந்து திருமணச் சட்டம் பிரிவு 7 திருமணத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சடங்குகளை பற்றி கூறுகிறது. பிரிவு 7-A சுய மரியாதை திருமணம் மற்றும் சீர்திருத்த திருமணம் பற்றி கூறுகிறது. பிரிவு 8 இந்து திருமணங்களை பதிவு செய்வது பற்றி கூறுகிறது. பிரிவு 8(1) இந்து திருமணங்களை ஏன் பதிவு செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களை பற்றி கூறுகிறது.

மேலே சொன்ன சட்டப் பிரிவுகளில் ஒரு இந்து திருமணமானது பிரிவு 7 ன் கீழ் அல்லது 7-A ன் கீழ் சுயமரியாதை திருமணமாக வெறும் மாலை, மோதிரம், தாலி கட்டுதல் ஆகியவை மட்டும் நடைபெற்றிருந்தாலும் அத்தகைய திருமணங்களும் செல்லும். பிரிவு 8 ன் கீழ் திருமணங்களை பதிவு செய்வது அந்த திருமணத்திற்கு ஒரு ஆதாரமாக இருக்கும். அதற்காக இந்து திருமண பதிவாளர் மூலம் பதிவு செய்து இந்து திருமண பதிவேட்டில் அந்த திருமணங்கள் பதிவு செய்யப்படும். பிரிவு 8(1) ல் திருமணங்கள் பதிவு செய்யப்படுவதன் அவசியம் பற்றி கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒரு இந்து திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்று கட்டாயமில்லை.

எனவே இந்து திருமணச் சட்டம் பிரிவு 7 அல்லது 7-A ன் கீழ் நடைபெறும் திருமணத்தை பதிவு செய்து தான் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருப்பினும் திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த பதிவை ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 114(c) ன்படி திருமணச் சான்றிதழை ஒரு பொது ஆவணமாக கருதி அதனடிப்படையில் அந்த திருமணம் நடைபெற்றிருப்பதை தீர்மானிக்க முடியுமா? என்பதை பார்க்கும் பொழுது தமிழ்நாடு இந்து திருமண பதிவு விதி 9 ன்படி முறையாக விண்ணப்பம் செய்து 3 நபர்கள் சாட்சிக் கையொப்பமிட்டு ஒரு திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறு 3 சாட்சிகள் ஒரு திருமணத்தை பதிவு செய்து கையெழுத்து செய்துள்ள நிலையில் நடிகர் பிரசாந்த் எந்த ஒரு சாட்சியையும் விசாரிக்காமல் அந்த சான்றிதழை பொது ஆவணமாக தாக்கல் செய்துள்ளார். 22.10.2007 க்கு பிறகுதான் விண்ணப்பங்களில் புகைப்படம் ஒட்டும் முறை அமலுக்கு வந்தது. அந்த விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டுள்ள ராஜேஷ், சங்கர் மற்றும் சந்திரசேகர் என யாரையும் பிரசாந்த் விசாரிக்கவில்லை. எனவே அந்த திருமணச் சான்றிதழை ஆவணமாக ஏற்க முடியாது. ஆனால் பிரிவு 8(4) ன்படி இந்துத் திருமண பதிவேடு சாட்சிய சட்டத்தின்படி ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஆவணமாகும். அதிலிருந்து எடுக்கப்படும் குறிப்புகளின் அடிப்படையில் வழங்கப்படும் சான்றிதழை ஆதாரமாக நீதிமன்றம் ஏற்க முடியும்.

இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 114(c)  ஒரு சங்கதியை அனுமானிப்பது குறித்து கூறுகிறது. அந்த வகையில் பொது ஊழியரால் ஒரு பதிவேட்டில் எழுதப்பட்டு அதனடிப்படையில் வழங்கப்பட்ட திருமணச் சான்றிதழ் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட ஆவணமாக கருதி ஏற்றதில் தவறில்லை.

கிரகலட்சுமியின் வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், 3 சாட்சிகள் திருமணத்தை பதிவு செய்யும் பொழுது கையெழுத்திட்டுள்ளதால் அந்த சான்றிதழை இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 68 ன் கீழ் சாட்சிகளை விசாரித்து தான் நிரூபிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இந்து திருமணச் சட்டம் பிரிவு 8(4) ன்படி ஒரு பொது ஊழியர் தன்னுடைய அலுவலக வேலையாக திருமண பதிவேட்டில் ஒரு திருமணம் குறித்த பதிவை எழுதுகிறார். அந்த வகையில் அது இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 74 ன்படி ஒரு பொது ஆவணமாக கருதப்படும். எனவே கிரகலட்சுமியின் முதல் திருமணச் சான்றிதழை இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 65(1) ன் கீழ் இரண்டாம் வகை சாட்சியமாக ஏற்றுக் கொள்ள முடியும்.

இந்து திருமணச் சட்டம் பிரிவு 12(1)(c) ன்படி மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் " பிரகாஷ் சிங் தாகூர் Vs பாரதி" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் பாரத்தால் முதல் திருமணத்தை மறைத்தது என்பது முக்கியமான விஷயமாக கருத வேண்டும். அந்த வகையில் இந்து திருமணச் சட்டம் பிரிவு 12(1)(c) ன்படி மோசடியாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. அவ்வாறு இந்த வழக்கில் கிரகலட்சுமி தனக்கு நடைபெற்ற முதல் திருமணத்தை மறைத்தது சட்டப்படி ஒரு முக்கியமான சங்கதியாகும். அதனால் பிரசாந்தின் ஒப்புதலை கிரகலட்சுமி மோசடியாகவே பெற்றுள்ளதாக இந்த நீதிமன்றம் தீர்மானிப்பதாக கூறி கிரகலட்சுமியின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

C. C. A. NO - 1305/2009
V.D.கிரகலட்சுமி Vs T. பிரசாந்த்
2011-5-LW-CIVIL-948

Sunday, December 24, 2017

விவாகரத்து வழக்கில் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று அக்குழந்தையின் தந்தை கூறி DNA டெஸ்டிற்கு அக்குழந்தையின் இரத்தத்தை எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?

கிருஷ்ணகிரி சார்பு நீதிமன்றத்தில் முனியப்பன் என்பவர் தன் மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்து, அதில் தான் மனைவியை விட்டு 12.4.2001 முதல் 20.5.2002 வரை பிரிந்து இருந்ததாகவும், அந்த காலகட்டத்தில் பெங்களூரில் ஒரு கட்டிடம் கட்டுவதற்காக மேசன் வேலைக்கு சென்று அங்கேயே தங்கி விட்டதாகவும், தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து அவருடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததாகவும், அந்த சமயத்தில் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததாகவும், அது இரண்டாவது குழந்தை என்றும், நான் மனைவியை விட்டு பிரிந்து பெங்களூரில் வசித்து வந்த நிலையில், மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொள்ள எவ்வித வாய்ப்புகளும் இல்லாத நிலையில் குழந்தை பிறந்துள்ளதால் அந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்றும், தனது மனைவி வேறு ஒரு நபருடன் தவறான தொடர்பு வைத்து அதன் விளைவாகவே குழந்தை பிறந்திருக்க வேண்டும் என்றும் கூறி குழந்தையின் இரத்தத்தையும், தனது இரத்தத்தையும் எடுத்து DNA TEST க்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதற்கான செலவுகளை தானே ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருந்தார்.

மேற்படி இடைக்கால மனுவிற்கு எதிருரை தாக்கல் செய்த மனைவி அதில் கணவர் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்து தனது கெளரவத்தை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், தனக்கு அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் கணவர் மனுத்தாக்கல் செய்திருப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார்.

மனுவை விசாரித்த நீதிபதி, முனியப்பன் இரண்டாவது குழந்தையின் பிறந்த தேதியை மனுவில் குறிப்பிடவில்லை என்றும் குழந்தை பிறந்த போது அவர்களுடைய திருமணம் நடைமுறையில் இருந்ததாகவும், மனைவியை இரத்த பரிசோதனைக்கு நீதிமன்றம் கட்டாயப்படுத்தினால் அது அவருடைய அடிப்படை உரிமைகளை பாதிக்கும் என்று கூறி முனியப்பன் தாக்கல் செய்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவினால் பாதிக்கப்பட்ட முனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.

வழக்கை நீதியரசர் திரு. S. பழனிவேலு விசாரித்தார்.

முனியப்பன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், வம்சாவளியை கண்டறிய ஒருவரின் இரத்தத்தை எடுத்து DNA TEST க்கு அனுப்புவது இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 21 க்கு முரணானது அல்ல. அது தனி நபருடைய சுதந்திரத்தை பாதிக்கும் செயலாகாது. அதே நேரத்தில் DNA பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவின் மூலமாக வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் இரத்தத்தை எடுத்து அனுப்புவதை ஒரு வாடிக்கையான செயலாக வைத்துக் கொள்ளக்கூடாது. உண்மையில் DNA பரிசோதனைக்கு இரத்தத்தை அனுப்புவதற்கு முகாந்திரம் இருக்கிற வழக்குகளில் மட்டுமே பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் அத்தகைய முகாந்திரம் இருப்பதால் முனியப்பனின் மனுவை அனுமதிக்க வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு " சாரதா Vs தனபால் (2003-2-CTC-760)" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார்.

மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், DNA பரிசோதனையை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஒரு முடிவு எடுக்க முடியாது என்றும், இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 112 ல் கூறப்பட்டுள்ள அனுமானத்தை மறுத்து அதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்றும் எனவே இந்த வழக்கில் DNA TEST க்கு உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி உச்சநீதிமன்றம் " கம்டி தேவி Vs போஷி ராம் (2001-3-LW-411)" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம்,

உச்சநீதிமன்றம் " கெளதம் குண்டூ Vs மேற்கு வங்காளம் (1993-3-SCC-418)" என்ற வழக்கில், DNA பரிசோதனை என்பது தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது அல்ல. இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்பு 21 வழங்கியுள்ள உரிமையை அது எந்த வகையிலும் பாதிக்காது என்றும், ஒருவர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தனது இரத்தத்தை பரிசோதனைக்கு தர மறுத்தால் அது அவருக்கு எதிரான முடிவினை எடுக்க ஒரு காரணமாக அமைந்துவிடும் என்று கூறியது.

மேலும் உச்சநீதிமன்றம் கெளதம் குண்டூ வழக்கிலும், சாரதா வழக்கிலும் DNA TEST குறித்து பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து கீழ்கண்ட முடிவுகளை உச்சநீதிமன்றம் எடுத்தது.

1. ஒரு குடும்ப வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் ஒரு நபரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படும்படி உத்தரவிடலாம்.

2. அவ்வாறு நீதிமன்றம் இடும் உத்தரவு தனிமனித சுதந்திரத்தை பாதிக்காது. அதேபோல் இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்பு 21 ன் வழங்கிய உரிமைக்கு எதிரானது அல்ல.

3. ஒரு நீதிமன்றம் தன்னுடைய அதிகாரத்தை நல்ல முகாந்திரம் உள்ள வழக்குகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவ்வாறு ஒருவரை இரத்த பரிசோதனை செய்ய உத்திரவிட்டு அவர் பரிசோதனை செய்ய மறுத்தால் அதனை அவருடைய வழக்கிற்கு எதிரானதாக முடிவெடுக்க பயன்படுத்தலாம்.

மேலும் " துவாரகா பிரசாத் சத்பதி Vs பிதியூத் பிரவா டிக்ஸிட் (1999-SCC-675)" என்ற வழக்கில், மகன் DNA TEST க்கு தன்னை உட்படுத்தி தான் மனுதாரரான தந்தைக்கு பிறந்ததை நிரூபிக்க நீதிமன்றத்தில் கோரினார். தந்தை தரப்பில் 4 வாரம் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதன்படி அந்த மேல்முறையீடு 20.8.1999 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அந்த தேதியில் தந்தையின் வழக்கறிஞர் தன்னுடைய கட்சிக்காரர் இரத்த பரிசோதனை செய்ய விரும்பவில்லை என்று கூறினார். அதனால் உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டாளரே 1 ஆம் எதிர் மனுதாரருக்கு தந்தை என தீர்ப்பு கூறியது.

உச்சநீதிமன்றம் கெளதம் குண்டூ வழக்கில் DNA TEST க்கு ஒருவரை உட்படுத்த சில வரைமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி DNA TEST செய்ய மனுத்தாக்கல் செய்தால் அத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்க உத்திரவிடக்கூடாது. DNA TEST க்கு உத்திரவிடுவது வாடிக்கையான விஷயமாக நீதிமன்றம் கருதக்கூடாது. ஏனென்றால் அது ஒரு குழந்தை முறை தவறி பிறந்த குழந்தை என்கிற கெட்டப் பெயரையும், அக்குழந்தையின் தாய்க்கு நடத்தை சரியில்லாதவள் என்ற அவப்பெயரையும் உருவாக்கிவிடும் சூழ்நிலையை ஏற்படுத்தி விடலாம். அதனால் ஒருவரை இரத்த மாதிரி தரும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சாரதா வழக்கில் உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு 'கெளதம் குண்டூ' வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு மாறுபட்ட கருத்தினை கூறியுள்ளது. சாரதா வழக்கு ஒருவரை DNA TEST க்கு இரத்த மாதிரியை தரும்படி நீதிமன்றம் உத்தரவிடுவது அவருடைய தனிமனித சுதந்திரத்தை பாதிக்காது என்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்பு 21 க்கு முரணானதாகவும் கருத வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

ஆக உச்சநீதிமன்றம் DNA TEST க்கு ஒருவரை உட்படுத்த இரத்த மாதிரி தரும்படி உத்தரவிடுவதை முழுவதுமாக தடை செய்யவில்லை. ஆனால் அப்படி உத்தரவிடுவதை நீதிமன்றங்கள் ஒரு வாடிக்கையான செயலாக வைத்துக் கொள்ளக்கூடாது என்பது தெளிவாகிறது.

இந்த வழக்கில் முனியப்பன் தன்னுடைய மனைவியை விட்டு பிரிந்து பெங்களூரில் வசித்து வந்ததாகவும், அந்த கால கட்டத்தில் மனைவியை சந்திக்கவே இல்லை என்று கூறி அதனை நிரூபிக்க DNA TEST  க்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதனால் தனது வழக்கை நிரூபிக்க ஆதாரம் கிடைக்கும் என்று கூறி இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை சார்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சரியானதல்ல. அந்த மனுவை நீதிமன்றம் அனுமதித்திருக்க வேண்டும்.

எனவே சார்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதியரசர் திரு. S. பழனிவேலு தீர்ப்பு வழங்கினார்.

CRP. NO - 1498/2009
முனியப்பன் Vs பொன்னி
2011-1-LW-26

Wednesday, November 29, 2017

இரண்டாவது திருமணம் செய்தால் என்ன தண்டனை

*இரண்டாவது திருமணம் செய்தால் என்ன தண்டனை* !


எப்பொழுது இரண்டாவது திருமணம் செய்யலாம் !!!!

   IPC section 494 & 495

ஒரு கணவன் அல்லது மனைவி அவர்களின் திருமண வாழ்க்கைக்கு பிறகு இன்னொரு திருமணம் செய்துக்கொண்டால் அது செல்லாது. கணவன் அல்லது மனைவி இருதுனை புரிந்த குற்றத்திற்க்கு ஆழாகிவிடுவார்கள்...

ஒரு நபர் தன் வாழ்வில் நடந்த முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய ஒப்புக்கொண்டால் அது சட்டபடி குற்றம்...

தண்டனை !!

இதற்க்கான தண்டனை 7 ஆண்டுகள் சிறைப்படுத்துதல் மற்றும் அபராதமும் ஆகும். இதர காரணங்கள் என்றால் 7 ஆண்டு சிறைவைப்பு மற்றும் அபராதமூம் ஆகும்..

விளக்கம் !!!
எந்த ஒரு நபருக்கு கணவன் அல்லது மனைவி உயிருடன் இருந்து மறுமணம் புரிந்தால் அது செல்லுபடி ஆகாது . ஏனெனில் அது கணவன் அல்லது மனைவியின் வாழ்நாள் காலத்தில் நடைபெறுவதால் அது இருதுணை மணம் குற்றமாகும். ( பிரிவு 494 )

இருதுணை மணகுற்றத்திற்க்கு அத்தியவசியமாணவை !!

1. குற்றவாளி வேறொருவர்க்கு திருமணம் செய்யப்பட்டிருக்க வேண்டும். உண்மையாக நடந்த திருமணத்திற்க்கான நிரூபனம் அவசியமாகிறது.

( the accused must have been married to same person . proof of first marriage necessary )

இங்கு முதல் திருமணம் செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். ஒரு வேலை தரப்பினர்களை ஆளுமை செய்யும் சட்டப்படி முதல் திருமணம் செல்லத்தக்கதல்ல என்றால் இரண்டாவது திருமணம் செய்வதன் மூலம் எந்த குற்றமும் செய்யப்படவில்லை..\

மேலும் தரப்பினர்களின் வழக்காறுசட்டங்குகளின்படி இரண்டாவது திருமணம் முறைபடி செய்யப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய திருமணத்தின் செல்லுபடி தன்மை தரப்பினர்களின் மதங்கள் , அவர்களின் உறைவிடம் மற்றும் சில இன்றியமையாத மதம் தொடர்பான திருமணச்சடங்குகளை நிறைவேற்றபடுவதை சார்ந்துள்ளது.

உதாரணம் !!.


தரப்பினர்கள் இந்துப் பழங்குடியினர்கள் இரண்டாவது மற்றும் அடுதடுத்த திருமணங்கள் அவர்களது பழங்குடியின வழக்கங்கள் வழக்காறுகளால் ஆளூமை செய்யபடுகிறது என்றால் அத்தகைய இரண்டாவது திருமணங்கள் செல்லத்தக்கது.மற்றும் அந்த நபர் தண்டிக்கத்தக்கவரல்ல என்று உச்சநீதிமன்றம் கூறியது...

2. இரண்டாவது திருமணம் புரியும் நாளில் யார்ருடன் முதல் திருமணம் செய்துக் கொண்டாரோ அவர் உயிருடன் இருக்க வேண்டும்.
(on the date of the second marriage the person to whom the accused was married should be alive )

3..இரண்டாவது திருமணம் முதல் திருமணம் போல் கொண்டாட படவேண்டும் மற்றும் அது செல்லத்தக்கதாக இருக்க வேண்டும்.
( second marriage must be celebrated in the same manner as the first marriage and must be a valid one )

அது போல் காமக்கிழத்தி அல்லது வைப்பாட்டி வைத்துக் கொள்ளுதல் திருமணம் ஆகாது .அதே போல் விவகரத்து தீர்ப்பானை செல்லத்தக்க திருமணத்தை கலைக்கிறது. திருமணம் கலைக்கப்பட்ட பிறகு மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடியும்.

இரண்டாவது திருமணத்தை நடத்தி வைக்கும் பூசாரி குற்ற உடந்தையாளர் என்ற வகையில் பிரிவு 494 மற்றும் 109 ன் கீழ் தண்டிக்கப்படுவார் . இருப்பினும் இரண்டாவது திருமணத்திற்க்கு வருவதற்க்கு இசைவு தெரிவித்த நபர்கள் அல்லது அந்த திருமணத்திற்க்கு வீட்டில் இடம் அளித்தவர்கள் அந்த திருமணத்திற்க்கு குற்ற உடந்தையாளர் ஆவதில்லை..

எப்பொழுது இரண்டாவது திருமணம் செய்யலாம்!!!

1. முதல் திருமணம் செல்லுபடி ஆகாது என தகுதி வாய்ந்த நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டால் அந்த நபர் இரண்டாவது திருமணம் செய்துகொள்வது குற்றமல்ல

2. முந்தய கணவன் அல்லது மனைவி பற்றி தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு உயிருடன் இருக்கும் தகவல் ஏதுமில்லை என்றால் மற்ற நபர் மீண்டும் திருமணம் செய்துக்கொள்ள முடியும். இங்கு இரண்டாவது திருமணத்தின் வாழ்க்கைத் துனையிடம் முதல் திருமணம் பற்றி கூறியிருக்க வேண்டும்.

3 . தகுதி வய்ந்த நீதிமன்றத்தின் விவாகரத்து தீர்ப்பாணையின் மூலம் திருமணம் கலைக்கப்பட்டுவிட்டால் இரண்டாவது திருமணம் செய்யலாம்.

அந்த குழந்தைக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்

ஒரு பெண்ணிற்கு திருமணமாகாமல் குழந்தை பிறந்துள்ள நிலையில், அந்த குழந்தை பிறப்பதற்கு காரணமான நபர் அந்த குழந்தைக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?


உச்சநீதிமன்றம் " தரம் டியோ யாதவ் Vs உத்திர பிரதேச அரசு (2014-4-SCALE-730)" என்ற வழக்கில் DNA TEST அறிக்கை மிகவும் நம்பகமான ஒன்று என்றும், அதன் சிறப்பு என்னவென்றால் அதனை வைத்து ஒரு தனிப்பட்ட நபர் மற்றும் அவருடைய இரத்தம் சம்பந்தப்பட்ட உறவினர்களான தாயார், தந்தை, சகோதரன் போன்றவர்களை அடையாளம் காண முடியும் என்று தீர்ப்பு கூறியுள்ளது. மேலும் DNA TEST குறித்து விரிவாக விளக்கியுள்ளது.

அதேபோல் உச்சநீதிமன்றம் " கம்டி தேவி Vs ஒஷிராம் (2001-5-SCC-311)" என்ற வழக்கில் DNA TEST அறிக்கை அறிவியல் ரீதியாக மிகவும் துல்லியமானது. ஆனால் அதனடிப்படையில் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 112 ல் உறுதியாக கூறப்பட்டுள்ளதிலிருந்து விடுபடுவதற்கு DNA TEST அறிக்கையின் முடிவு மட்டும் போதுமானதல்ல. ஒரு கணவனும், மனைவியும் சேர்ந்து வாழ்ந்திருந்த காலத்தில் அந்த மனைவி கருவுற்றிருந்த நிலையில், DNA பரிசோதனையில் அந்த குழந்தை அந்த கணவருக்கு பிறக்கவில்லை என்று தெரிய வந்தாலும் பிரிவு 112 ல் கூறப்பட்டுள்ளதை மறுத்துரைக்க வேண்டியது கணவரின் கடமையாகும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அண்மையில் உச்சநீதிமன்றம் " நந்த்லால் வசுதியோ பெட்வாக் Vs லதா நந்த்லால் பெட்வாக் (2014-2-SCC-576)" என்ற வழக்கில் DNA பரிசோதனை அறிக்கை மிகவும் துல்லியமானது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே DNA பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் ஒரு குழந்தைக்கு தந்தை என்று கருதப்படும் நபர் அந்த குழந்தைக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CR. Revision. No - 483/2012, DT - 19.8.2014

துவாரகா ஹல்பா Vs சாவித்திரி பாய் மற்றுமொருவர்

2015-1-DMC-824
ஹிந்து திருமண சட்டப் பிரிவு 13 படி, எப்படி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்வது என்பது பற்றி பார்ப்போம் :
==============================================
I. என்ன காரணங்கள் கூறி கணவரோ, மனைவியோ விவாகரத்து கேட்க முடியும் ?
------------------------------------------------------------
1.கள்ள தொடர்பு
2. தொழு நோய்
3. கொடுமைப்படுத்துதல் (மன ரீதியான கொடுமையும் உள்ளடங்கும்)
4. பாலுறவு நோய்
5. ஒருவர் இன்னொருவரை விட்டு விலகி போதல்.
6. துறவறம் செல்லுதல்
7. மதம் மாறி செல்லுதல்
8. கணவர் அல்லது மனைவி உயிரோடு இருக்கிறாரா என தெரியாமல் இருத்தல்.
9. மன நல பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால்.
10. இணைந்து வாழாமல் இருத்தல்.
மேலே சொன்னது, இருவருக்கும் பொதுவானது.

II. மனைவி, கணவர் மேல் விவாகரத்து கேட்க, கூடுதலான காரணங்கள் :

1. கணவர் வேறு பெண்ணை கற்பழிப்பு செய்கை செய்திருந்தால், விலங்குகளோடு உடலுறவு கொண்டால், மல வாய் மூலம் ஒரு ஆணுடனோ, பெண்ணுடனோ உடலுறவு கொண்டால்.

2. ஹிந்து திருமண சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு, முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது, இரண்டாம் திருமணம் செய்திருந்தால். (1956 இல் ஹிந்து திருமண சட்டம் நடைமுறைக்கு வந்தது)

3. பதினைந்து வயதுக்கு முன் ஒரு பெண், ஒருவரை திருமணம் செய்திருந்து, பதினெட்டு வயதுக்குள் அந்த திருமணத்தை துறந்தால்.

4. ஒரு வருடமாக உடலாலும், மனதாலும் பிரிந்திருந்தால், மேலும் மனைவி ஜீவனாம்ச வழக்கு போட்டு தீர்ப்பாகி, கணவர் அதை மதித்து பணம் கட்டாமல் இருந்தாலும், மனைவி, கணவரிடம் விவாகரத்து கேட்கலாம்.

III. விவாகரத்து வழக்கு எங்கு தாக்கல் செய்யலாம் ?
=============================================
- கடைசியாக இருவரும் எங்கு கணவர் –மனைவியாக வாழ்ந்த இடம் (இதற்கு எழுத்துபூர்வமான, ஏற்று கொள்ளகூடிய ஆதாரம் வேண்டும், உதாரணம் – வாடகை ஒப்பந்தம், குடும்ப அட்டை)
- திருமணம் நடந்த இடம்
- எதிர்மனுதார் குடியிருக்கும் இடம்
மனைவிக்கு கூடுதல் point :
மனைவி, விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யும்போது எந்த இடத்தில் வசிக்கிறாரோ அந்த இடத்தில்,

- சார்பு நீதிமன்றம் அல்லது குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். (உதாரணம் – மதுரை மாநகராட்சி எல்கைக்குட்பட்டது என்றால், மதுரை குடும்ப நீதிமன்றம், மதுரை மாநகராட்சிக்கு வெளியே, என்றால், சார்பு நீதிமன்றம்)
-
IV. என்ன ஆவணங்கள் தேவைப்படும் ?
==================================
1. கணவரின் இருப்பிட சான்று
2. மனைவியின் இருப்பிட சான்று
3. திருமண பத்திரிக்கை அல்லது திருமணம் பதிவு செய்திருந்தால், திருமண சான்றிதழ்
4. திருமண புகைப்படம்
5. யார் வழக்கு தாக்கல் செய்கிறார்களோ, அவர்களது பாஸ்போர்ட் புகைப்படம்
6. இருவரும் சேர்ந்து வாழ எடுத்து கொண்ட முயற்சிகள் தோற்று விட்டன என்பதை காட்டும் ஆவணங்கள் (இருந்தால்)
7. வருமான வரி சான்றிதல்கள் (இருந்தால்)
8. என்ன வேலை பார்க்கிறார், என்ன சம்பளம் வாங்குகிறார் என்ற விவர சான்றிதல்கள் (இருந்தால்)
9. குடும்ப background பற்றிய தகவல்களை காட்டும் ஆவணங்கள் (இருந்தால்)
10. ஒரு வருடத்திற்கு மேல், கணவர், மனைவி பிரிந்து வாழ்கிறார்கள் என்பதை காட்டும் ஆவணம் (இருந்தால்)
11. சொத்துக்கள் ஏதும் கணவர், மனைவிக்கு இருந்தால், அதை காட்டும் ஆவணம்( இருந்தால்)

V. எவ்வளவு செலவு ஆகும் ?
=================================
நீதிமன்ற கட்டணம் 5௦ ரூபாய் ஆகும். வழக்கறிஞர்
கட்டணம், வழக்கு செலவு தனி.

Filing for divorce is prima facie considered to be difficult task. Under Hindu Law, Hindu Marriage law consists of provisions of divorce. Section 13 of Hindu Marriage act contains ground of divorce. This article explains how to file for a divorce in India and everything that in needed for it.
1. Grounds for Divorce:
Here are the grounds for divorce in India mentioned under the Hindu Marriage Act, 1955.
(a) Adultery (b) Leprosy
(c) Cruelty (d) Venereal Disease
(e) Desertion (f) Renunciation
(g) Conversion (h) Not Heard Alive
(i) Mental Disorder                       (j) No Resumption of Co-habitation

2. Additional grounds available to wife:
Under Hindu law, there are few grounds which are given to wife who can seek divorce on their basis. These grounds are:
(a) If the husband has indulged in rape, bestiality and sodomy.
(b) If the marriage is solemnized before the Hindu Marriage Act and the husband has again married another woman in spite of the first wife being alive, the first wife can seek for a divorce.
(c) A girl is entitled to file for a divorce if she was married before the age of fifteen and renounces the marriage before she attains eighteen years of age.
(d) If there is no co-habitation for one year and the husband neglects the judgment of maintenance awarded to the wife by the court, the wife can contest for a divorce.
3. Where can the divorce petition be filed?
(a) Divorce petition can be filed at a place where
-you lastly lived together as husband and wife, or
-you reside or where marriage took place and registered, or
-you reside in case your husband’s whereabouts are not know for a period of 7 years or more.
(b) The wife can also file the petition in the place where she is residing on the date of filing the petition.
(c) The local family court will have jurisdiction to grant the divorce.
(d) Court usually grants 6 months’ time after filing application and after 6 months a date is given and divorce is granted by the appropriate court and a decree can be obtained.
4. Documents Required:
(a) Address proof of husband (b) Evidence relating to the failed attempts of reconciliation
(c) Address proof of wife (d) Income tax statements for the last 2-3 years
(e) Marriage certificate (f) Details of profession and present remuneration
(g) Four passport size photographs of marriage of husband and wife (h) Information relating to family background
(i) Evidence proving spouses are living separately since more than a year (when required) (j) Details of properties and other assets owned by the petitioner
5. Cost that you incur while you file for divorce
You have to pay court fees for filing a divorce which are low; the cost of a divorce is mainly in the fees you pay your lawyer. Lawyers tend to charge fees for appearing in court and doing any other work.

Thanks - expertily