Wednesday, November 29, 2017

அந்த குழந்தைக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்

ஒரு பெண்ணிற்கு திருமணமாகாமல் குழந்தை பிறந்துள்ள நிலையில், அந்த குழந்தை பிறப்பதற்கு காரணமான நபர் அந்த குழந்தைக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?


உச்சநீதிமன்றம் " தரம் டியோ யாதவ் Vs உத்திர பிரதேச அரசு (2014-4-SCALE-730)" என்ற வழக்கில் DNA TEST அறிக்கை மிகவும் நம்பகமான ஒன்று என்றும், அதன் சிறப்பு என்னவென்றால் அதனை வைத்து ஒரு தனிப்பட்ட நபர் மற்றும் அவருடைய இரத்தம் சம்பந்தப்பட்ட உறவினர்களான தாயார், தந்தை, சகோதரன் போன்றவர்களை அடையாளம் காண முடியும் என்று தீர்ப்பு கூறியுள்ளது. மேலும் DNA TEST குறித்து விரிவாக விளக்கியுள்ளது.

அதேபோல் உச்சநீதிமன்றம் " கம்டி தேவி Vs ஒஷிராம் (2001-5-SCC-311)" என்ற வழக்கில் DNA TEST அறிக்கை அறிவியல் ரீதியாக மிகவும் துல்லியமானது. ஆனால் அதனடிப்படையில் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 112 ல் உறுதியாக கூறப்பட்டுள்ளதிலிருந்து விடுபடுவதற்கு DNA TEST அறிக்கையின் முடிவு மட்டும் போதுமானதல்ல. ஒரு கணவனும், மனைவியும் சேர்ந்து வாழ்ந்திருந்த காலத்தில் அந்த மனைவி கருவுற்றிருந்த நிலையில், DNA பரிசோதனையில் அந்த குழந்தை அந்த கணவருக்கு பிறக்கவில்லை என்று தெரிய வந்தாலும் பிரிவு 112 ல் கூறப்பட்டுள்ளதை மறுத்துரைக்க வேண்டியது கணவரின் கடமையாகும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அண்மையில் உச்சநீதிமன்றம் " நந்த்லால் வசுதியோ பெட்வாக் Vs லதா நந்த்லால் பெட்வாக் (2014-2-SCC-576)" என்ற வழக்கில் DNA பரிசோதனை அறிக்கை மிகவும் துல்லியமானது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே DNA பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் ஒரு குழந்தைக்கு தந்தை என்று கருதப்படும் நபர் அந்த குழந்தைக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CR. Revision. No - 483/2012, DT - 19.8.2014

துவாரகா ஹல்பா Vs சாவித்திரி பாய் மற்றுமொருவர்

2015-1-DMC-824

No comments:

Post a Comment