Tuesday, November 28, 2017

வழக்கு நீலுவை தொடர்பாக--- தடங்கல் மனு மாதிரி

அனுப்புநர்:
        





பெறுநர்:
         இணை பதிவாளர் (எண் 1) அவர்கள்
          சிதம்பரம் பதிவாளர் அலுவலகம்,
     சிதம்பரம் – 608001
         
அய்யா,
     பொருள்:  சிதம்பரம் வட்டம் சிதம்பரம் நகரம் வார்டு 4 பிளாக் 2 புல எண் 175   
               வழக்கு நீலுவை தொடர்பாக--- தடங்கல்  மனு
                    
      நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் பூர்வீகமாக வசித்து வருகிறேன்தாங்கள் ஆளுகைக்கும்  அதிகாரத்திக்கும் உட்பட்ட கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் சிதம்பரம் நகரம் வார்டு 4 பிளாக் 2 புல எண் 175 ஆனது பாகப்பிரிவினை பத்திர  ஆவண எண்____________இன்படி எனது  தந்தையார் திரு.ராசுபடையாச்சி அவர்களுக்கு பத்தியப்பட்டதாகும் .
                அவருடைய காலத்தில் அவர் அனுபவத்தில் இருத்த மனையை ஏவ்வித ஏற்பாடும் செய்யாத நிலையில் கடந்த ____________ஆம் தேதியில் இறந்துவிட்டர் .
மனுதரராகிய நானும் வேலை நிமிர்த்தமாக வெளிமாவட்டத்தில் தங்கி பணி புரியவேண்டிய சூழ்நிலைக்கு ஆளானேன் மேற்படி சொத்ததை பராமரிக்க இயலவில்லை. இந்நிலையில் மேற்படி சொத்ததை ஏதிரிகள் தங்களுக்கு பத்தியப்பட்டது என்று பொய் ஆவணம் உருவாக்கி அபகரிக்க முயற்சி செய்வதாக அறிகிறேன்
             மேற்படி எனது மனுவை பரிசிலினை செய்து மேற்கண்ட சர்வே எண்னை உள்ளடைக்கிய யாரானும் யாவரேனும் நபர்கள் எந்த வகையான ஆவணங்களை எழுதிக்கொண்டு பதிவு செய்ய தங்கள் அலுவலகத்தில் தாக்கல் செய்தால் அதனை பதிவு செய்ய வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாள்: __.__.2017                                                              இப்படிக்கு
இடம்_______                                                        
                                                  தங்கள் உண்மையுள்ள



1 comment:

  1. தடங்கள் மனு கொடுக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு நடைபெற்றிருந்தால் அதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன

    ReplyDelete