ஒரு குற்ற வழக்கில் இறுதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அந்த வழக்கு மேல் விசாரணைக்காக அமர்வு நீதிமன்றத்திற்கும் அனுப்பப்பட்டதற்கு பின்னர், அந்த வழக்கில் மேற்கொண்டு புலன் விசாரணை (Further Investigation) நடத்தும்படி, காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அமர்வு நீதிமன்றத்தில் புகார்தாரர் (Defacto Complainant) கோர முடியும்.
நீதிமன்றங்கள் இவ்வாறு தாக்கல் செய்யப்படும் வழக்குகளில், காவல்துறையினருக்கு தான் மேற்கொண்டு புலன் விசாரணை செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு கோரி மனுத்தாக்கல் செய்ய முடியுமே தவிர, புகார்தாரர் அவ்வாறு மனுத்தாக்கல் செய்ய முடியாது என்று குறிப்பிட்டு புகார்தாரரின் மனுவை தள்ளுபடி செய்வது தவறாகும்.
உச்சநீதிமன்றம் "ரீட்டாநாக் Vs மேற்கு வங்க மாநிலம் (AIR-2010-SC-CRL-401" என்ற வழக்கில் குறிப்பிட்டுள்ள சங்கதிகளை வைத்து இவ்வாறு புகார்தாரர் மேற்கொண்டு புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை தள்ளுபடி செய்கின்றன.
ஆனால் மேற்கண்ட "ரீட்டாநாக்" வழக்கு தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் 2013 ம் ஆண்டு உச்சநீதிமன்றம் "வினைய் தியாகி Vs இஷ்ரத் அலி (AIR-2013-SC-CRL-292)" என்ற வழக்கில், ஒரு குற்ற வழக்கில் உண்மையை கண்டுபிடிக்க, அந்த வழக்கின் புகார்தாரர், அந்த வழக்கில் மேற்கொண்டு புலன் விசாரணை செய்யுமாறு காவல்துறையினருக்கு ஓர் உத்தரவினை பிறப்பிக்கும்படி குற்றவியல் நடுவரிடம் ஒரு வேண்டுகோளை முன் வைக்கலாம் என்று கூறியுள்ளது.
ஒரு குற்ற வழக்கில் புலனாய்வு என்பது மிகவும் விரிவான ஒரு பகுதியாகும். அந்த புலனாய்வு என்பது காவல்துறையின் செயல்பாடுகளுக்குள் ஒன்றாகும். அந்த புலனாய்வு பகுதிக்கு காவல்துறையினர் தான் தலைமைப் பொறுப்பிலுள்ள நபராவார். ஆனால் அத்தகைய அதிகாரம் கொண்ட காவல்துறையை யார் கண்காணிப்பது? அவர்களை சட்டத்தின் கட்டுப்பாட்டில் யார் வைத்திருப்பது? அவர்கள் வரம்பு மீறி தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போது அவர்களை தட்டி கேட்பது யார்? அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லையென்பதை அவர்களுக்கு சொல்லக்கூடியவர் யார்? குற்றவியல் நடைமுறைச் சட்டம் உட்பட பல சட்டங்களில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளில் மீது அவர்களுடைய கவனத்தை செலுத்தும் படி செய்யக்கூடிய அதிகாரம் யாருக்கு உள்ளது?
நியாயமான, ஒரு சார்பில்லாத, திறமையான புலன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய பொறுப்பு யாருக்கு உள்ளது? புகார்தாரரின் நம்பிக்கையை பெறக்கூடிய வகையில் காவல்துறையினர் செயல்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்தக்கூடிய நபர் யார்?
காவல்துறையினருக்கு ஒரு வழக்கை பதிவு செய்யக்கூடிய அதிகாரமும், ஒருவரை கைது செய்யக்கூடிய அதிகாரமும் வழங்கப்பட்டுள்ள ஜனநாயக நாட்டில் அந்த காவல்துறையை கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்ற நபர் நீதிமன்றமாக தான் இருக்க முடியுமே தவிர, வேறு யாரும் இருக்க முடியாது.
அந்த அதிகாரம் பெற்ற அமைப்புக்கு காவல்துறையினர் பதில் அளிக்க கடமைபட்டவராவார்கள். அந்த வகையில் காவல்துறையினரின் புலன் விசாரணை திசை மாறிப் போகின்ற நிலையில்,திறம்பட புலனாய்வு இல்லாத நிலையில், பாரபட்சமாக இருக்கக்கூடிய நிலையில், அந்த புலனாய்வில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டியது அவசியமாகும்.
நீதி மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றத்திற்கு உள்ளது. ஒரு குற்ற வழக்கில் உண்மை வெளியே கொண்டு வரப்பட வேண்டும். நிரபராதிகள் காப்பாற்றப்பட வேண்டும். குற்றவாளிகள் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.
உச்சநீதிமன்றம் "வினைய் தியாகி Vs இஷ்ரத் அலி (AIR-2013-SC-CRL-292)" என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வழக்கறிஞர்களும். நீதிபதிகளும் சட்டத்தில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். சட்டம் என்பது உயிர் வாழ்கிற ஓர் உயிரினம் ஆகும். அந்த சட்டம் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. பொதுமக்கள் தங்கள் அடிப்படை சட்ட அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.
எனவே ஒரு குற்ற வழக்கினை மேற்கொண்டு புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று கோர புகார்தாரருக்கு உரிமை உள்ளது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. RC. NO - 1779/2016, DT - 11.8.2016
V. Mohan Vs Inspector of police, East Police Station, Thanjavur
(2016-2-TNLR-265)
தேங்க்ஸ் – சட்ட தீர்வு
நீதிமன்றங்கள் இவ்வாறு தாக்கல் செய்யப்படும் வழக்குகளில், காவல்துறையினருக்கு தான் மேற்கொண்டு புலன் விசாரணை செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு கோரி மனுத்தாக்கல் செய்ய முடியுமே தவிர, புகார்தாரர் அவ்வாறு மனுத்தாக்கல் செய்ய முடியாது என்று குறிப்பிட்டு புகார்தாரரின் மனுவை தள்ளுபடி செய்வது தவறாகும்.
உச்சநீதிமன்றம் "ரீட்டாநாக் Vs மேற்கு வங்க மாநிலம் (AIR-2010-SC-CRL-401" என்ற வழக்கில் குறிப்பிட்டுள்ள சங்கதிகளை வைத்து இவ்வாறு புகார்தாரர் மேற்கொண்டு புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை தள்ளுபடி செய்கின்றன.
ஆனால் மேற்கண்ட "ரீட்டாநாக்" வழக்கு தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் 2013 ம் ஆண்டு உச்சநீதிமன்றம் "வினைய் தியாகி Vs இஷ்ரத் அலி (AIR-2013-SC-CRL-292)" என்ற வழக்கில், ஒரு குற்ற வழக்கில் உண்மையை கண்டுபிடிக்க, அந்த வழக்கின் புகார்தாரர், அந்த வழக்கில் மேற்கொண்டு புலன் விசாரணை செய்யுமாறு காவல்துறையினருக்கு ஓர் உத்தரவினை பிறப்பிக்கும்படி குற்றவியல் நடுவரிடம் ஒரு வேண்டுகோளை முன் வைக்கலாம் என்று கூறியுள்ளது.
ஒரு குற்ற வழக்கில் புலனாய்வு என்பது மிகவும் விரிவான ஒரு பகுதியாகும். அந்த புலனாய்வு என்பது காவல்துறையின் செயல்பாடுகளுக்குள் ஒன்றாகும். அந்த புலனாய்வு பகுதிக்கு காவல்துறையினர் தான் தலைமைப் பொறுப்பிலுள்ள நபராவார். ஆனால் அத்தகைய அதிகாரம் கொண்ட காவல்துறையை யார் கண்காணிப்பது? அவர்களை சட்டத்தின் கட்டுப்பாட்டில் யார் வைத்திருப்பது? அவர்கள் வரம்பு மீறி தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போது அவர்களை தட்டி கேட்பது யார்? அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லையென்பதை அவர்களுக்கு சொல்லக்கூடியவர் யார்? குற்றவியல் நடைமுறைச் சட்டம் உட்பட பல சட்டங்களில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளில் மீது அவர்களுடைய கவனத்தை செலுத்தும் படி செய்யக்கூடிய அதிகாரம் யாருக்கு உள்ளது?
நியாயமான, ஒரு சார்பில்லாத, திறமையான புலன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய பொறுப்பு யாருக்கு உள்ளது? புகார்தாரரின் நம்பிக்கையை பெறக்கூடிய வகையில் காவல்துறையினர் செயல்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்தக்கூடிய நபர் யார்?
காவல்துறையினருக்கு ஒரு வழக்கை பதிவு செய்யக்கூடிய அதிகாரமும், ஒருவரை கைது செய்யக்கூடிய அதிகாரமும் வழங்கப்பட்டுள்ள ஜனநாயக நாட்டில் அந்த காவல்துறையை கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்ற நபர் நீதிமன்றமாக தான் இருக்க முடியுமே தவிர, வேறு யாரும் இருக்க முடியாது.
அந்த அதிகாரம் பெற்ற அமைப்புக்கு காவல்துறையினர் பதில் அளிக்க கடமைபட்டவராவார்கள். அந்த வகையில் காவல்துறையினரின் புலன் விசாரணை திசை மாறிப் போகின்ற நிலையில்,திறம்பட புலனாய்வு இல்லாத நிலையில், பாரபட்சமாக இருக்கக்கூடிய நிலையில், அந்த புலனாய்வில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டியது அவசியமாகும்.
நீதி மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றத்திற்கு உள்ளது. ஒரு குற்ற வழக்கில் உண்மை வெளியே கொண்டு வரப்பட வேண்டும். நிரபராதிகள் காப்பாற்றப்பட வேண்டும். குற்றவாளிகள் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.
உச்சநீதிமன்றம் "வினைய் தியாகி Vs இஷ்ரத் அலி (AIR-2013-SC-CRL-292)" என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வழக்கறிஞர்களும். நீதிபதிகளும் சட்டத்தில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். சட்டம் என்பது உயிர் வாழ்கிற ஓர் உயிரினம் ஆகும். அந்த சட்டம் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. பொதுமக்கள் தங்கள் அடிப்படை சட்ட அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.
எனவே ஒரு குற்ற வழக்கினை மேற்கொண்டு புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று கோர புகார்தாரருக்கு உரிமை உள்ளது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. RC. NO - 1779/2016, DT - 11.8.2016
V. Mohan Vs Inspector of police, East Police Station, Thanjavur
(2016-2-TNLR-265)
தேங்க்ஸ் – சட்ட தீர்வு
No comments:
Post a Comment