அரசு பணியில் சேர்ந்த ஒருவர் ஓராண்டு காலத்திற்குள் இறந்துப்போனால் அவருடைய விதவை மனைவி வழங்க வேண்டுமா?
தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 ல் விதி 45(3)(a) மற்றும் (b) ன்படி ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றி இறந்த அரசு ஊழியருக்கு இறப்பு மற்றும் ஓய்வுகால பயனாக இரண்டு மாத காலச் சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில், விதி 49(2) ல் வரம்புரையில் (PROVISO) குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படி ஓராண்டு காலத்திற்கு குறைவாக பணியாற்றிய அரசு ஊழியர் இறந்து போனால், அவருடைய விதவை மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அந்த விதி 49(2) கீழே தரப்பட்டுள்ளது.
49(2) துணை விதி 3-ல் கூறப்பட்டுள்ளதற்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில், ஒரு அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் 1(a) ஓராண்டு காலத்திற்கு குறைவில்லாமல் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும். அல்லது அவருடைய பணிக் காலத்தில் எந்தவொரு நேரத்திலும் இறக்க நேரிடுதல்
(b) பணி ஓய்வுக்கு பிறகு அவர் இறக்கும் நாளில் ஓய்வூதியம் பெற்றுவருவாரேயானால், இறந்த போனவரின் குடும்பத்தினர் அந்த குடும்ப ஓய்வூதியத்தை எப்படி பெற தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஒருவரை அரசு ஊழியராக பணி நியமன செய்வதற்கு முன்பு உரிய மருத்துவ அதிகாரியால் பரிசோதிக்கப்பட்டு அவர் பணியில் சேர்வதற்கு தகுதி என்று அறிவிக்கப்பட்டு பணியில் சேர்ந்து ஓராண்டு காலம் பணி நிறைவடைவதற்கு முன்பாக அந்த அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.
எனவே மேற்கண்ட விதியின்படி ஓராண்டு காலம் பணி நிறைவடைவதற்கு முன்பாக ஓர் அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்தினருக்கு, குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
இந்த தீர்ப்பை " தமிழ்நாடு அரசு Vs M. தெய்வசிகாமணி (2009-3-MLJ-1) மற்றும் உச்சநீதிமன்றம் S. K. துவா Vs ஹரியானா மாநில அரசு (AIR-2008-SC-1077) ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வழங்கியுள்ளது.
W. P. NO - 12437/2007, dt - 3.12.2014
Radha Bai and Another Vs The Secretary, Tamilnadu
2015-1-MLJ-819
தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 ல் விதி 45(3)(a) மற்றும் (b) ன்படி ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றி இறந்த அரசு ஊழியருக்கு இறப்பு மற்றும் ஓய்வுகால பயனாக இரண்டு மாத காலச் சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில், விதி 49(2) ல் வரம்புரையில் (PROVISO) குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படி ஓராண்டு காலத்திற்கு குறைவாக பணியாற்றிய அரசு ஊழியர் இறந்து போனால், அவருடைய விதவை மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அந்த விதி 49(2) கீழே தரப்பட்டுள்ளது.
49(2) துணை விதி 3-ல் கூறப்பட்டுள்ளதற்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில், ஒரு அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் 1(a) ஓராண்டு காலத்திற்கு குறைவில்லாமல் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும். அல்லது அவருடைய பணிக் காலத்தில் எந்தவொரு நேரத்திலும் இறக்க நேரிடுதல்
(b) பணி ஓய்வுக்கு பிறகு அவர் இறக்கும் நாளில் ஓய்வூதியம் பெற்றுவருவாரேயானால், இறந்த போனவரின் குடும்பத்தினர் அந்த குடும்ப ஓய்வூதியத்தை எப்படி பெற தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஒருவரை அரசு ஊழியராக பணி நியமன செய்வதற்கு முன்பு உரிய மருத்துவ அதிகாரியால் பரிசோதிக்கப்பட்டு அவர் பணியில் சேர்வதற்கு தகுதி என்று அறிவிக்கப்பட்டு பணியில் சேர்ந்து ஓராண்டு காலம் பணி நிறைவடைவதற்கு முன்பாக அந்த அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.
எனவே மேற்கண்ட விதியின்படி ஓராண்டு காலம் பணி நிறைவடைவதற்கு முன்பாக ஓர் அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்தினருக்கு, குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
இந்த தீர்ப்பை " தமிழ்நாடு அரசு Vs M. தெய்வசிகாமணி (2009-3-MLJ-1) மற்றும் உச்சநீதிமன்றம் S. K. துவா Vs ஹரியானா மாநில அரசு (AIR-2008-SC-1077) ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வழங்கியுள்ளது.
W. P. NO - 12437/2007, dt - 3.12.2014
Radha Bai and Another Vs The Secretary, Tamilnadu
2015-1-MLJ-819
No comments:
Post a Comment