Showing posts with label Service Cases and Departmental order. Show all posts
Showing posts with label Service Cases and Departmental order. Show all posts

Saturday, December 23, 2017

அரசு & அரசு சார்ந்த ஊழியர்களுக்கு பணிக்கொடை கணக்கீடு முறை

பணி ஓய்வின் போது பணிக்கொடை கணக்கீடு செய்யும் போது ஊழியர் இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் மற்றும் பணிக்காலம் ஆகிய இரண்டும் கணக்கீட்டில் எடுத்து கொள்ளப்படுகிறது
                                     இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் (Last Pay Drawn)

அரசு மற்றும் அரசு சார்ந்த ஊழியர்களைப் பொருத்த வரை, அடிப்படை ஊதியம் (Basic Pay), தர ஊதியம் (Grade Pay), சிறப்பு ஊதியம் (Special Pay), தனி ஊதியம் (Personal Pay) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance) ஆகியவற்றின் கூட்டுத்தொகையை, இறுதியாக வழங்கப்பட்ட ஊதியமாகக் (Last Pay Drawn) கொண்டு பணிக்கொடை கணக்கிடப்படுகிறது.
 பணிக்காலம் கணக்கிடுதல்

ஓய்வு (Retirement) இனங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளும் (அல்லது 4 ஆண்டு 9 மாதங்களுக்கு மேலும்) அரசுப் பணியில் இருந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 33 ஆண்டு பணிக்காலம் மட்டுமே பணிகொடை கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளபடுகிறது.

32 ஆண்டுகள் 9 மாதங்களுக்கு மேல் பணி செய்திருந்தால் 33 ஆண்டு பணிக்காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 32 ஆண்டுகள் 5 மாதங்கள் பணி செய்திருந்தால் 32 ஆண்டுகள் மட்டுமே பணிக்காலமாக கணக்கில் கொள்ளப்படுகிறது.
                                                     பணிக்கொடை கணக்கீடு

மொத்தப் பணி செய்த ஆண்டிற்கு அரை மாத ஊதியம் வீதம், குறைந்த பட்சமாக இரண்டரை மாத ஊதியமும், அதிக பட்சமாக பதினாறறை (16 ½) மாத ஊதியமும் பணிகொடையாக வழங்கப்படும். ஆனால் அதிகபட்ச வரம்பு ரூபாய் 10 இலட்சம்.

பணிக்கொடை வருவாய்க்கு வருமான வரி சட்டம் 10 (10)-இன் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கப்பட மாட்டாது.

அரசு மற்றும் அரசு ஒப்புதல் பெற்ற நிறுவனங்களுக்கு ஊழியர் செலுத்த வேண்டிய தொகைகள் நிலுவை இருப்பின், அதனை பணிக்கொடைத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.
பணியின் போது காலமான ஊழியர்களுக்கு பணிக்கொடை

பணியின் போது இறந்த அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச பணிக்காலம் கணக்கில் கொள்ளாமல், பணியில் சேர்ந்த ஓராண்டுக்குள் இறந்தவர்களுக்கு இரண்டு மாத ஊதியமும், ஒன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் இறந்தவர்களுக்கு ஆறு மாத ஊதியமும், ஐந்து முதல் 20 ஆண்டுகளுக்குள் பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு 12 மாத ஊதியமும், 20 ஆண்டும் அதற்கு மேலும் பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு அரை மாத ஊதியம் வீதம் கணக்கிட்டு பணிக்கொடை வழங்க வேண்டும்.

Wednesday, December 20, 2017

ஒழுங்கு நடவடிக்கை

இந்திய அரசியலமைப்பு சட்டம் 320(3)( c)-இன்படி, தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர்கள் மற்றும் சார்நிலைப் பணியாளர்கள் மீது தமிழ்நாடு குடிமுறைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ் தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை/ மேல்முறையீடு/ மறு ஆய்வு/ சீராய்வு மனு தொடர்பான ஆவணங்களை அரசு தேர்வாணையத்திற்கு அனுப்பி வைத்து 1954-ஆம் ஆண்டைய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறைகளின் கீழ்,  தேர்வாணையத்தின் கருத்தினைக் கோரும்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது அரசுக்கு ஆலோசனை கூறும் அமைப்பு ஆகும்.  அரசிடம் இருந்து கருத்துரு பெறப்பட்டபின்பு அந்த கருத்துரு மீது தனது ஆலோசனையை வழங்கும்.

தமிழ்நாடு குடிமுறைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் ஒரு அரசு அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும் போது என்னென்ன நடைமுறைகள் பின்பற்ற வேண்டும், என்று நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அந்த நெறிமுறைகளின் படி குற்ற அலுவலருக்கு போதுமான வாய்ப்பை குற்றச்சாட்டை ஏற்படுத்துபவர் நல்க வேண்டும்.

ஒழுங்கு நடவடிக்கை நேர்வுகளில்,  அரசு தேர்வாணைய ஆலோசனையை கோரும், தேர்வாணையம் தமிழ்நாடு குடிமுறைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்படி நடைமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளனவா என்று பரிசீலிக்கும்,  அதன் மீது தனது ஆலோசனையை வழங்கும்;  ஆலோசனைக்கு பின்பே அரசு ஆணை பிறப்பிக்கும்.

குற்ற அலுவலர் போதிய விளக்கமளிக்க எந்த முறையான விசாரணை வாய்மொழியா,  நேரடி விசாரணையா, அல்லது இருமுறைகளுமா  என கோரி குற்ற அலுவலர் கோரும் வாய்ப்பினை வழங்க வேண்டும். குற்ற அலுவலர் எவ்வித விசாரணையையும் கோரவில்லை என்றhலும் விதி 17(ஆ)-வின் கீழ் தொடரப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளில் வாய்மொழி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

விசாரணை திருப்திகரமானதாக குற்ற அலுவலருக்கு இருக்க வேண்டும். விசாரணை அறிக்கையின் மீதான கூடுதல் விளக்கம் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும். அனைத்து ஒழுங்கு நடவடிக்கை நடைமுறைகளும் பின்பற்றப்பட்ட பின்பே அவருக்கு தண்டனை வழங்க இயலும்.  இல்லையெனில், வழக்கு வழுவாக முடியும்.  நடைமுறை வழு ஏற்படும் வழக்குகளில் தேர்வாணைய ஆலோசனைப்படி அவ்வழுக்கள் நிவர்த்தி செய்யப்பட்ட பிறகே அவ்வழக்குகள் குறித்து தேர்வாணையம் அரசுக்கு ஆலோசனை வழங்கும்.

அரசுத் துறைகள் தங்கள் அலுவலர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டால் அந்த நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட அலுவலர்கள் அரசிடம் மேல்முறையீடு /மனு செய்து கொள்ள முடியும்.

அரசே தண்டனை வழங்கும் நேர்வுகளில். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் மறு ஆய்வு மனுவின் மீதும் அரசு தேர்வாணையக் கருத்தினை பெற்று அதன் பிறகு ஆணை பிறப்பிக்கும்.

மேற்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என தேர்வாணையம் பரிசீலித்து அரசுக்கு தனது ஆலோசனையை வழங்குகிறது. அரசு தேர்வாணையத்தின் ஆலோசனையினை ஏற்று ஆணை பிறப்பிக்கும்.  தேர்வாணைய ஆலோசனையிலிருந்து மாறுபட்டு அரசு ஆணை பிறப்பிக்கும் இனங்களை தேர்வாணையம் தனது ஆண்டறிக்கையில் குறிப்பிடும்.

Wednesday, November 29, 2017

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசு ஊழியரை எவ்வளவு காலத்திற்கு பணியிடை நீக்கத்திலேயே அரசு வைத்திருக்கலாம்?

DSP செல்வமணி லஞ்ச வழக்கு :

செல்வமணி என்பவர் சார்பு ஆய்வாளராக 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணியில் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 1998 ஆம் ஆண்டில் ஆய்வாளராகவும், 2010 ஆம் ஆண்டில் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றார். அவர் இராயபுரம் உதவி ஆணையராகவும், தாம்பரம் உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2011 ஆம் ஆண்டில் மாவட்ட குற்றப் பதிவேட்டு பிரிவிலும், 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திருச்சி மாவட்டம் லால்குடியில் காவல் துணை கண்காணிப்பாளராகவும் பணியமர்த்தப்பட்டார். அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் லால்குடி, கல்லாகுடி, கொல்லடம், சமயபுரம் மற்றும் சிறுகானூர் காவல் நிலையங்கள் இருந்தது.

இந்நிலையில் ராஜமாணிக்கம் என்பவரிடம் ரூ. 25,000/- லஞ்சம் கேட்டதாக ஒரு வழக்கு திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பு ஆய்வாளரால் குற்ற எண். 11/2012 என்கிற எண்ணில் பதிவு செய்யப்பட்டது. அதனால் அவரை பணியிடை நீக்கம் செய்து G. O. 2D. 208 HOME (Pol. 2) Department என்கிற எண்ணில் ஓர் உத்தரவு 27.7.2012 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. DSP மீதான லஞ்ச குற்ற வழக்கில் இறுதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த DSP தன்னை பணியிடை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் W. P. NO - 21014/2013 என்ற எண்ணின் கீழ் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தார். அதனை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், DSP யை பணியிடை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி ஒரு மனுவை அரசிற்கு அளிக்குமாறும், அதனை அரசு பரிசீலனை செய்து DSPயை அதிக முக்கியத்துவம் இல்லாத தொலை தூரத்திலுள்ள ஒரு பதவியில் நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவினால் குறையுற்ற அரசு ஒரு ரிட் மேல்முறையீட்டை W. A. NO - 1552/2014 என்ற எண்ணின் கீழ் தாக்கல் செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் DSP தன்னை பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு ஒரு மனுவை அரசிடம் அளிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டதோடு, அந்த மனுவை இரண்டு வாரங்களில் பரிசீலனை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

மேற்படி உத்தரவுபடி DSP ஒரு கோரிக்கை மனுவை தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளரிடம் 17.12.2012 ஆம் தேதி அளித்தார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட முதன்மை செயலாளர், DSP லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பொறி வைத்து பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருவதால், பொது நிர்வாகத்துறையில் அவருக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்கப்பட்டால், அது மற்ற பொது ஊழியர்களின் நடத்தையை பாதிக்கும் என குறிப்பிட்டு DSP யின் கோரிக்கை மனுவை நிராகரித்து 30.12.2014 ம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்தார். அந்த உத்தரவை எதிர்த்து DSP சென்னை உயர்நீதிமன்றத்தில் W. P. NO - 26606/2015 என்ற ரிட் மனுவை தாக்கல் செய்தார்.

DSP தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் " அம்பிகாபதி Vs இயக்குநர், மக்கள் நல்வாழ்வுத் துறை (1991-WLR-273) மற்றும் அஜய் குமார் செளத்ரி  Vs யூனியன் ஆப் இந்தியா (2015-2- SCALE - 432)" ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, பணியிடை நீக்கம் உத்தரவு 3 ம மேல் நீடித்திருக்ககூடாதென்றும், அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் தவறு செய்ததாக கூறப்படும் அரசு ஊழியர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் மீது உரிய உத்தரவை பிறப்பித்து, அந்த பணியிடை நீக்கத்தை நீட்டித்திருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் இந்த DSP யை எந்தவிதமான காரணங்களையும் குறிப்பிடாமல் பணியிடை நீக்கம் செய்து, நீண்ட காலமாக பணியிடை நீக்கத்திலேயே அரசு வைத்துள்ளது என்றும், எனவே அந்த உத்தரவை ரத்து செய்து DSP யை பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

DSP தரப்பு வாதத்தை கேட்ட உயர்நீதிமன்றம், இந்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம் " அஜய் குமார் செளத்ரி Vs யூனியன் ஆப் இந்தியா"  என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்க வேண்டும் என்று கூறியது.

ஓர் அரசு ஊழியரை பணியிடை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவானது 3 மாதங்களுக்கு மேல் நீடித்திருக்ககூடாது எனவும், அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் தவறு செய்ததாக கூறப்படும் அரசு ஊழியருக்கு அந்த குற்றச்சாட்டு சார்வு செய்யப்பட்டு, அதன் மீது உரிய உத்தரவை பிறப்பித்து, இடைநீக்கத்தை நீட்டித்திருக்க வேண்டுமென்று மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசாங்கம் கடித எண் 13519/எண்/2016-1,P & AR (PER. N) Dept என்கிற 23.07.2015 ஆம் தேதியிட்ட கடிதத்தின் மூலம் அரசு முதன்மை செயலாளர்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகள் மற்றும் அனைத்து துறையினரையும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

எனவே ஒரு அரசு ஊழியரை நீண்ட காலமாக எந்த காரணங்களும் இல்லாமல் பணியிடை நீக்கத்தில் வைத்திருப்பது நியாயமற்றது என்று கூறி இந்த DSP யை தொலை தூரத்தில் உள்ள அதிக முக்கியத்துவம் இல்லாத பணியில் வேலைக்கு அமர்த்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

W. P. NO - 26606/2015, DT - 29.9.2016
K. Selvamani Vs Chief Secretary, Tamilnadu and DGP,
(2017-1-CTC-795)
(2016-7-MLJ-766)

அரசு பணியில் சேர்ந்த ஒருவர் ஓராண்டு காலத்திற்குள் இறந்துப்போனால் அவருடைய விதவை மனைவி வழங்க வேண்டுமா?

அரசு பணியில் சேர்ந்த ஒருவர் ஓராண்டு காலத்திற்குள் இறந்துப்போனால் அவருடைய விதவை மனைவி வழங்க வேண்டுமா?


தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 ல் விதி 45(3)(a) மற்றும் (b)  ன்படி ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றி இறந்த அரசு ஊழியருக்கு இறப்பு மற்றும் ஓய்வுகால பயனாக இரண்டு மாத காலச் சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில், விதி 49(2) ல் வரம்புரையில் (PROVISO) குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படி ஓராண்டு காலத்திற்கு குறைவாக பணியாற்றிய அரசு ஊழியர் இறந்து போனால், அவருடைய விதவை மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த விதி 49(2) கீழே தரப்பட்டுள்ளது.

49(2) துணை விதி 3-ல் கூறப்பட்டுள்ளதற்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில், ஒரு அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் 1(a) ஓராண்டு காலத்திற்கு குறைவில்லாமல் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும். அல்லது அவருடைய பணிக் காலத்தில் எந்தவொரு நேரத்திலும் இறக்க நேரிடுதல்

(b)  பணி ஓய்வுக்கு பிறகு அவர் இறக்கும் நாளில் ஓய்வூதியம் பெற்றுவருவாரேயானால், இறந்த போனவரின் குடும்பத்தினர் அந்த குடும்ப ஓய்வூதியத்தை எப்படி பெற தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஒருவரை அரசு ஊழியராக பணி நியமன செய்வதற்கு முன்பு உரிய மருத்துவ அதிகாரியால் பரிசோதிக்கப்பட்டு அவர் பணியில் சேர்வதற்கு தகுதி என்று அறிவிக்கப்பட்டு பணியில் சேர்ந்து ஓராண்டு காலம் பணி நிறைவடைவதற்கு முன்பாக அந்த அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

எனவே மேற்கண்ட விதியின்படி ஓராண்டு காலம் பணி நிறைவடைவதற்கு முன்பாக ஓர் அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்தினருக்கு, குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

இந்த தீர்ப்பை " தமிழ்நாடு அரசு Vs M. தெய்வசிகாமணி (2009-3-MLJ-1) மற்றும் உச்சநீதிமன்றம் S. K. துவா Vs ஹரியானா மாநில அரசு (AIR-2008-SC-1077) ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வழங்கியுள்ளது.

W. P. NO - 12437/2007, dt - 3.12.2014

Radha Bai and Another Vs The Secretary, Tamilnadu

2015-1-MLJ-819

ஊழல் செய்த அரசு அதிகாரிகளை கைது செய்ய.....

ஊழல் செய்த அரசு அதிகாரிகளை கைது செய்ய.....

சென்னை ஐகோர்ட்டில், கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில்வழக்கறிஞர் திரு புகழேந்தி அவர்கள் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் அவர் வினித் நாராயணன் என்பவரது வழக்கை விசாரித்த உச்சநிதிமன்றம்,, ஊழல் குற்றச்சாட்டில் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேரடியாக வழக்குப்பதிவு செய்யலாம். இதற்காக அரசு ஒப்புதல் தேவையில்லை என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

ஆனால், அதற்கு நேர்மாறாக, தமிழக அரசு கடந்த 1988–ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தால், அந்த ஊழல் புகாரை மாநிலஅரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும். அந்த புகார் மீது தமிழக விஜிலென்ஸ் கமிஷன் ஆய்வு செய்து, ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னரே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேற்கொண்டு விசாரிக்க முடியும் என்று கூறியுள்ளது. ஆனால், தமிழக அரசின் கீழ் நிலை அதிகாரிகள் மீது இதுபோன்ற ஊழல் புகார் வந்தால்,லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எந்த முன் அனுமதியும் இல்லாமல், நேரடியாக வழக்கு பதிவு செய்கின்றனர்.

அரசு ஊழியர்கள் மத்தியில் பாகுபாடோ, பாரபட்சமோ இருக்கக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அனைத்து ஊழியர்கள் மீதும் ஒரே விதமாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். எனவே, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதான ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும்! என்று அவர் கோரியிருந்தார்..

இந்த வழக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில், தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் அவர்கள் அரசாணை ஒன்றை கடந்த 2016ம் வருடம், பிப்ரவரி மாதம் 2–ந் தேதி  வெளியிட்டார்.

அந்த அரசாணையில்,

அந்தஸ்து அல்லது குரூப் போன்றவற்றை தவிர்த்து, எந்த நிலையில் உள்ள அரசு அலுவலராக இருந்தாலும், அவர் மீது ஊழல் புகார் கூறப்பட்டால், அந்த புகாரை கண்காணிப்பு ஆணையத்துக்கு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் அனுப்பி வைக்க வேண்டும். இந்த புகாருக்கான விசாரணைக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் உத்தரவிடுவதற்கு முன்பு, தமிழக அரசின் கருத்தை கண்காணிப்பு ஆணையம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

அரசாணை ரத்து

கடந்த 01.07.2016 அன்று வழக்கறிஞர் திரு புகழேந்தி அவர்களின் வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் லஞ்ச புகாரில் அரசு அதிகாரிகளை கைது செய்ய அனுமதி பெற வேண்டும் என்ற தமிழக அரசின் புதிய அரசாணை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

அரசு ஊழியர் நம்பிக்கை மோசடி ,போலிஆவணம், தயாரித்தல் ,குற்ற உடந்தை, ஆகிய குற்றச்சாட்டு சம்பந்தமாக வழக்கு,பதிய, நடத்த, அரசின் முன் அனுமதி தேவை யில்லை!

Public Servant – Sanction for Prosecution 2015 STPL(Web) 314 SC (SC)(DB) - Judgment Date: 13-4-2015 - No sanction required for cheating, fabrication of records or misappropriation


INSPECTOR OF POLICE AND ANOTHER Vs. BATTENAPATLA VENKATA RATNAM AND ANOTHER

Criminal Procedure Code, 1973, Section 197 – Penal Code, 1860, Sections 420, 468, 477A, 120B read with 109 – Public Servant – Sanction for Prosecution – Whether sanction under Section 197 ‘CrPC’ is required to initiate criminal proceedings in respect of offences under Sections 420, 468, 477A, 120B read with 109 IPC? – Held that alleged indulgence of the officers in cheating, fabrication of records or misappropriation cannot be said to be in discharge of their official duty – Their official duty is not to fabricate records or permit evasion of payment of duty and cause loss to the Revenue – Learned Magistrate has correctly taken the view that if at all the said view of sanction is to be considered, it could be done at the stage of trial only – Impugned orders passed by High Court quashing proceedings on the sole ground that there was no sanction under Section 197 CrPC liable to be set aside.
Equivalent Citation: JT 2015 (4) SC 147 : 2015(5) SCALE 253