Thursday, November 30, 2017

குடும்ப உறவு சம்பந்தப்பட்ட வழக்குகளில் இடைக்கால ஜீவனாம்சம் கேட்க முடியுமா?

குடும்ப உறவு சம்பந்தப்பட்ட வழக்குகளில் தரப்பினர்கள் தங்கள் இஷ்டத்திற்கு இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் மனுதாக்கல் செய்து இடைக்கால ஜீவனாம்சம் கேட்க முடியுமா?

எந்த சூழ்நிலையில் இடைக்கால அரசு கேட்டு மனுத்தாக்கல் செய்யலாம்?

இடைக்கால ஜீவனாம்சம் கேட்டு இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்களை தரப்பினர்கள் தாக்கல் செய்யும் சத்திய பிரமாண வாக்குமூலங்களை கொண்டு தான் நீதிமன்றங்கள் முடிவு செய்ய வேண்டும் என்பதை நீதிபதிகள் தங்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் உத்தரவிடுவது என்பது, இந்து திருமணச் சட்டம் பிரிவு 25 அல்லது இந்து மகவேற்பு மற்றும் வாழ்க்கை பொருளுதவிச் சட்டம் அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 ன் கீழ் பிறப்பிக்கப்படும் உத்தரவுக்கு ஒப்பானதாகும். தரப்பினரில் ஒருவர் பணம் சம்பாதிக்க எந்த வகையான தடையும் இல்லாத நிலையில் மற்றொருவரை நம்பித்தான் வாழ்வதாக கூறி இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் வாழ்க்கை துணைவரிடமிருந்து இடைக்கால ஜீவனாம்சம் கேட்டு மனு ஒன்றை தாக்கல் செய்ய முடியாது.

வழக்கு செலவுகள் என்பதற்கு இந்து திருமணச் என்று 24 ல், வழக்கறிஞர் கட்டணம், முத்திரைத்தாள் அல்லது நீதிமன்ற கட்டணம், குமஸ்தா செலவு, எழுதுபொருள் செலவு மற்றும் சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு ஆகும் செலவு ஆகியவை அடங்கும்.

இராஜஸ்தான் உயர்நீதிமன்றம் " கோவிந்தசிங் Vs திருமதி. வித்யா (AIR-1999-Rajasthan-304)" என்ற வழக்கில், இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் இருதரப்பினரும் இடைக்காலமாக ஜீவனாம்சம் கேட்டு மனுத்தாக்கல் செய்யலாம். ஒரு தரப்பினருக்கு வருமானம் இல்லாத நிலையில் மற்றொரு தரப்பினர் ஜீவனாம்சம் தரக்கூடிய நிலையில் இருந்தால் அவரிடம் ஜீவனாம்சம் கேட்டு மனுத்தாக்கல் செய்யலாம். ஆனால் சம்பாதிக்கக்கூடிய தகுதியுடையவ கணவர் தான் சம்பாதிப்பதை வேண்டுமென்றே நிறுத்தி விட்டு தன் மனைவியின் சம்பாத்தியத்தை சாரந்திருக்கலாம் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. Anglo Saxon சட்டவியலில் எந்தவொரு நபரும் தனக்குத்தானே வருமானம் இல்லாதவராக ஆக்கிக் கொள்ளக்கூடாது என்ற ஒரு முதுமொழி உள்ளது. அந்த முதுமொழியானது சம்பாதிக்கும் கணவர்களுக்கு பொருந்தும். ஒரு நபர் தனக்குத்தானே வருமானமில்லாதவராக மாற்றிக் கொண்டால் அவர் தன்னுடைய வாழ்க்கை துணைவரிடம் ஜீவனாம்சம் கோருவதற்பகு தகுதியற்றவர் ஆகிறார் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

கல்கத்தா உயர் நீதிமன்றம் " ரெசேனா மித்ரா Vs B. srimathi santhana mithra (AIR-2004-Calcutta-61)" என்ற வழக்கில், வழக்கு செலவுத் தொகை அல்லது வழக்கு நிலுவையில் இருக்கும் போது இடைக்காலமாக ஜீவனாம்சத்தை நிர்ணயிப்பதற்கு நிலையான நெறிமுறைகள் எதுவும் கிடையாது. நீதிமன்றம் இருதரப்பினர்களின் தகுதியை அடிப்படையாக கொண்டு அவர்களுடைய தேவைகள், குழந்தை மற்றும் மனைவி ஆகியோர்களுக்கு ஏற்படும் தேவையான செலவுகளுக்கான தொகையை கொடுக்கும் சக்தி ஆகியவற்றை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். இடைக்கால ஜீவனாம்சத்தை நிர்ணயிக்கும் பொழுது தற்கால வாழ்க்கை முறைக்கு ஆகும் செலவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு நீதிமன்றம் நிர்ணயிக்க வேண்டும். நல்ல திடகாத்திரமாக இருக்கும் ஒருவர் தானாகவே தனது சம்பாத்தியத்தை நிறுத்திக் கொண்டு தனது துணையிடம் ஜீவனாம்சம் கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் " யஸ்பால் சிங் தாக்கூர் Vs அஞ்சனா (AIR-2001-M.P-67)"  என்ற வழக்கில், கணவரான மனுதாரர் அவராகவே ஓய்வான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு முடிவெடுத்துக் கொண்டு, பணம் சம்பாதிக்கும் திறமை இருந்தும் அதற்கான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருக்கும் ஒருவர் இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் மனுதாக்கல் செய்ய முடியாது, அப்படி மனுத்தாக்கல் செய்யலாம் என்கிற நிலை இருந்தால் அது அந்த சட்டப்பிரிவை ஏற்படுத்தியதற்கான நோக்கத்தை கெடுப்பதாக அமைந்துவிடும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

நல்ல உடல் நலத்துடன் இருக்கும் ஒருவர் அவருடைய மனைவியை பராமரிக்க கடமைபட்டவராவார். எந்த சூழ்நிலையிலும் அவர் அந்த கடமையை விட்டு வெளியே வர முடியாது. அதே நேரத்தில் பிரிவு 24 ன் கீழ் உத்தரவிடும் போது நீதிமன்றம் தரப்பினர்களின் பொருளாதார வசதியை மட்டுமே தனது கவனத்தில் கொள்ள வேண்டும். தரப்பினர்களின் நடத்தை குறித்து நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டியதில்லை.

எனவே நல்ல உடல் நலத்துடனும், கல்வித் தகுதியோடும் ஏற்கனவே வேலையில் இருந்த ஒரு நபர், அந்த வேலையை விட்டு வெறுமனே வீட்டில் இருந்து கொண்டு தன்னுடைய வாழ்க்கை துணைவரிடம் இடைக்கால ஜீவனாம்சம் என்ற வழக்கில் பணத்தை பறிக்கக்கூடாது. இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 அதற்கு உதவி செய்யாது. வெறுமனே சோம்பேறியாக இருந்து ஒரு நபருக்கு சட்டம் எப்போதும் உதவிக்கு வராது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRP. NO - 1909/2010,  DT - 22.3.2013

ரமேஷ் Vs அம்பிகேஸ்வரி

2013-2-LW-CIVIL-901

நீதிமன்ற தீர்ப்பின்படி வாதி தீர்ப்புத் தொகையை வசூலிப்பதற்கு முதலில் பிரதிவாதியின் சொத்தை பற்றுகை செய்யத்தான் நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்ய வேண்டுமா? அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி முதலில் மனுத்தாக்கல் செய்ய முடியாதா?

நீதிமன்ற தீர்ப்பின்படி வாதி தீர்ப்புத் தொகையை வசூலிப்பதற்கு முதலில் பிரதிவாதியின் சொத்தை பற்றுகை செய்யத்தான் நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்ய வேண்டுமா? அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி முதலில் மனுத்தாக்கல் செய்ய முடியாதா?


வெங்கடாசலம் என்பவர் ரூ. 32,600-ஐ வசூல் செய்வதற்காக வீராசாமி என்பவர் மீது ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்பிறகு வெங்கடாசலம், வீராசாமியை கைது செய்து பணத்தை வசூல் செய்து தரும்படி கேட்டு ஒரு நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவிற்கு வீராசாமி பதிலுரை தாக்கல் செய்தார். அதில் தனது சொத்தை பற்றுகை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, சிறையில் அடைப்பதற்கு நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்திருப்பது தவறு என்று கூறி நிறைவேற்றுதல் மனுவை தள்ளுபடி செய்யுமாறு கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி வீராசாமி 14.8.2009 ஆம் தேதிக்குள் தீர்ப்புத் தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

மேற்படி உத்தரவை எதிர்த்து வீராசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதியரசர் திரு. கல்யாண சுந்தரம் அவர்கள், சென்னை உயர்நீதிமன்றம் " A. K. சுப்பிரமணிய செட்டியார் Vs A. பொன்னுச்சாமி செட்டியார் (1959-AIR-MD-777)" என்ற வழக்கில், தீரப்பினை பெற்றவர், தீர்ப்புக் கடனாளியிடமிருந்து தீர்ப்புத் தொகையை வசூல் செய்வதற்கு தீர்ப்புக் கடனாளியின் சொத்தை பற்றுகை செய்வதன் மூலம் அல்லது அவரை கைது செய்து உரிமையியல் சிறையில் அடைப்பதன் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளலாம். தீர்ப்பினை பெற்றவர் இந்த இரண்டு நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளதாக கூறினார்.

மேலும் சென்னை உயர்நீதிமன்றம் "ஜெகதீஸ்வரன் Vs பெடரல் பேங்க், பொள்ளாச்சி கிளை, கோயம்புத்தூர் (1994-1-MLJ-297)" என்ற வழக்கில், 1ஆம் எதிர்மனுதாரரின் சொத்தின் மீது அல்லது அவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளுவதென்பது தீர்ப்பை பெற்றவரின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும் அவ்வாறு தேர்வு செய்வதை சட்டம் அனுமதிப்பதாக தீர்ப்பு கூறியுள்ளதாக கூறினார்.

மேலும் சென்னை உயர்நீதிமன்றம் "கணேஷ் Vs சந்திரன் (2006-3-CTC-546)" என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் " ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா Vs நெசஸ் இன்டெக்ஸ் போர்ட் (AIR-1992-SC-1740)" என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பினை பின்பற்றி, தீரப்பினை பெற்றவர் அந்த தீரப்பினை நிறைவேற்றுவதற்கு அவர் எந்தவொரு முறையிலும் நடவடிக்கை எடுக்கலாம். அவர் இந்த முறையில் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளதாக கூறினார்.

எனவே பணத்தை வசூலிக்க தீர்ப்பை பெற்றவர் முதலாவதாக தீர்ப்பு கடனாளியை சிறையில் அடைக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் என்று மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் சொத்தைதான் பற்றுகை செய்ய முதலாவதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் கூறி தீர்ப்பு வழங்கினார்.

CRP. NO - 1508/2010, DT - 18.12.2013

T. Veerasamy Vs Venkatachalam

2014-1-TLNJ-CIVIL-485

ஏல விற்பனையை ரத்து செய்வதற்கு எத்தனை நாட்களுக்குள் தீர்ப்புக் கடனாளி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும்?

ஒரு சொத்தை நீதிமன்றத்தின் மூலம் ஏலத்தில் விற்கப்பட்ட பிறகு அந்த ஏல விற்பனையை ரத்து செய்வதற்கு எத்தனை நாட்களுக்குள் தீர்ப்புக் கடனாளி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும்?


உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 21 விதிகள் 89 மற்றும் 92 மற்றும் காலவரையறைச் சட்டம் பிரிவு 127 ஆகியவற்றின் படி ஒரு சொத்து நீதிமன்ற ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் அந்த தீர்ப்புத் தொகையை, தீர்ப்புக் கடனாளி நீதிமன்றத்தில் வைப்பீடு செய்ய வேண்டும். அவ்வாறு வைப்பீடு செய்ய தவறினால் தீர்ப்பு கடனாளி ஏல விற்பனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிப்பதை தவிர நீதிமன்றத்திற்கு வேறு வழியில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றம் " ராம் கரண் குப்தா Vs J. S. எக்ஸிம் லிமிடெட் (2012-6-CTC-SC-710)" என்ற வழக்கில் தெளிவாக கூறியுள்ளது.

உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 21 விதிகள் 89 மற்றும் 92, காலவரையறைச் சட்டம் பிரிவு 127 "ஆகியவற்றை பார்க்கும் பொழுது உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 21 விதி 89 ன் கீழ் மனுதாக்கல் செய்வதற்கோ, தேவையான தொகையை வைப்பீடு செய்வதற்கோ எந்த கால அளவையும் நிர்ணயிக்கவில்லை. ஆனால் காலவரையறைச் சட்டம் பிரிவு 127 ஆனது 60 நாட்களுக்குள் அந்த மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

எனவே சட்டத்தின் படி நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அளவிற்குள் தீர்ப்புக் கடனாளி விற்பனைத் தொகையை நீதிமன்றத்தில் வைப்பீடு செய்ய தவறி விட்டால், உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 21 விதி 89 ன் கீழ் தீர்ப்பு கடனாளியால் ஏல விற்பனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உத்திரவிடுவதை தவிர நீதிமன்றத்திற்கு வேறு வழியில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

C. A. NO - 4469/2014, DT - 11.4.2014

அன்னபூர்ணா Vs மல்லிகா அர்ஜுன் மற்றும் பலர்

2014-2-TLNJ-CIVIL-110

வங்கிக் கடனை வசூலிப்பதற்காக சம்மந்தப்பட்டவரின் ஓய்வூதிய கணக்கில் கை வைக்க முடியாது:

ஒருவர் பெற்ற வங்கிக் கடனை  வசூலிப்பதற்காக  சம்மந்தப்பட்டவரின்  ஓய்வூதிய கணக்கில் கை வைக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
*********************************************************************
Banks cannot attach pension account to recover loan dues : Madras HC
A Savings Bank account maintained primarily for the purpose of depositing monthly pension amount could not be attached by a bank just because the account holder had defaulted repayment of a loan availed from the same institution, the Madras High Court Bench here has held.
Justice K. Ravichandra Baabu passed the order while allowing a writ petition filed by A. Muthuiruvakkal of Nagercoil in Kanyakumari district. She had challenged an order passed by a nationalised bank on August 13 preventing her from operating the pension account for recovering the outstanding loan amount.
“If there is any outstanding due payable by the petitioner, it is for the respondent bank to work out its remedy in the manner known to and permissible by law before the appropriate forum. Without doing so, resorting to attach the pension amount by way of passing the impugned order is impermissible,” he said.
The judge set aside the bank’s order and directed it to permit the petitioner to operate the account without any hindrance. He relied upon a judgement passed by the Supreme Court in 2009 to hold that pension and gratuity amount could not be attached for recovery of dues.
In that judgement, the apex court had criticised the Rajasthan High Court for ordering attachment of even Fixed Deposits without giving attention to the fact that the loan defaulter in that case had actually converted his pension and gratuity amount into fixed deposits.
In the present case, Ms. Muthuiruvakkal had claimed that the bank had deducted about Rs.14,681 from her pension account after preventing her from operating the account. On its part, the bank stated that it had no other option but to pass the order under challenge to recover the dues.
Source: thehindu. DECEMBER 03, 2015

தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்

தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் 1993-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது. இவ்வாணையத்தில் மாநில மகளிர் ஆணையத் தலைவி மற்றும் 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மகளிர் ஆணையம் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கவும், பெண்களுக்கு சமத்துவம் வழங்கவும்,

பெண்களுக்கெதிரான அனைத்து வகை இன்னல்களிருந்து பாதுகாப்பினை உறுதி செய்யவும் மற்றும் குடும்பத்திலும், சமுதாயத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்கு தேவையான அதிகாரங்களைப் பெற்ற ஒரு சட்ட ரீதியான அமைப்பாகும். மேலும் மகளிர் ஆணையம் பெண்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை கண்டறிந்து அது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. இவ்வாணையம் பெண்கள் சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆணையத்தின் குறிக்கோள்கள்

மகளிரின் நலனை உறுதி செய்து அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல்.பாலினப்பாகுபாடு குறித்த விவகாரங்களை கவனித்தல்.பெண்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆணையத்தின் பரிந்துரையை அரசுக்கு அனுப்பி வைத்தல்.

மகளிர் ஆணையத்தின் செயல்பாடுகள்

இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சட்ட பிரிவுகள் பாதுகாப்புகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்தான விபரங்களை கவனித்தல்.பெண்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் பல்வேறு நிறுவனங்கள் மூலம் முறையாக செயல்படுத்தப்படாத போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்பெண்களுக்கு நீதி கிடைக்க தவறும் பட்சத்தில் தேவையான நீதியைப் பெறுவதற்கு உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளஅரசுக்கு பரிந்துரை செய்தல்.பெண்களின் உரிமைகள் மறுக்கப்படும் நிகழ்வுகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு உரிய அதிகாரம் பெற்ற அலுவலர்கள் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல். பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கண்டுள்ளவாறு பாதுகாப்பிற்கான உத்திரவாதம் வழங்கப்படாத நிலையிலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மகளிர் ஆணையத்தை நேரிடையாக அணுகலாம

Wednesday, November 29, 2017

நத்தம் நிலம் என்கிற வகைபாட்டிற்குள் வருகிற நிலையில் யார் பெயருக்கு ஒரு சொத்திற்கான பட்டா உள்ளதோ அவரே உரிமையாளராக கருதப்படுவார்.

 ஒரு நிலம் நத்தம் நிலம் என்கிற வகைபாட்டிற்குள் வருகிற நிலையில், அந்த இடம் யாருடைய சுவாதீனத்தில் உள்ளதோ அவரையே அந்த சொத்தின் உரிமையாளராக கருத வேண்டும். மேற்படி நிலம் குறித்து ஒருவருடைய பெயரில் பட்டா வழங்கப்படவில்லை என்றாலும், நீண்ட நாட்களாக யாருடைய சுவாதீனத்தில் அந்த சொத்து உள்ளதோ அவருக்கு அந்த சொத்தில் ஓர் உரிமை மூலம் ஏற்பட்டு விடுகிறது. இது தான் சட்டத்தின் நிலைப்பாடாகும். யார் பெயருக்கு ஒரு சொத்திற்கான பட்டா உள்ளதோ அவரே உரிமையாளராக கருதப்படுவார்.
 (நத்தம் நிலத்தை பொறுத்தவரை)

                               ஓர் இந்துப் பெண் அவருடைய மூதாதையர் வழி சொத்தை வாரிசுரிமை அடிப்படையில் பெறுவது அல்லது திருமணத்தின் போது அவருக்கு அளிக்கப்படும் சொத்துக்கள் ஆகியவற்றை மட்டுமே சீதனச் சொத்தாக கருத முடியும் என்ற கருத்து பெரும்பாலான மக்களிடம் நிலவி வருகிறது.

                                                                   சென்னை உயர்நீதிமன்றம் " K. Natarajan Vs Sundari and Others (2012-1-MWN-CIVIL-1),(2011-5-LW-341)" என்ற வழக்கில், ஒரு சொத்தை ஓர் இந்துப் பெண் தன்னுடைய சுய சம்பாத்தியத்தின் மூலம் பெற்றிருந்தாலும்கூட அதனை அவருடைய சீதனச் சொத்தாக மித்தாக்சாரா இந்து சட்டப்படி கருதப்பட வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

மித்தாக்சாரா இந்துச் சட்டப்படி, ஓர் இந்துப் பெண் ஒருவர் பல வகையில் சொத்துக்களை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கீழ்க்கண்ட வகையில் ஓர் இந்துப் பெண் சட்ட ரீதியாக சொத்துக்களை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
1. உறவினர்களிடமிருந்து கொடையாகவோ, உயில் ஆவணத்தின் மூலமோ பெறலாம்
2. 3 ஆம் நபர்களிடமிருந்து கொடையாகவோ, உயில் ஆவணத்தின் மூலமோ பெறலாம்
3. பாகப்பிரிவினைபடி சொத்தை பெறலாம்
4. வாழ்க்கை பொருளுதவி தொகைக்காக ஒரு சொத்து அளிக்கப்பட்டிருக்கலாம்.
5. வாரிசுரிமை அடிப்படையில் சொத்தை பெற்றிருக்கலாம்
6. தொழிலின் மூலம் சொத்தை பெற்றிருக்கலாம்
7. சமரச உடன்படிக்கையின் அடிப்படையில் சொத்தை பெற்றிருக்கலாம்
8. எதிரிடை உரிமை மூலமாக சொத்தை பெற்றிருக்கலாம்
9. சீதனப் பணத்தின் மூலம் சொத்தை வாங்கியிருக்கலாம். அல்லது சீதனப் பணத்தை சேமித்து வைத்ததில் வந்த வருமானத்தை கொண்டு சொத்தை வாங்கியிருக்கலாம்
10. மேலே குறிப்பிட்டுள்ள வகைமுறைகளின் கீழ் அல்லாமல் உயில் ஆவணங்களின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களுக்கு கொடையாக அளிக்கப்பட்ட சொத்துக்களாக கருதப்படும்
.
எனவே ஓர் இந்துப் பெண் ஒரு சொத்தை சுயமாக சம்பாதித்திருந்தாலும் கூட அதனை அவருடைய சீதன சொத்தாக தான் இந்து மித்தாக்சாரா சட்டப்படி கருத வேண்டும் என்றும் அந்த பெண்ணின் இறப்பிற்கு பின் இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 14 ன்படி அவருடைய வாரிசுகளுக்கு அந்த சொத்தில் முழு உரிமை ஏற்பட்டு விடும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
S. A. NO - 1308/2014,DT - 17.3.2015
Muthusamy and Others Vs A. Marusamy and Tulasiyammal
(2016-3-MWN-CIVIL-487)
 சென்னை உயர்நீதிமன்றம் " வள்ளியம்மாள் Vs S. ஆறுமுக கவுண்டர் (2001-1-CTC-708)" என்ற வழக்கில், வாதியின் குடும்பத்திற்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத வேற்று மனிதராக பிரதிவாதி உள்ள நிலையில், அந்த உயில் எழுதப்பட்டது குறித்து சந்தேகம் உள்ளது என்கிற ஒரு கோரிக்கையை முன்வைப்பதற்கு பிரதிவாதி தகுதி உடைய நபராக கருத முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் " S. கணேசன் Vs S. குப்புசாமி (2002-2-LW-636)" என்ற வழக்கிலும், உயிலை எழுதி வைத்தவரோடு எந்த வகையிலும் உறவு முறையில் சம்மதம் இல்லாத ஒருவர் ஒர் உயிலை மெய்பிக்க வேண்டும் என்று கோர முடியாது என்றும் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 68 ன் கீழ் அந்த உயிலை மெய்பிக்கும்படி கோர முடியாது என்றும் தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே ஓர் உயிலின் உண்மைத்தன்மை குறித்து, அந்த உயிலை எழுதி வைத்தவருக்கு எந்த வகையிலும் உறவினரல்லாத மூன்றாம் நபர் ஒருவர் எந்த ஒரு வினாவையும் எழுப்ப முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
S. A. NO - 1515/1999,DT - 26.4.2016
பாக்கியம்மா Vs இராமசந்திரப்பா
(2016-3-TLNJ-CIVIL-352)

குற்றவியல் நடைமுறைச் சட்டம்

உச்சநீதிமன்றம் "இராம்பிரகாஷ் Vs அரியானா மாநில அரசு (AIR-1978-SC-1282)" என்ற வழக்கில், ஒரு வழக்கில் கைப்பற்றப்பட்ட பொருட்களை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 457 ன் கீழ் திரும்ப ஒப்படைப்பது நீதியின் பால் செயல்படுத்த வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் டெல்லி உயர்நீதிமன்றம், CRL. M. C. NO - 4485/2013, மற்றும் CRL. M. A. NO - 16055/2013 - Manu/De/2131/2014 =2014-DLT-646" என்ற வழக்கில் பத்தி 59 முதல் 64 வரையில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளது.

59. யாருடைய வீட்டிலிருந்து திருடப்பட்டதாகவோ, கொள்ளையடிக்கப்பட்டதாகவோ குறிப்பிட்டு கைப்பற்றப்பட்ட மதிப்புமிக்க பொருட்களை, அந்த பொருட்களுக்கு சட்டப்படி உரிமை கோருகிற நபருக்கு நீதிமன்றம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அந்த பொருட்கள் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்வதோடு, அவற்றை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, ஒரு பிணையப் பத்திரத்தையும் பெற்றுக் கொண்டு, அந்த பொருட்களை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

60. அந்த பொருட்களை புகைப்படமாக எடுத்ததற்கு பிறகு அந்த புகைப்படத்தில் புகார்தாரர், எதிரி மற்றும் எந்த நபரிடம் ஒப்படைக்கப்படுகிறதோ ஆகியோர்களின் கையொப்பங்களையும் அந்த புகைப்படத்தில் பெற வேண்டும். தேவைப்பட்டால் அரசு அங்கீகாரம் பெற்ற தங்க நகை மதிப்பீட்டாளரிடமிருந்து அந்த நகை ஆபரணங்கள் குறித்த மதிப்பீட்டை நீதிமன்றம் பெறலாம்.

61. அந்த வழக்கு விசாரணையின் போது ஏற்கனவே திருப்பி ஒப்படைக்கப்பட்ட மதிப்பு மிக்க பொருட்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் படி வற்புறுத்தாமல் புகைப்படம் மற்றும் அந்த மதிப்புமிக்க பொருட்கள் குறித்த விவரக் குறிப்பு ஆகியவை குறித்து சாட்சி விசாரணையின் மூலம் அந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

62. அந்த பொருட்கள் புகார்தாரர் அல்லது அந்த பொருட்கள் யாரிடமிருந்து கைப்பற்றப்பட்டதோ அந்த நபர் யாரும் அந்த பொருட்களுக்கு உரிமை கோராத நிலையில், அவற்றை பெட்டகத்தில் வைத்திருக்கும் படி நீதிமன்றம் உத்தரவிடலாம்.

63. ஒரு வழக்கில் மேற்கொண்டு புலன் விசாரணை செய்வதற்கு அல்லது அடையாளம் காட்டப்படுவதற்கு அந்த பொருட்கள் தேவைப்படுமேயானால், அவற்றை மீண்டும் புலன் விசாரணை அதிகாரியிடம் நீதிமன்றம் ஒப்படைக்கலாம். இருந்தாலும் அந்த பொருட்களை புலன் விசாரணைக்காக மற்றும் அடையாளம் காண்பதற்காக நீண்ட நாட்கள் புலன் விசாரணை அதிகாரி அவருடைய பாதுகாப்பில் வைத்திருக்க அனுமதிக்கக்கூடாது.

64. அந்த பொருட்கள் காவல்துறையினரின் பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அந்த பொருட்கள் குறித்து ஒரு விபரக் குறிப்பினை தயாரித்ததற்கு பிறகு அவற்றை ஒரு பெட்டகத்தில் வைக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் "B. லலித்சந்த் நாடார் Vs மாநில அரசு (1990-2-MWN-CRL-23)" என்ற வழக்கில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 451 ன் கீழ் பொருட்களை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தாலும் அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட அந்த பொருட்களுக்கு அவர் உரிமையாளராக இருந்தாலும், அந்த பொருட்களை நீதிமன்றத்தின் பிரதிநிதி என்கிற வகையில் அவரிடம் அவருடைய பாதுகாப்பில் வைத்திருக்கும்படி இடைக்காலமாக ஒப்படைக்கப்பட்டுள்ளதே தவிர அந்த பொருட்களின் மீது அவருக்கு தனிப்பட்ட எந்த உரிமையும் கிடையாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே பொருட்களை அதன் உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கும் போது நீதிமன்றங்கள் கு. வி. மு. ச பிரிவுகள் 451 மற்றும் 457 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள சட்ட நெறிமுறைகளை கருத்தில் கொண்டு நியாயமான, தேவையான, நடைமுறைகடுத்தக்கூடிய நிபந்தனைகளை மட்டுமே விதித்து உத்தரவிட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது
.
CRL. RC. NO - 6/2016, DT - 11.6.2016
(2016-2-MLJ-CRL-98)