Tuesday, February 13, 2018

இந்திய ஊழல் தடுப்புச் சட்டம், 1988

இந்தியக் குடியரசில் ஊழலைத் தடுக்க 1988ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

வரையறை

இச்சட்டத்தின்படி லஞ்சத்தின் வரையறை:

பொது ஊழியர் தன்னால் செய்யப்பட வேண்டிய அதிகாரப் பூர்வமான வேலைக்கு சட்டப்படி பெற வேண்டிய ஊதியத்தை தவிர கைகூலி பெறுவது.பொது ஊழியம் செய்பவர் மறுபயன் இல்லாமல் விலை மதிப்புள்ள பொருட்களை தன்னுடைய அலுவல் நடவடிக்கையில் ஈடுபட்டு ஒருவரிடம் வாங்குவது.

இதன்படி லஞ்சம் வாங்குவது குற்றம் என கருதப்பட கீழ்கண்ட அம்சங்கள் தேவை:

அதில் சம்பந்தப்பட்டவர் பொது ஊழியராக இருத்தல் வேண்டும்.அவர் செய்யும் வேலை அதிகாரப் பூர்வமாக இருக்க வேண்டும்.பொது ஊழியர் தான் செய்ய வேண்டிய வேலையை செய்வதற்கோ அல்லது செய்யாமல் இருப்பதற்க்கோ சட்டத்திற்குப் புறம்பாக பணம் கோருதல் அல்லது பெறுதல்.பொது ஊழியரின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகித்துப் பண மதிப்புள்ள அனுகூலம் பெறத் தகாத சலுகை அளித்தல்.ஒரு குடிமகனிடமிருந்து பொது ஊழியர் அதிகாரப் பூர்வமான கடமையைச் செய்வதற்காக மறுபயனின்றி விலை மதிப்புள்ள பொருளைப் பெறுவதும் லஞ்சமே.அந்த பொது ஊழியர் நேரடியாகவோ அல்லது முகவர் மூலமாகவோ லஞ்சம் பெற்றால் அவரும் அவருக்கு லஞ்சம் வழங்குபவர்களும் குற்றவாளிகள்.பொது ஊழியர் தனது வருமான வழிவகைகளுக்குப் பொருந்தாத விதத்தில் சொத்துக்களைக் சேர்த்தலும் சட்டத்தின் படி குற்றம் என வரையறுக்கப் பட்டிருக்கிறது.

தண்டனை

லஞ்ச ஊழலை சட்டத்தின்படி தவறு இழைத்த ஒரு நபருக்குத் குறைந்த பட்சம் ஆறு மாதம் ஐந்து ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

ஊழல் ஆணையம்

ஊழலை ஒழிப்பதற்கு இந்திய அரசுமத்திய விழிப்புணர்வு ஆணையத்தைஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுத் துறைகளில் ஊழல் குறித்த வழக்குகளை மத்திய புலனாய்வு குழுவும் மாநில அரசுத் துறைகளில் ஊழல் குறித்த வழக்குகளை கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்கள். தமிழகத்தில் இந்த அமைப்பு இயக்குநர் சென்னை மல்லிகை மாளிகையில் செயப்பட்டு வருகிறது. சர்தார் வல்லபாய் பட்டேல்பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் நாள் முதல் ஒரு வார காலம் ஊழல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு வாரமாக இந்தியா முழுவதும் அரசு அலுவலகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஊழல் குறித்து புகார் செய்யும் விதம்

ஊழல் குறித்து புகார் செய்யும் போது புகார்தாரர் தனது பெயரையும், முகவரியையும் தெளிவாகக் கூற வேண்டும். மத்திய அரசுத் துறை என்றால் மத்திய விழிப்புணர்வு ஆணையத்துக்கும், மாநில அரசுத் துறை என்றால் ஊழல் தடுப்பு இயக்குநருக்கும் புகார் செய்யலாம். ஒரு பொது ஊழியர் குறித்துப் பொய்யான புகார் தருவது இந்திய தண்டனைச் சட்டம்- பிரிவு 182 -இன் படி தண்டனைக்குரியது. பெயரில்லாத புகார்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

                        இன்ஷூரன்ஸ் பாலிசி! யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த     15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும். 

நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும். 

                            மதிப்பெண் பட்டியல்! யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்? 

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.

மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505. 

கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

                                ரேஷன் கார்டு! யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர். 

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை 

எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த  45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை:  சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை  அனுப்பி வைக்கப்படும்.

                            டிரைவிங் லைசென்ஸ்!  யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.

எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

                            பான் கார்டு! யாரை அணுகுவது?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு      45 நாட்கள்.

நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். 

                            பங்குச் சந்தை ஆவணம்! யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண். 

எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

                                கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

                                  டெபிட் கார்டு! யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

கணக்குத் தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?   ரூ.100.

கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

                                    மனைப் பட்டா! யாரை அணுகுவது..?

வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?

நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?   ரூ.20.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும். 

                                   பாஸ்போர்ட்! யாரை அணுகுவது..?

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?  ரூ.4,000.

கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

                                      கிரெடிட் கார்டு!யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை: 15 வேலை நாட்கள்.

நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.  

ஒருவரை கொலை செய்வதாக வெறும் வார்த்தைகளால் மிரட்டினால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506(i) & 506(2) ன் கீழ் வழக்கு தொடர முடியுமா?

***********************************************************************
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506(i) ன் கீழான குற்றத்தை பொறுத்து மதுரை உயர்நீதிமன்றம் " சீனிவாசன் Vs சார்பு ஆய்வாளர் (2009-4-MLJ-CRL-1118)" என்ற வழக்கில் தெளிவாக விவாதித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு பத்தி 11 ல் பின்வருமாறு கூறியுள்ளது.

ஒருவருக்கு பாதிப்பினை ஏற்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கம் இருந்தால் மட்டுமே இ. த. ச பிரிவு 506-ல் கூறப்பட்டுள்ளவை பொருந்தும். ஒருவருக்கு அபாயம் ஏற்படுத்த வேண்டும் என்கிற எந்த உள்நோக்கமும் இல்லாமல் வெறுமனே வெறும் வார்த்தைகளை பயன்படுத்துவது போதுமானதல்ல. ஒருவர் மற்றொருவரின் உடலுக்கு, புகழுக்கு அல்லது சொத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்பட்டார் என்பதை எடுத்துக் காட்டினால் மட்டுமே இ. த. ச பிரிவு 506-ன் கீழான குற்றச் செயல் நிகழ்ந்துள்ளதாக கருதப்படும்.

அதேபோல் மதுரை உயர்நீதிமன்றம் " இராஜன் Vs காவல்துறை ஆய்வாளர் (2008-2-MWN-CRL-258)" என்ற வழக்கில், பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு கீழ்க்கண்டவாறு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் பத்தி 10 - ல்

" இதே போன்ற சங்கதிகள் கொண்ட " உஷாபாலா Vs பஞ்சாப் மாநில அரசு (2002-2-CCC-320-P&H)" என்ற வழக்கில், பஞ்சாப் உயர்நீதிமன்றம் இ. த. ச பிரிவு 506(ii) ன் கீழான குற்ற நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

வெறுமனே மிரட்டுவதால் இ. த. ச பிரிவு 506-ன் கீழான குற்றச்சாட்டிற்கான முகாந்திரம் இந்த மனுதாரருக்கு எதிராக உள்ளதாக கருத முடியாது. எனவே இந்த மனுதாரருக்கு எதிராக எந்த வழக்கும் உருவாகவில்லை.

எனவே 15.7.1999 ஆம் தேதி இ. த. ச பிரிவுகள் 406 மற்றும் 498(A) ன் கீழ் பாட்டியாலா, சாதர் காவல் நிலையத்தில் குற்ற எண் 313 என்கிற எண்ணில் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் நிகழ்நிலை புகார்தாரரை மிரட்டியதாக மட்டுமே குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது  அவருடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று காவல்துறையினரின் பாதுகாப்பு அவரால் கோரப்படவில்லை. எனவே இ. த. ச பிரிவு 506(ii) ன் கீழான குற்றச்சாட்டும் நிலைக்கதக்கதல்ல என்கிற முடிவிற்கு இந்த நீதிமன்றம் வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் மதுரை உயர்நீதிமன்றம் " கிருஷ்யா டைல்ஸ் & போர்டடரிஸ் (மெட்ராஸ் பி. லிட்) Vs காவல்துறை ஆய்வாளர் (2006-2-CTC-642)" என்ற வழக்கில், 1 முதல் 3 வரையான எதிரிகள் தன்னை கொன்று விடுவதாக மிரட்டினார்கள் என்கிற குற்றச்சாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவாக கூறப்படும் அந்த கூற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முடியாது என்று கூறியுள்ளது.

இதேபோன்றதொரு தீர்ப்பு " D. சுப்பிரமணியன் சுவாமி Vs C. புஷ்பராஜ் (1998-1-CTC-300)" என்ற வழக்கிலும் கூறப்பட்டுள்ளது.

எனவே ஒருவரை கொலை செய்து விடுவதாக வெறும் வார்த்தைகளால் மட்டும் திட்டியதற்காக அவர் மீது இ. த. ச பிரிவுகள் 506(i) மற்றும் 506(ii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர முடியாது எனவும் அவ்வாறு தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் முடியும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. OP. NO - 18665/2014, DT - 21.4.2015

S. Selvakumar Vs Inspector of police, AWPS, Keelakkarai, Ramanathapuram District

2015-2-MWN-CRL-195

Friday, February 9, 2018

பத்திரப்பதிவு ஆவணத்தில் பிழையா?

பத்திரப்பதிவு செய்யும்போது பலரும், பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள தகவல்களைச் சரிவர படிக்கமாட்டார்கள்.வீட்டில் இருப்பவர்களிடம் கொடுத்தும் முழுமையாகப் படிக்காமல் விட்டுவிடுவார்கள். பத்திரப்பதிவு அலுவலம் சென்று, ஆவணத்தைப் பதிவு செய்து வந்த பிறகு, அதில் பிழை இருப்பதைக் கண்டுபிடிப்பார்கள். ஆவணங்களில் பிழை இருந்தால், பத்திரப்பதிவுக்குப் பிறகு சரி செய்ய முடியுமா?

பத்திரப்பதிவு என்பது வீடோ, மனையோ நமக்குச் சொந்தம் என்பதைக் காட்டும் ஆவணம். அந்த ஆவணத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் எந்தப் பிழையும் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம்.

தட்டச்சு செய்யும்போதோ பிழை ஏற்படுவது சகஜமே. இப்படிப் பத்திரப்பதிவு ஆவணத்தில் பிழை இருந்து, அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பின்னாளில் பெரும் பிரச்சினையாகிவிடும். பெயர், தந்தை பெயர், விலாசம், மனையின் விவரங்கள், தொகை போன்ற ஏதாவது விவரம் தவறாக இருந்தால்., பிற்காலத்தில் சொத்தை விற்கும்போதோ, பெயர் மாற்றம் செய்யும்போதோ பெரும் சிக்கலாகிவிடும். சிறு பிழையைக் காரணம் காட்டி சொத்து நமக்கு உரியது அல்ல என்று பேசும் அளவுக்கு நிலைமையை மோசமாக்கிவிடும்.

எனவே பத்திரப்பதிவுக்காக ஆவணங்களைத் தயார் செய்யும்போது வார்த்தைக்கு வார்த்தை கண்ணில் எண்ணெண்யை விட்டுப் படிக்க வேண்டும். சிறியதாக ஒரு தவறும் இல்லையென்றால் மட்டுமே சரியான ஆவணமாக இருக்கும். ஒரு வேளை பதிவு செய்த பிறகு ஆவணங்களில் தவறு இருந்தால் என்ன செய்வது? அதற்காக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எந்தப் பிழையாக இருந்தாலும் அதைச் சரி செய்துவிட முடியும்.

பிழை திருத்தும் ஆவணம் மூலமே பிழைகளைச் சரி செய்ய முடியும். அப்படிப் பிழைகளைத் திருத்தும் ஆவணத்தையும் பதிவு செய்ய வேண்டும். பெயர், விலாசம் போன்றவற்றில் கவனக் குறைவால் ஏற்படும் பிழைகளைத் திருத்தி பதிவு செய்யும்போது அதற்காகக் கட்டணங்கள் வசூலிக்கமாட்டார்கள்.

சிலர் தாய் பத்திரத்தில் உள்ள சர்வே எண்ணை தவறாகக் குறிப்பிட்டுவிடுவார்கள். சர்வே எண்ணை தவறாக குறிப்பிட்டிருந்தாலும் பிரச்சினையில்லை. மனையின் நான்கு எல்லைகள், பரப்பளவு, அமைவிடம் போன்ற தகவல்கள் தாய்ப் பத்திரத்தில் இருப்பதுபோலவே இருந்தால், பிழை திருத்த ரூ. 300 வரை செலவாகக்கூடும்.

எல்லாம் சரி, மனைக்கான அரசு வழிகாட்டி மதிப்பைத் தவறாகக் குறிப்பிட்டால் பிழையைத் திருத்த முடியுமா? இந்தப் பிழை சில ஆண்டுகள் கழித்து தெரிய வந்தால் அலைய நேரிடும். இடைப்பட்ட ஆண்டுகளுக்குள் அரசு வழிகாட்டி மதிப்பு மாறியிருக்கும்.

அந்தப் பிழையைத் திருத்தும்பட்சத்தில் வித்தியாசத் தொகைக்கு முத்திரைத் தீர்வைக் கட்டணம், பதிவுக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த சொல்லக்கூடும். கூடுதல் முத்திரைக் கட்டணத்தைச் செலுத்தாமல் இருக்க மேலதிகாரிகள் வரை முறையீடு செய்ய வேண்டியிருக்கும். எனவே தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.

இப்படிச் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, பத்திரப்பதிவு ஆவணங்களைப் பதிவு செய்வதற்கு முன்பே, எழுத்துக்கு எழுத்து, வார்த்தைக்கு வார்த்தை முழுமையாகப் படித்துவிடுவது நல்லது. வழக்கறிஞர் மூலமும் ஒருமுறை படித்துக்கொள்வதும் எதிர்காலத்தில் சிக்கலைத் தவிர்க்க உதவும்.   

கையெழுத்துக்களை மெய்ப்பிக்கும் முறைகள்!

இன்று பல வழக்குகளுக்கு கையெழுத்துக்கள்தான் மூல காரணமாக இருக்கிறது. அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

➤  இது கையெழுத்தே இல்லை.

➤  இது என்னோட கையெழுத்து இல்லை.

➤  இது அவருடைய கையெழுத்து இல்லை

➤  இது  யாரோட கையெழுத்து என்று தெரியவில்லை.

மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படுகிறது. பிறர்  கையெழுத்தை நாம் எழுதுவதும் கையெழுத்து போடத் தெரிந்த ஒருவர் கையெழுத்து போட வேண்டிய இடத்தில், தன்னுடைய கையெழுத்தைப் போடாமல், தனது பெயரை தானே எழுதினாலும் அவை தண்டணைக்குரிய குற்றம் ஆகும்.

இந்த போலியான கையெழுத்துக்கள் எப்படி மெய்ப்பிக்கப்படுகிறது?

கையெழுத்துக்கு உரியவர் உயிரோடு இருந்தால்...?

1) ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இருக்கின்றார் என்றால்,  நேரடியாக அழைத்து விசாரணை அதிகாரி அவரை விசாரிக்கலாம். அவர் அதை தன்னுடைய கையெழுத்து இல்லை என்று கூறும் பட்சத்தில் அதனை பொய் கையெழுத்து என்று முடிவு செய்யலாம்.

கையெழுத்துக்கு உரியவர் உயிரோடு இல்லை என்றால்...?

2) ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இல்லை என்றால், அவரது கையெழுத்தை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அல்லது உடன் பணி புரிந்தவர்கள் ஆகியோர்களிடம் விசாரணை அதிகாரி  விசாரிக்கலாம்.  அவர்கள் அதை இறந்தவருடைய கையெழுத்து இல்லை என்று கூறும் பட்சத்தில் அதனை பொய் கையெழுத்து என்று முடிவு செய்யலாம்.

 கையெழுத்துக்கு உரியவரும், சாட்சியும் உயிரோடு இல்லை என்றால்...?

3)  ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இல்லை மேலும்  அவரது கையெழுத்தை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அல்லது உடன் பணி புரிந்தவர்கள் என்று யாருமே இல்லை அல்லது உயிருடன் இல்லை என்றால், அந்தக் கையெழுத்துக்குரிய ஆவணத்தையும், கையெழுத்துப் போட்டவரது வேறு ஒரு பழைய ஆவணத்தையும் Forensic field என்று சொல்லப்படக்கூடிய தடயவியல் துறையின் ஆய்வகத்திற்கு அனுப்பி ஒப்பிட்டுப் பார்த்து, அவர்கள் தரக்கூடிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் அந்தக் கையெழுத்து பொய்யானதா? உண்மையானதா? என்று விசாரணை அதிகாரி முடிவு செய்ய வேண்டும்

காவல்துறை முக்கிய அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள்

1.  காவல்துறையினர் எப்போதெல்லாம் ஒரு வழக்கின் புலன் விசாரணையை மறுக்கலாம் என்பது குறித்து, அரசாணை எண். 332, நீதித்துறை 28, பிப்ரவரி, 1906 மற்றும் அரசாணை எண். 485 நீதித்துறை 14,மார்ச் 1911 என்ற அரசாணைகளை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழ்நாடு காவல்நிலை ஆணை எண். 562 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 157(1)(b) யிலும் இதுகுறித்து கூறப்பட்டுள்ளது.

2.  கடித எண். வி1 - 24021/97/84/ஜிபிஏஎல், நாள் - 4.7.1978 மற்றும் 10.7.1985 ன்படி இந்திய அரசு, உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மத்திய காவல் அமைப்புகளின் தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில், கண்டிப்பாக காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிகள் குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

3.  காவல்நிலைய பொறுப்பு அலுவலர்கள் FIR நகலை புகார்தாரருக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க மறுப்பது மிகக் கடுமையான குற்றமாகும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் சி. எண். /165918/குற்றம் /(2)(1)/94, நாள் - 27.7.1994 ன்படி கீழ் ஆணை பிறப்பித்துள்ளார்.

4.  காவல் நிலைய ஆய்வாளர் புகாரை பெற்றுக் கொண்டவுடன் அது பிடியாணை வேண்டா குற்றமாக இருந்தால் உடனடியாக FIR பதிவு செய்ய வேண்டும். பிடியாணை வேண்டும் குற்றமாக இருந்தால் அந்த குற்றத்தை விசாரணை செய்ய, குற்றவியல் நடுவரின் அறிவுறுத்தலை பெற வேண்டும். சாதாரண மனுக்களை பெறும்போது, அவை உடனடியாக மனுக்கள் பதிவேட்டில் (CSR) பதிவு செய்யப்பட்டு, புகார்தாரருக்கு உடனடியாக CSR நகல் கொடுக்க வேண்டும். இவைகளை கடைபிடிக்காதது சட்ட விரோதமானதாக கருதப்பட்டு கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் RC. NO /62868/குற்றம் /1(2)/2001,நாள் - 31.3.2001 ன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் இது தொடர்பாக அரசாணை எண். 865, உள் (காவல் - 1) துறை, நாள் - 9.6.1997.என்ற அரசாணை உள்ளது. மேலும்  தலைமை அலுவலக நிலை ஆணை 133622/குற்றம் - 1(1)/97, நாள் - 17.6.1997 ம் உள்ளது.

5.  காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை உள்நோக்கத்துடன் பதிவு செய்யாமல் இருப்பதை கண்காணிக்கவும், தடுத்திடவும் என்ன விதிமுறைகளை காவல்துறையினர் பின்பற்ற வேண்டும் என்று RC. NO - 274292/குற்றம் - 1(1)/2004, நாள் - 3.2.2005 என்ற சுற்றறிக்கையின் கீழ் விதிமுறைகளை வகுத்துள்ளார்.

6.  வரதட்சணை மரணம் வழக்கில், கோட்டாட்சியர் பிரேத பரிசோதனை நடத்திய 15 நாட்களுக்குள் புலன் விசாரணை அதிகாரிக்கு அந்த பிரேத பரிசோதனை அறிக்கையை அனுப்பிட வேண்டும் என தமிழ்நாடு அரசு, உள்துறை, அரசு செயலாளர் கடிதம் (பல்வகை) எண். 1059,நாள் - 23.5.1990 ன் கீழ் ஆணை பிறப்பித்துள்ளார்.

7.  குடும்பத் தகராறு சம்பந்தப்பட்ட புகார்களிலும், சாதாரண பிரச்சினை சம்பந்தப்பட்ட புகார்களிலும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் வீட்டுக்கு நேரிடையாக சென்று அவர்கள் பிரச்சினையை விசாரித்து ஆலோசனை வழங்க வேண்டும். தேவையில்லாமல் இதுமாதிரியான பிரச்சினைகளில் கணவரை கைது செய்யக்கூடாது என காவல்துறை தலைமை இயக்குநர் ந. க. எண். 134085/குற்றம் - 1(3)/2003 என்ற கடிதத்தின் வாயிலாக அனைத்து காவல் நிலையத்திற்கும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

8.  கைது செய்யப்பட்ட பெண்களிடம் காவல்துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநர் ந. க. எண். 15857/குற்றம் 1(1)/2004,நாள் - 21.7.2004 ம் தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக அறிவுரைகளை வழங்கியுள்ளார் 

Tuesday, January 30, 2018

IMPORTANT COURT CITATION NOTES

Appeal - Right of victim - Limitation - Victim has to file appeal within a reasonable time after date of knowledge of judgment impugned in appeal. (2015(3) Criminal Court Cases 586 (Kerala)

Cancellation of bail - Bail cannot be cancelled merely on the ground that there is threat to petitioner, as he is at liberty to move representation to authorities concerned. (2016(3) Criminal Court Cases 736 (P&H)

Criminal trespass - Complainant not able to show prima facie possession on the property - Civil dispute given color of criminal case - Complaint dismissed by holding that prima face case not made out even for conducting examination u/s 200 Cr.P.C. - Order of dismissal calls for no interference. (2017(1) Criminal Court Cases 129 (Delhi)

Custody of child - Hindrance by mother to visitation rights of husband - Father can take  police help - Even if some coercive step is required to be taken against the mother, he shall be free to take that in accordance with law, treating her action to be contempt of Court. (2017(4) Civil Court Cases 569 (Jharkhand)

Discharge - From one of two offences -  Court can convict for such offence for which he was discharged. (2017(1) Criminal Court Cases 149 (Rajasthan)

Dishonour of cheque - Complainant not sure about the date of advancing loan and as  who wrote the cheque and also not even aware when exactly and where exactly the transaction took place - These are serious lacunas which strike at the root of the complaint - Accused acquitted. (2014(1) Civil Court Cases 001 (S.C.)

Domestic Violence - Shared household - Means - House belonging to or taken on rent by husband or house which belongs to joint family of which husband is a member. (2015(3) Criminal Court Cases 637 (P&H)

Maintainability of suit - It is for plaintiff to first establish his right and then seek remedy - Plaintiff has to stand on his own legs and cannot take advantage of the weakness of the defendant's case. (2016(1) Civil Court Cases 047 (H.P.)

Maintenance pendente lite - Capacity of other party to earn cannot be taken into consideration, while granting maintenance pendente lite - It is only actual earning of opposite party on the basis of which relief can be granted - Permanent income and not casual income is relevant. (2017(1) Civil Court Cases 273 (Delhi)*

Offence u/ss 498-A, 406 IPC - Only incidents of unhappiness - Allegations in complaint and charge sheet does not satisfy ingredients of alleged offences - Proceedings quashed. (2017(4) Criminal Court Cases 514 (S.C.)

Partition - Execution sought after 30 years of passing of preliminary decree - Till partition is carried out and final decree is passed, there is no question of any limitation running against right to claim partition as per preliminary decree. (2017(4) Civil Court Cases 411 (S.C.)

Proof of a document - Neither mere admission of a document in evidence amounts to its proof nor mere marking of an exhibit of a document dispense with its proof, which is otherwise required to be done in accordance with law. (2016(1) Civil Court Cases 001 (S.C.)

Rent and eviction - Bona fide requirement - Comparative advantage and disadvantage - Law leans in favour of the person to whom the greater inconvenience and hardship is caused and would grant relief to landlord only when his hardships are likely to exceed the hardships which may be caused to the tenant. (2017(2) Apex Court Judgments 183 (S.C.)

Suit for possession - Suit for possession based on title - It is not necessary for plaintiff to prove his dispossession for seeking relief of possession. (2017(4) Civil Court Cases 558 (H.P.)

Voice sample - Text to contain words drawn from the disputed conversation but not the sentences from the disputed conversation. (2016(3) Criminal Court Cases 714 (S.C.) *Agreement to sell - Affidavit of presence attested by Notary/Oath Commissioner and not by Sub Registrar - Proves presence in office of Sub Registrar. (2013(1) Civil Court Cases 041 (P&H)*

Amendment of plaint - Challenge to sale deed of the year 2005 in 2015 - Suit filed in the year 2010 - No averment in application as to what prevented plaintiff to challenge the sale deed earlier - Amendment sought is barred by limitation. (2017(4) Civil Court Cases 847 (M.P.)

Co-sharer - When one co-sharer is in possession of the land, the other co-sharers must be considered to be in constructive possession of the land. (2014(1) Civil Court Cases 329 (Allahabad)

Dishonour of cheque - Accused not residing within jurisdiction of Court - Issuance of process without compliance of provision of S.202 Cr.P.C. - Order issuing process quashed. (2014(1) Criminal Court Cases 225 (Gujarat)

Dishonour of cheque - Pre-mature complaint - Proceedings liable to be quashed - Conviction set aside. (2017(4) Civil Court Cases 796 (H.P.)

Domestic violence - Committed before commencement of Act which continued even after passing of the Act - Wife is entitled for protection orders and residence orders u/ss 18 & 19 of the Act along with maintenance allowance. (2014(1) Criminal Court Cases 160 (S.C.)

Execution - Injunction in a representative suit - Wilful disobedience by a person not party to the suit - Decree is executable if such a person is for whose benefit the suit was defended. (2013(1) Civil Court Cases 242 (Kerala)

Jurisdiction - Return of complaint - S.201 Cr.P.C. can be applied immediately on receipt of complaint. (2014(1) Criminal Court Cases 217 (S.C.)

Money deposited by a customer with Bank - Period of limitation starts from the date when a demand is made. (2017(4) Civil Court Cases 681 (P&H)

Notice u/s 80 CPC  - Issued after suit became time barred - Limitation period would not be extended for further two months as this provision would be irrelevant. (2016(1) Civil Court Cases 082 (S.C.)

Recall of a witness - Wrong statement made against own record - Court to recall said witness. (2014(1) Criminal Court Cases 112 (S.C.)

Recall of summoning order - Magistrate has no power to review its own order. (2014(1) Criminal Court Cases 217 (S.C.)

SLP - Filed against a dead person - Provision of impleading L.R's applies only when a party dies during the pendency of petition and not when a petition is filed against a dead person - However, Court can allow amendment of petition. (2013(1) Civil Court Cases 164 (S.C.)

Specific performance - Decree of specific performance for part of a contract cannot be passed where plaintiff himself files suit for part of contract. (2017(4) Civil Court Cases 693 (P&H)

Temporary injunction - One of the foremost considerations is conduct of the parties. (2014(1) Civil Court Cases 023 (Patna)

Auction sale - Setting aside - Applicant has to satisfy Court that he has suffered substantial injuries by such lacunae in the procedure. (2018(1) Civil Court Cases 255 (Rajasthan)

Banking fraud - Criminal proceedings not to be quashed even if accused voluntarily settles monetary claim. (2014(1) Apex Court Judgments 078 (S.C.)

Dishonour of cheque - Execution - Proof - By suggestion in cross examination - Not sufficient proof. (2018(1) Civil Court Cases 234 (Kerala)

Dishonour of cheque - Prop. firm - Entire business taken over by Pvt. Ltd. Co. - Substitution of complainant can be allowed. (2016(1) Civil Court Cases 251 (Guj.)

Execution - Suit for recovery of possession of building given on rent - Destruction of building - Landlord is entitled to recover the land in which building existed. (2017(1) Civil Court Cases 281 (Kerala)

Inquest report and post-mortem report - Not basic or substantive evidence - Any discrepancy occurring therein cannot be termed as fatal or suspicious circumstance which would warrant benefit of doubt to accused. (2014(1) Criminal Court Cases 518 (S.C.)

Joint Family - There is legal presumption that every Hindu family is joint in food, worship and estate and in the absence of any proof of division, such legal presumption continues to operate in the family. (2018(1) Civil Court Cases 167 (S.C.)

Malicious prosecution - Limitation of one year to file suit to be computed by excluding date of delivery of judgment and not time taken by Court to supply certified copy of judgment. (2016(1) Civil Court Cases 295 (P&H)

Partnership - Death of one of partners - Clause in deed to continue partnership on death of a partner and manner of calculating the dues - Ss.42(c) & 37 of Partnership Act, have no application in view of said clause - Thus, consequential direction for dissolution of firm and settlement of accounts by High Court set aside. (2018(1) Apex Court Judgments 159 (S.C.)

Service - Regularization - Part time appointment on fixed tenure - Termination of service after expiry of fixed tenure, not arbitrary. (2016(3) Apex Court Judgments 116 (S.C.)