Saturday, December 30, 2017

Power of Attorney - பவர் ஆவணம் 2 வகைப்படும்.

1) பொது அதிகார ஆவணம் (General Power of Attorney)
==============================================
உங்கள் சொத்து இருக்கிறது. அந்த சொத்து சம்பந்தமாக எல்லாவற்றுக்குமான அதிகாரங்கள் கொடுத்தால் அது பொது அதிகார பத்திரம் ஆகும். அதாவது சொத்தை விற்க, வாங்க, பாதுகாக்க, கோர்ட்டுக்கு போக, வரி செலுத்த, பயன்படுத்த, வாடகைக்கு விட, பணம் வசூலிக்க என அந்த சொத்துக்கு முழுவதுமான அதிகாரம் வழங்கல் ஆகும். சுருக்கமாக "எல்லாவற்றையும் நீயே செய்து கொள், உன்னை நான் நம்புகிறேன் " என பத்திரத்தில் எழுதி பதிவு செய்து விட்டால் அது பொது அதிகார ஆவணம் ஆகும்.

2)சிறப்பு அதிகார பத்திரம் (Special Power of Attorney)
==============================================
இந்த பத்திரம் மூலம் ஒரு குறிப்பிட்ட விஷயங்களுக்காக மட்டும் அதிகாரம் வழங்கப்படும். அதாவது சொத்தை விற்க மட்டும் அல்லது மனைகளாக பிரிக்க மட்டும் அல்லது பாதுகாக்க மட்டும் என குறிப்பிட்ட விஷயங்களுக்காக மட்டும் பவர் தருவது சிறப்பு அதிகார பத்திரம் ஆகும்.

அடுத்ததாக உரிமையாளருக்கு தெரியாமல் சொத்தை விற்க முடியுமா?
---------------------------------------------------------------------
பவர் கொடுக்கப்பட்டவுடன் பவர் வாங்கியவர் சொத்தை பொறுத்து செயலுரிமையாளர் ஆகி விடுகிறார். அதனால் சொத்தை உரிமையாளருக்கு தெரியாமல் விற்க பவர் ஆப் அட்டார்னிக்கு உரிமை உண்டு. பவர் பெற்றவர் சொத்தை விற்று அது சம்மந்தப்பட்ட கணக்கை உரிமையாளர்களிடம் கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும். இது குறித்த ஷரத்துகள் இந்திய ஒப்பந்த சட்டத்தில் உள்ளது.

இந்த சட்டத்தின் பிரிவு 213ன் படி உரிமையாளர் கேட்கும் போது பவர் ஆப் அட்டார்னி கணக்கை ஒப்படைக்க வேண்டும்.

மேலும் இந்த சட்டத்தின் பிரிவு 214 ன்படி சொத்து பற்றிய இக்கட்டான நிலையில் உரிமையாளரிடம் கருத்துக்களை பெற்று மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது பவர் ஆப் அட்டார்னியின் கடமையாகும்.

பிரிவு 215ன் படி பவர் ஆப் அட்டார்னி முதல்வருக்கு தெரிவிக்காமல் தனக்காக தன் உறவினர்கள் பெயரில் சொத்தை வாங்குவது சட்ட விரோதமாகும். அவ்வாறான சூழ்நிலையில் உரிமையாளர் அந்த கிரையத்தை செல்லாது என அறிவிக்க கேட்டு நீதிமன்றத்தை நாடலாம்.

பிரிவு 216ன் படி உரிமையாளருக்கு தெரியாமல் பவர் ஆப் அட்டார்னி தன்னுடைய முதல்வருக்கு பதிலாக தானே உரிமையாளர் என்ற பெயரில் சொத்தில் தொழில் ஏதாவது செய்தால், அதன் மூலம் கிடைக்கும் லாபம் அனைத்தையும் உரிமையாளர் பெற தகுதியுடையவர் ஆவார்.

பிரிவு 217ன் படி பவர் ஆப் அட்டார்னி தனக்கு முறைப்படி கிடைக்க வேண்டிய செலவழித்த பணம், ஊதியம் ஆகியவற்றுக்காக சொத்திலிருந்து கிடைக்கும் பணத்தை நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.

பிரிவு 218 ன்படி பவர் ஆப் அட்டார்னி தனக்கு சேர வேண்டிய பணத்தை கழித்து கொண்டு பாக்கி தொகை அனைத்தையும் உரிமையாளரிடம் செலுத்த கடமை பட்டவராவார்.

பிரிவு 220 ன்படி அதிகார பத்திரத்திற்கு மாறாக முறைகேடாக நடத்தும் தொழிலுக்கு ஊதியம் பெற பவர் ஆப் அட்டார்னிக்கு உரிமை இல்லை.


No comments:

Post a Comment