Thursday, November 30, 2017

விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய முடியுமா?

வாகன விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் ஒருவர் மீது இ. த. ச பிரிவு 304(A) ன் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய முடியுமா?


சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு " P. சேதுராம் Vs வட்டார போக்குவரத்து அலுவலர், திண்டுக்கல் (2010-W.L.R.-100)" என்ற வழக்கில், வாகன விபத்து சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அதிகாரம் இல்லை, அந்த குற்ற வழக்கில் விசாரணை முடிவுற்று தீர்ப்பு அளிக்கப்படும் வரை பொறுமையாக அதிகாரிகள் காத்திருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 19(1)ன்படி காவல்துறையினர், எதிரி பிடியாணை வேண்டா குற்றமாக புரிந்துள்ளார் என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்து அதன்பிறகே அவருடைய ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

ஒருவர் மீது இ. த. ச பிரிவு 304(A) ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற ஒரே காரணத்திற்காக அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

W. P. NO - 16958/2013

S. துரைவேலு Vs வட்டார போக்குவரத்து அலுவலர், மேற்கு மாம்பலம், சென்னை

2013-W.L.R.-843

குடும்ப உறவு சம்பந்தப்பட்ட வழக்குகளில் இடைக்கால ஜீவனாம்சம் கேட்க முடியுமா?

குடும்ப உறவு சம்பந்தப்பட்ட வழக்குகளில் தரப்பினர்கள் தங்கள் இஷ்டத்திற்கு இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் மனுதாக்கல் செய்து இடைக்கால ஜீவனாம்சம் கேட்க முடியுமா?

எந்த சூழ்நிலையில் இடைக்கால அரசு கேட்டு மனுத்தாக்கல் செய்யலாம்?

இடைக்கால ஜீவனாம்சம் கேட்டு இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்களை தரப்பினர்கள் தாக்கல் செய்யும் சத்திய பிரமாண வாக்குமூலங்களை கொண்டு தான் நீதிமன்றங்கள் முடிவு செய்ய வேண்டும் என்பதை நீதிபதிகள் தங்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் உத்தரவிடுவது என்பது, இந்து திருமணச் சட்டம் பிரிவு 25 அல்லது இந்து மகவேற்பு மற்றும் வாழ்க்கை பொருளுதவிச் சட்டம் அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 ன் கீழ் பிறப்பிக்கப்படும் உத்தரவுக்கு ஒப்பானதாகும். தரப்பினரில் ஒருவர் பணம் சம்பாதிக்க எந்த வகையான தடையும் இல்லாத நிலையில் மற்றொருவரை நம்பித்தான் வாழ்வதாக கூறி இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் வாழ்க்கை துணைவரிடமிருந்து இடைக்கால ஜீவனாம்சம் கேட்டு மனு ஒன்றை தாக்கல் செய்ய முடியாது.

வழக்கு செலவுகள் என்பதற்கு இந்து திருமணச் என்று 24 ல், வழக்கறிஞர் கட்டணம், முத்திரைத்தாள் அல்லது நீதிமன்ற கட்டணம், குமஸ்தா செலவு, எழுதுபொருள் செலவு மற்றும் சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு ஆகும் செலவு ஆகியவை அடங்கும்.

இராஜஸ்தான் உயர்நீதிமன்றம் " கோவிந்தசிங் Vs திருமதி. வித்யா (AIR-1999-Rajasthan-304)" என்ற வழக்கில், இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் இருதரப்பினரும் இடைக்காலமாக ஜீவனாம்சம் கேட்டு மனுத்தாக்கல் செய்யலாம். ஒரு தரப்பினருக்கு வருமானம் இல்லாத நிலையில் மற்றொரு தரப்பினர் ஜீவனாம்சம் தரக்கூடிய நிலையில் இருந்தால் அவரிடம் ஜீவனாம்சம் கேட்டு மனுத்தாக்கல் செய்யலாம். ஆனால் சம்பாதிக்கக்கூடிய தகுதியுடையவ கணவர் தான் சம்பாதிப்பதை வேண்டுமென்றே நிறுத்தி விட்டு தன் மனைவியின் சம்பாத்தியத்தை சாரந்திருக்கலாம் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. Anglo Saxon சட்டவியலில் எந்தவொரு நபரும் தனக்குத்தானே வருமானம் இல்லாதவராக ஆக்கிக் கொள்ளக்கூடாது என்ற ஒரு முதுமொழி உள்ளது. அந்த முதுமொழியானது சம்பாதிக்கும் கணவர்களுக்கு பொருந்தும். ஒரு நபர் தனக்குத்தானே வருமானமில்லாதவராக மாற்றிக் கொண்டால் அவர் தன்னுடைய வாழ்க்கை துணைவரிடம் ஜீவனாம்சம் கோருவதற்பகு தகுதியற்றவர் ஆகிறார் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

கல்கத்தா உயர் நீதிமன்றம் " ரெசேனா மித்ரா Vs B. srimathi santhana mithra (AIR-2004-Calcutta-61)" என்ற வழக்கில், வழக்கு செலவுத் தொகை அல்லது வழக்கு நிலுவையில் இருக்கும் போது இடைக்காலமாக ஜீவனாம்சத்தை நிர்ணயிப்பதற்கு நிலையான நெறிமுறைகள் எதுவும் கிடையாது. நீதிமன்றம் இருதரப்பினர்களின் தகுதியை அடிப்படையாக கொண்டு அவர்களுடைய தேவைகள், குழந்தை மற்றும் மனைவி ஆகியோர்களுக்கு ஏற்படும் தேவையான செலவுகளுக்கான தொகையை கொடுக்கும் சக்தி ஆகியவற்றை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். இடைக்கால ஜீவனாம்சத்தை நிர்ணயிக்கும் பொழுது தற்கால வாழ்க்கை முறைக்கு ஆகும் செலவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு நீதிமன்றம் நிர்ணயிக்க வேண்டும். நல்ல திடகாத்திரமாக இருக்கும் ஒருவர் தானாகவே தனது சம்பாத்தியத்தை நிறுத்திக் கொண்டு தனது துணையிடம் ஜீவனாம்சம் கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் " யஸ்பால் சிங் தாக்கூர் Vs அஞ்சனா (AIR-2001-M.P-67)"  என்ற வழக்கில், கணவரான மனுதாரர் அவராகவே ஓய்வான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு முடிவெடுத்துக் கொண்டு, பணம் சம்பாதிக்கும் திறமை இருந்தும் அதற்கான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருக்கும் ஒருவர் இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 ன் கீழ் மனுதாக்கல் செய்ய முடியாது, அப்படி மனுத்தாக்கல் செய்யலாம் என்கிற நிலை இருந்தால் அது அந்த சட்டப்பிரிவை ஏற்படுத்தியதற்கான நோக்கத்தை கெடுப்பதாக அமைந்துவிடும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

நல்ல உடல் நலத்துடன் இருக்கும் ஒருவர் அவருடைய மனைவியை பராமரிக்க கடமைபட்டவராவார். எந்த சூழ்நிலையிலும் அவர் அந்த கடமையை விட்டு வெளியே வர முடியாது. அதே நேரத்தில் பிரிவு 24 ன் கீழ் உத்தரவிடும் போது நீதிமன்றம் தரப்பினர்களின் பொருளாதார வசதியை மட்டுமே தனது கவனத்தில் கொள்ள வேண்டும். தரப்பினர்களின் நடத்தை குறித்து நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டியதில்லை.

எனவே நல்ல உடல் நலத்துடனும், கல்வித் தகுதியோடும் ஏற்கனவே வேலையில் இருந்த ஒரு நபர், அந்த வேலையை விட்டு வெறுமனே வீட்டில் இருந்து கொண்டு தன்னுடைய வாழ்க்கை துணைவரிடம் இடைக்கால ஜீவனாம்சம் என்ற வழக்கில் பணத்தை பறிக்கக்கூடாது. இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 அதற்கு உதவி செய்யாது. வெறுமனே சோம்பேறியாக இருந்து ஒரு நபருக்கு சட்டம் எப்போதும் உதவிக்கு வராது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRP. NO - 1909/2010,  DT - 22.3.2013

ரமேஷ் Vs அம்பிகேஸ்வரி

2013-2-LW-CIVIL-901

நீதிமன்ற தீர்ப்பின்படி வாதி தீர்ப்புத் தொகையை வசூலிப்பதற்கு முதலில் பிரதிவாதியின் சொத்தை பற்றுகை செய்யத்தான் நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்ய வேண்டுமா? அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி முதலில் மனுத்தாக்கல் செய்ய முடியாதா?

நீதிமன்ற தீர்ப்பின்படி வாதி தீர்ப்புத் தொகையை வசூலிப்பதற்கு முதலில் பிரதிவாதியின் சொத்தை பற்றுகை செய்யத்தான் நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்ய வேண்டுமா? அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி முதலில் மனுத்தாக்கல் செய்ய முடியாதா?


வெங்கடாசலம் என்பவர் ரூ. 32,600-ஐ வசூல் செய்வதற்காக வீராசாமி என்பவர் மீது ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்பிறகு வெங்கடாசலம், வீராசாமியை கைது செய்து பணத்தை வசூல் செய்து தரும்படி கேட்டு ஒரு நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவிற்கு வீராசாமி பதிலுரை தாக்கல் செய்தார். அதில் தனது சொத்தை பற்றுகை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, சிறையில் அடைப்பதற்கு நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்திருப்பது தவறு என்று கூறி நிறைவேற்றுதல் மனுவை தள்ளுபடி செய்யுமாறு கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி வீராசாமி 14.8.2009 ஆம் தேதிக்குள் தீர்ப்புத் தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

மேற்படி உத்தரவை எதிர்த்து வீராசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதியரசர் திரு. கல்யாண சுந்தரம் அவர்கள், சென்னை உயர்நீதிமன்றம் " A. K. சுப்பிரமணிய செட்டியார் Vs A. பொன்னுச்சாமி செட்டியார் (1959-AIR-MD-777)" என்ற வழக்கில், தீரப்பினை பெற்றவர், தீர்ப்புக் கடனாளியிடமிருந்து தீர்ப்புத் தொகையை வசூல் செய்வதற்கு தீர்ப்புக் கடனாளியின் சொத்தை பற்றுகை செய்வதன் மூலம் அல்லது அவரை கைது செய்து உரிமையியல் சிறையில் அடைப்பதன் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளலாம். தீர்ப்பினை பெற்றவர் இந்த இரண்டு நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளதாக கூறினார்.

மேலும் சென்னை உயர்நீதிமன்றம் "ஜெகதீஸ்வரன் Vs பெடரல் பேங்க், பொள்ளாச்சி கிளை, கோயம்புத்தூர் (1994-1-MLJ-297)" என்ற வழக்கில், 1ஆம் எதிர்மனுதாரரின் சொத்தின் மீது அல்லது அவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளுவதென்பது தீர்ப்பை பெற்றவரின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும் அவ்வாறு தேர்வு செய்வதை சட்டம் அனுமதிப்பதாக தீர்ப்பு கூறியுள்ளதாக கூறினார்.

மேலும் சென்னை உயர்நீதிமன்றம் "கணேஷ் Vs சந்திரன் (2006-3-CTC-546)" என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் " ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா Vs நெசஸ் இன்டெக்ஸ் போர்ட் (AIR-1992-SC-1740)" என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பினை பின்பற்றி, தீரப்பினை பெற்றவர் அந்த தீரப்பினை நிறைவேற்றுவதற்கு அவர் எந்தவொரு முறையிலும் நடவடிக்கை எடுக்கலாம். அவர் இந்த முறையில் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளதாக கூறினார்.

எனவே பணத்தை வசூலிக்க தீர்ப்பை பெற்றவர் முதலாவதாக தீர்ப்பு கடனாளியை சிறையில் அடைக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் என்று மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் சொத்தைதான் பற்றுகை செய்ய முதலாவதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் கூறி தீர்ப்பு வழங்கினார்.

CRP. NO - 1508/2010, DT - 18.12.2013

T. Veerasamy Vs Venkatachalam

2014-1-TLNJ-CIVIL-485

ஏல விற்பனையை ரத்து செய்வதற்கு எத்தனை நாட்களுக்குள் தீர்ப்புக் கடனாளி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும்?

ஒரு சொத்தை நீதிமன்றத்தின் மூலம் ஏலத்தில் விற்கப்பட்ட பிறகு அந்த ஏல விற்பனையை ரத்து செய்வதற்கு எத்தனை நாட்களுக்குள் தீர்ப்புக் கடனாளி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும்?


உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 21 விதிகள் 89 மற்றும் 92 மற்றும் காலவரையறைச் சட்டம் பிரிவு 127 ஆகியவற்றின் படி ஒரு சொத்து நீதிமன்ற ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் அந்த தீர்ப்புத் தொகையை, தீர்ப்புக் கடனாளி நீதிமன்றத்தில் வைப்பீடு செய்ய வேண்டும். அவ்வாறு வைப்பீடு செய்ய தவறினால் தீர்ப்பு கடனாளி ஏல விற்பனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிப்பதை தவிர நீதிமன்றத்திற்கு வேறு வழியில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றம் " ராம் கரண் குப்தா Vs J. S. எக்ஸிம் லிமிடெட் (2012-6-CTC-SC-710)" என்ற வழக்கில் தெளிவாக கூறியுள்ளது.

உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 21 விதிகள் 89 மற்றும் 92, காலவரையறைச் சட்டம் பிரிவு 127 "ஆகியவற்றை பார்க்கும் பொழுது உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 21 விதி 89 ன் கீழ் மனுதாக்கல் செய்வதற்கோ, தேவையான தொகையை வைப்பீடு செய்வதற்கோ எந்த கால அளவையும் நிர்ணயிக்கவில்லை. ஆனால் காலவரையறைச் சட்டம் பிரிவு 127 ஆனது 60 நாட்களுக்குள் அந்த மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

எனவே சட்டத்தின் படி நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அளவிற்குள் தீர்ப்புக் கடனாளி விற்பனைத் தொகையை நீதிமன்றத்தில் வைப்பீடு செய்ய தவறி விட்டால், உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 21 விதி 89 ன் கீழ் தீர்ப்பு கடனாளியால் ஏல விற்பனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உத்திரவிடுவதை தவிர நீதிமன்றத்திற்கு வேறு வழியில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

C. A. NO - 4469/2014, DT - 11.4.2014

அன்னபூர்ணா Vs மல்லிகா அர்ஜுன் மற்றும் பலர்

2014-2-TLNJ-CIVIL-110

வங்கிக் கடனை வசூலிப்பதற்காக சம்மந்தப்பட்டவரின் ஓய்வூதிய கணக்கில் கை வைக்க முடியாது:

ஒருவர் பெற்ற வங்கிக் கடனை  வசூலிப்பதற்காக  சம்மந்தப்பட்டவரின்  ஓய்வூதிய கணக்கில் கை வைக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
*********************************************************************
Banks cannot attach pension account to recover loan dues : Madras HC
A Savings Bank account maintained primarily for the purpose of depositing monthly pension amount could not be attached by a bank just because the account holder had defaulted repayment of a loan availed from the same institution, the Madras High Court Bench here has held.
Justice K. Ravichandra Baabu passed the order while allowing a writ petition filed by A. Muthuiruvakkal of Nagercoil in Kanyakumari district. She had challenged an order passed by a nationalised bank on August 13 preventing her from operating the pension account for recovering the outstanding loan amount.
“If there is any outstanding due payable by the petitioner, it is for the respondent bank to work out its remedy in the manner known to and permissible by law before the appropriate forum. Without doing so, resorting to attach the pension amount by way of passing the impugned order is impermissible,” he said.
The judge set aside the bank’s order and directed it to permit the petitioner to operate the account without any hindrance. He relied upon a judgement passed by the Supreme Court in 2009 to hold that pension and gratuity amount could not be attached for recovery of dues.
In that judgement, the apex court had criticised the Rajasthan High Court for ordering attachment of even Fixed Deposits without giving attention to the fact that the loan defaulter in that case had actually converted his pension and gratuity amount into fixed deposits.
In the present case, Ms. Muthuiruvakkal had claimed that the bank had deducted about Rs.14,681 from her pension account after preventing her from operating the account. On its part, the bank stated that it had no other option but to pass the order under challenge to recover the dues.
Source: thehindu. DECEMBER 03, 2015

தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்

தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் 1993-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது. இவ்வாணையத்தில் மாநில மகளிர் ஆணையத் தலைவி மற்றும் 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மகளிர் ஆணையம் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கவும், பெண்களுக்கு சமத்துவம் வழங்கவும்,

பெண்களுக்கெதிரான அனைத்து வகை இன்னல்களிருந்து பாதுகாப்பினை உறுதி செய்யவும் மற்றும் குடும்பத்திலும், சமுதாயத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்கு தேவையான அதிகாரங்களைப் பெற்ற ஒரு சட்ட ரீதியான அமைப்பாகும். மேலும் மகளிர் ஆணையம் பெண்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை கண்டறிந்து அது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. இவ்வாணையம் பெண்கள் சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆணையத்தின் குறிக்கோள்கள்

மகளிரின் நலனை உறுதி செய்து அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல்.பாலினப்பாகுபாடு குறித்த விவகாரங்களை கவனித்தல்.பெண்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆணையத்தின் பரிந்துரையை அரசுக்கு அனுப்பி வைத்தல்.

மகளிர் ஆணையத்தின் செயல்பாடுகள்

இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சட்ட பிரிவுகள் பாதுகாப்புகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்தான விபரங்களை கவனித்தல்.பெண்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் பல்வேறு நிறுவனங்கள் மூலம் முறையாக செயல்படுத்தப்படாத போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்பெண்களுக்கு நீதி கிடைக்க தவறும் பட்சத்தில் தேவையான நீதியைப் பெறுவதற்கு உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளஅரசுக்கு பரிந்துரை செய்தல்.பெண்களின் உரிமைகள் மறுக்கப்படும் நிகழ்வுகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு உரிய அதிகாரம் பெற்ற அலுவலர்கள் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல். பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கண்டுள்ளவாறு பாதுகாப்பிற்கான உத்திரவாதம் வழங்கப்படாத நிலையிலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மகளிர் ஆணையத்தை நேரிடையாக அணுகலாம

Wednesday, November 29, 2017

நத்தம் நிலம் என்கிற வகைபாட்டிற்குள் வருகிற நிலையில் யார் பெயருக்கு ஒரு சொத்திற்கான பட்டா உள்ளதோ அவரே உரிமையாளராக கருதப்படுவார்.

 ஒரு நிலம் நத்தம் நிலம் என்கிற வகைபாட்டிற்குள் வருகிற நிலையில், அந்த இடம் யாருடைய சுவாதீனத்தில் உள்ளதோ அவரையே அந்த சொத்தின் உரிமையாளராக கருத வேண்டும். மேற்படி நிலம் குறித்து ஒருவருடைய பெயரில் பட்டா வழங்கப்படவில்லை என்றாலும், நீண்ட நாட்களாக யாருடைய சுவாதீனத்தில் அந்த சொத்து உள்ளதோ அவருக்கு அந்த சொத்தில் ஓர் உரிமை மூலம் ஏற்பட்டு விடுகிறது. இது தான் சட்டத்தின் நிலைப்பாடாகும். யார் பெயருக்கு ஒரு சொத்திற்கான பட்டா உள்ளதோ அவரே உரிமையாளராக கருதப்படுவார்.
 (நத்தம் நிலத்தை பொறுத்தவரை)

                               ஓர் இந்துப் பெண் அவருடைய மூதாதையர் வழி சொத்தை வாரிசுரிமை அடிப்படையில் பெறுவது அல்லது திருமணத்தின் போது அவருக்கு அளிக்கப்படும் சொத்துக்கள் ஆகியவற்றை மட்டுமே சீதனச் சொத்தாக கருத முடியும் என்ற கருத்து பெரும்பாலான மக்களிடம் நிலவி வருகிறது.

                                                                   சென்னை உயர்நீதிமன்றம் " K. Natarajan Vs Sundari and Others (2012-1-MWN-CIVIL-1),(2011-5-LW-341)" என்ற வழக்கில், ஒரு சொத்தை ஓர் இந்துப் பெண் தன்னுடைய சுய சம்பாத்தியத்தின் மூலம் பெற்றிருந்தாலும்கூட அதனை அவருடைய சீதனச் சொத்தாக மித்தாக்சாரா இந்து சட்டப்படி கருதப்பட வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

மித்தாக்சாரா இந்துச் சட்டப்படி, ஓர் இந்துப் பெண் ஒருவர் பல வகையில் சொத்துக்களை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கீழ்க்கண்ட வகையில் ஓர் இந்துப் பெண் சட்ட ரீதியாக சொத்துக்களை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
1. உறவினர்களிடமிருந்து கொடையாகவோ, உயில் ஆவணத்தின் மூலமோ பெறலாம்
2. 3 ஆம் நபர்களிடமிருந்து கொடையாகவோ, உயில் ஆவணத்தின் மூலமோ பெறலாம்
3. பாகப்பிரிவினைபடி சொத்தை பெறலாம்
4. வாழ்க்கை பொருளுதவி தொகைக்காக ஒரு சொத்து அளிக்கப்பட்டிருக்கலாம்.
5. வாரிசுரிமை அடிப்படையில் சொத்தை பெற்றிருக்கலாம்
6. தொழிலின் மூலம் சொத்தை பெற்றிருக்கலாம்
7. சமரச உடன்படிக்கையின் அடிப்படையில் சொத்தை பெற்றிருக்கலாம்
8. எதிரிடை உரிமை மூலமாக சொத்தை பெற்றிருக்கலாம்
9. சீதனப் பணத்தின் மூலம் சொத்தை வாங்கியிருக்கலாம். அல்லது சீதனப் பணத்தை சேமித்து வைத்ததில் வந்த வருமானத்தை கொண்டு சொத்தை வாங்கியிருக்கலாம்
10. மேலே குறிப்பிட்டுள்ள வகைமுறைகளின் கீழ் அல்லாமல் உயில் ஆவணங்களின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களுக்கு கொடையாக அளிக்கப்பட்ட சொத்துக்களாக கருதப்படும்
.
எனவே ஓர் இந்துப் பெண் ஒரு சொத்தை சுயமாக சம்பாதித்திருந்தாலும் கூட அதனை அவருடைய சீதன சொத்தாக தான் இந்து மித்தாக்சாரா சட்டப்படி கருத வேண்டும் என்றும் அந்த பெண்ணின் இறப்பிற்கு பின் இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 14 ன்படி அவருடைய வாரிசுகளுக்கு அந்த சொத்தில் முழு உரிமை ஏற்பட்டு விடும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
S. A. NO - 1308/2014,DT - 17.3.2015
Muthusamy and Others Vs A. Marusamy and Tulasiyammal
(2016-3-MWN-CIVIL-487)
 சென்னை உயர்நீதிமன்றம் " வள்ளியம்மாள் Vs S. ஆறுமுக கவுண்டர் (2001-1-CTC-708)" என்ற வழக்கில், வாதியின் குடும்பத்திற்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத வேற்று மனிதராக பிரதிவாதி உள்ள நிலையில், அந்த உயில் எழுதப்பட்டது குறித்து சந்தேகம் உள்ளது என்கிற ஒரு கோரிக்கையை முன்வைப்பதற்கு பிரதிவாதி தகுதி உடைய நபராக கருத முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் " S. கணேசன் Vs S. குப்புசாமி (2002-2-LW-636)" என்ற வழக்கிலும், உயிலை எழுதி வைத்தவரோடு எந்த வகையிலும் உறவு முறையில் சம்மதம் இல்லாத ஒருவர் ஒர் உயிலை மெய்பிக்க வேண்டும் என்று கோர முடியாது என்றும் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 68 ன் கீழ் அந்த உயிலை மெய்பிக்கும்படி கோர முடியாது என்றும் தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே ஓர் உயிலின் உண்மைத்தன்மை குறித்து, அந்த உயிலை எழுதி வைத்தவருக்கு எந்த வகையிலும் உறவினரல்லாத மூன்றாம் நபர் ஒருவர் எந்த ஒரு வினாவையும் எழுப்ப முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
S. A. NO - 1515/1999,DT - 26.4.2016
பாக்கியம்மா Vs இராமசந்திரப்பா
(2016-3-TLNJ-CIVIL-352)

குற்றவியல் நடைமுறைச் சட்டம்

உச்சநீதிமன்றம் "இராம்பிரகாஷ் Vs அரியானா மாநில அரசு (AIR-1978-SC-1282)" என்ற வழக்கில், ஒரு வழக்கில் கைப்பற்றப்பட்ட பொருட்களை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 457 ன் கீழ் திரும்ப ஒப்படைப்பது நீதியின் பால் செயல்படுத்த வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் டெல்லி உயர்நீதிமன்றம், CRL. M. C. NO - 4485/2013, மற்றும் CRL. M. A. NO - 16055/2013 - Manu/De/2131/2014 =2014-DLT-646" என்ற வழக்கில் பத்தி 59 முதல் 64 வரையில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளது.

59. யாருடைய வீட்டிலிருந்து திருடப்பட்டதாகவோ, கொள்ளையடிக்கப்பட்டதாகவோ குறிப்பிட்டு கைப்பற்றப்பட்ட மதிப்புமிக்க பொருட்களை, அந்த பொருட்களுக்கு சட்டப்படி உரிமை கோருகிற நபருக்கு நீதிமன்றம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அந்த பொருட்கள் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்வதோடு, அவற்றை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, ஒரு பிணையப் பத்திரத்தையும் பெற்றுக் கொண்டு, அந்த பொருட்களை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

60. அந்த பொருட்களை புகைப்படமாக எடுத்ததற்கு பிறகு அந்த புகைப்படத்தில் புகார்தாரர், எதிரி மற்றும் எந்த நபரிடம் ஒப்படைக்கப்படுகிறதோ ஆகியோர்களின் கையொப்பங்களையும் அந்த புகைப்படத்தில் பெற வேண்டும். தேவைப்பட்டால் அரசு அங்கீகாரம் பெற்ற தங்க நகை மதிப்பீட்டாளரிடமிருந்து அந்த நகை ஆபரணங்கள் குறித்த மதிப்பீட்டை நீதிமன்றம் பெறலாம்.

61. அந்த வழக்கு விசாரணையின் போது ஏற்கனவே திருப்பி ஒப்படைக்கப்பட்ட மதிப்பு மிக்க பொருட்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் படி வற்புறுத்தாமல் புகைப்படம் மற்றும் அந்த மதிப்புமிக்க பொருட்கள் குறித்த விவரக் குறிப்பு ஆகியவை குறித்து சாட்சி விசாரணையின் மூலம் அந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

62. அந்த பொருட்கள் புகார்தாரர் அல்லது அந்த பொருட்கள் யாரிடமிருந்து கைப்பற்றப்பட்டதோ அந்த நபர் யாரும் அந்த பொருட்களுக்கு உரிமை கோராத நிலையில், அவற்றை பெட்டகத்தில் வைத்திருக்கும் படி நீதிமன்றம் உத்தரவிடலாம்.

63. ஒரு வழக்கில் மேற்கொண்டு புலன் விசாரணை செய்வதற்கு அல்லது அடையாளம் காட்டப்படுவதற்கு அந்த பொருட்கள் தேவைப்படுமேயானால், அவற்றை மீண்டும் புலன் விசாரணை அதிகாரியிடம் நீதிமன்றம் ஒப்படைக்கலாம். இருந்தாலும் அந்த பொருட்களை புலன் விசாரணைக்காக மற்றும் அடையாளம் காண்பதற்காக நீண்ட நாட்கள் புலன் விசாரணை அதிகாரி அவருடைய பாதுகாப்பில் வைத்திருக்க அனுமதிக்கக்கூடாது.

64. அந்த பொருட்கள் காவல்துறையினரின் பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அந்த பொருட்கள் குறித்து ஒரு விபரக் குறிப்பினை தயாரித்ததற்கு பிறகு அவற்றை ஒரு பெட்டகத்தில் வைக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் "B. லலித்சந்த் நாடார் Vs மாநில அரசு (1990-2-MWN-CRL-23)" என்ற வழக்கில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 451 ன் கீழ் பொருட்களை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தாலும் அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட அந்த பொருட்களுக்கு அவர் உரிமையாளராக இருந்தாலும், அந்த பொருட்களை நீதிமன்றத்தின் பிரதிநிதி என்கிற வகையில் அவரிடம் அவருடைய பாதுகாப்பில் வைத்திருக்கும்படி இடைக்காலமாக ஒப்படைக்கப்பட்டுள்ளதே தவிர அந்த பொருட்களின் மீது அவருக்கு தனிப்பட்ட எந்த உரிமையும் கிடையாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே பொருட்களை அதன் உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கும் போது நீதிமன்றங்கள் கு. வி. மு. ச பிரிவுகள் 451 மற்றும் 457 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள சட்ட நெறிமுறைகளை கருத்தில் கொண்டு நியாயமான, தேவையான, நடைமுறைகடுத்தக்கூடிய நிபந்தனைகளை மட்டுமே விதித்து உத்தரவிட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது
.
CRL. RC. NO - 6/2016, DT - 11.6.2016
(2016-2-MLJ-CRL-98)

இரண்டாவது திருமணம் செய்தால் என்ன தண்டனை

*இரண்டாவது திருமணம் செய்தால் என்ன தண்டனை* !


எப்பொழுது இரண்டாவது திருமணம் செய்யலாம் !!!!

   IPC section 494 & 495

ஒரு கணவன் அல்லது மனைவி அவர்களின் திருமண வாழ்க்கைக்கு பிறகு இன்னொரு திருமணம் செய்துக்கொண்டால் அது செல்லாது. கணவன் அல்லது மனைவி இருதுனை புரிந்த குற்றத்திற்க்கு ஆழாகிவிடுவார்கள்...

ஒரு நபர் தன் வாழ்வில் நடந்த முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய ஒப்புக்கொண்டால் அது சட்டபடி குற்றம்...

தண்டனை !!

இதற்க்கான தண்டனை 7 ஆண்டுகள் சிறைப்படுத்துதல் மற்றும் அபராதமும் ஆகும். இதர காரணங்கள் என்றால் 7 ஆண்டு சிறைவைப்பு மற்றும் அபராதமூம் ஆகும்..

விளக்கம் !!!
எந்த ஒரு நபருக்கு கணவன் அல்லது மனைவி உயிருடன் இருந்து மறுமணம் புரிந்தால் அது செல்லுபடி ஆகாது . ஏனெனில் அது கணவன் அல்லது மனைவியின் வாழ்நாள் காலத்தில் நடைபெறுவதால் அது இருதுணை மணம் குற்றமாகும். ( பிரிவு 494 )

இருதுணை மணகுற்றத்திற்க்கு அத்தியவசியமாணவை !!

1. குற்றவாளி வேறொருவர்க்கு திருமணம் செய்யப்பட்டிருக்க வேண்டும். உண்மையாக நடந்த திருமணத்திற்க்கான நிரூபனம் அவசியமாகிறது.

( the accused must have been married to same person . proof of first marriage necessary )

இங்கு முதல் திருமணம் செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். ஒரு வேலை தரப்பினர்களை ஆளுமை செய்யும் சட்டப்படி முதல் திருமணம் செல்லத்தக்கதல்ல என்றால் இரண்டாவது திருமணம் செய்வதன் மூலம் எந்த குற்றமும் செய்யப்படவில்லை..\

மேலும் தரப்பினர்களின் வழக்காறுசட்டங்குகளின்படி இரண்டாவது திருமணம் முறைபடி செய்யப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய திருமணத்தின் செல்லுபடி தன்மை தரப்பினர்களின் மதங்கள் , அவர்களின் உறைவிடம் மற்றும் சில இன்றியமையாத மதம் தொடர்பான திருமணச்சடங்குகளை நிறைவேற்றபடுவதை சார்ந்துள்ளது.

உதாரணம் !!.


தரப்பினர்கள் இந்துப் பழங்குடியினர்கள் இரண்டாவது மற்றும் அடுதடுத்த திருமணங்கள் அவர்களது பழங்குடியின வழக்கங்கள் வழக்காறுகளால் ஆளூமை செய்யபடுகிறது என்றால் அத்தகைய இரண்டாவது திருமணங்கள் செல்லத்தக்கது.மற்றும் அந்த நபர் தண்டிக்கத்தக்கவரல்ல என்று உச்சநீதிமன்றம் கூறியது...

2. இரண்டாவது திருமணம் புரியும் நாளில் யார்ருடன் முதல் திருமணம் செய்துக் கொண்டாரோ அவர் உயிருடன் இருக்க வேண்டும்.
(on the date of the second marriage the person to whom the accused was married should be alive )

3..இரண்டாவது திருமணம் முதல் திருமணம் போல் கொண்டாட படவேண்டும் மற்றும் அது செல்லத்தக்கதாக இருக்க வேண்டும்.
( second marriage must be celebrated in the same manner as the first marriage and must be a valid one )

அது போல் காமக்கிழத்தி அல்லது வைப்பாட்டி வைத்துக் கொள்ளுதல் திருமணம் ஆகாது .அதே போல் விவகரத்து தீர்ப்பானை செல்லத்தக்க திருமணத்தை கலைக்கிறது. திருமணம் கலைக்கப்பட்ட பிறகு மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடியும்.

இரண்டாவது திருமணத்தை நடத்தி வைக்கும் பூசாரி குற்ற உடந்தையாளர் என்ற வகையில் பிரிவு 494 மற்றும் 109 ன் கீழ் தண்டிக்கப்படுவார் . இருப்பினும் இரண்டாவது திருமணத்திற்க்கு வருவதற்க்கு இசைவு தெரிவித்த நபர்கள் அல்லது அந்த திருமணத்திற்க்கு வீட்டில் இடம் அளித்தவர்கள் அந்த திருமணத்திற்க்கு குற்ற உடந்தையாளர் ஆவதில்லை..

எப்பொழுது இரண்டாவது திருமணம் செய்யலாம்!!!

1. முதல் திருமணம் செல்லுபடி ஆகாது என தகுதி வாய்ந்த நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டால் அந்த நபர் இரண்டாவது திருமணம் செய்துகொள்வது குற்றமல்ல

2. முந்தய கணவன் அல்லது மனைவி பற்றி தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு உயிருடன் இருக்கும் தகவல் ஏதுமில்லை என்றால் மற்ற நபர் மீண்டும் திருமணம் செய்துக்கொள்ள முடியும். இங்கு இரண்டாவது திருமணத்தின் வாழ்க்கைத் துனையிடம் முதல் திருமணம் பற்றி கூறியிருக்க வேண்டும்.

3 . தகுதி வய்ந்த நீதிமன்றத்தின் விவாகரத்து தீர்ப்பாணையின் மூலம் திருமணம் கலைக்கப்பட்டுவிட்டால் இரண்டாவது திருமணம் செய்யலாம்.

காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து அடித்து கொடுமைப்படுத்தியதால்


தனது மகன் மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து, காவலில் வைத்து அடித்து கொடுமைப்படுத்தியதால் ஏற்பட்ட காயத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் தாயார் ரிட் மனு தாக்கல் செய்ய முடியுமா?


"சேர்மன், ரயில்வே போர்டு Vs சந்திரிமாதாஸ் (2002-2-SCC-465)" என்ற வழக்கில், ரயில்வே ஊழியர்களால் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு ரூ 10,00,000 /-த்தை இழப்பீடாக வழங்கி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதேபோல் மதுரை உயர்நீதிமன்றம் " P. இராஜ்குமார் Vs காவல்துறை கூடுதல் இயக்குநர் (CDJ-2014-MHC-3992)"  என்ற வழக்கில், தாயாரை காவல்துறையினர் கொடுமைப்படுத்தியதற்காக இழப்பீடு வழங்குமாறு கோரி மகன் தாக்கல் செய்திருந்த நீதிப்பேராணை மனுவை இந்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு இடைக்கால நிவாரணமாக ரூ. 2,00,000 /-த்தை வழங்கியதோடு, அந்த வழக்கை மத்திய குற்றப் புலனாய்வு துறையினரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல் உச்சநீதிமன்றம் "சுபேஷ்சிங் Vs அரியானா மாநில அரசு (2006-3-SCC-178)" என்ற வழக்கில், காவல்துறையினரின் காவலிலுள்ள ஒருவர் இறக்க நேரிட்டால் அல்லது காவலில் வைத்து துன்புறுத்தப்பட்டிருந்தால் அல்லது இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 21 ல் கூறப்பட்டுள்ள உரிமைகளுக்கான உத்தரவாதம் மீறப்படுதல் போன்ற சம்பவங்கள் மெய்பிக்கப்படும் நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 32 அல்லது 226 ன் கீழ் பாதிக்கப்பட்ட நபருக்கு நீதிமன்றங்கள் இழப்பீடு தொகை வழங்கலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது. இருந்தபோதிலும் அவ்வாறு இழப்பீடு தொகை வழங்குவதற்கு முன்பாக கீழ்க்கண்டவற்றை நீதிமன்றம் தனது கருத்தில் கொள்ள வேண்டும்.

1. இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 21 ல் கூறப்பட்டுள்ளவை மீறப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாக, மறுக்க முடியாத வகையில் அமைந்துள்ளதா?

2. அவ்வாறு அந்த உரிமைகள் மீறப்பட்டுள்ளது நீதிமன்றத்தின் மனசாட்சியை பாதிக்கும் அளவிற்கு மிகப்பெரிய விஷயமாக உள்ளதா?

3. காவலில் வைத்து துன்புறுத்தப்பட்டதால் மரணம் ஏற்பட்டுள்ளதா? அல்லது துன்புறுத்தப்பட்ட நபருக்கு ஏற்பட்ட காயங்களை மெய்பிக்கும் விதமாக மருத்துவ அறிக்கை அல்லது வெளிப்படையான காயங்கள் அல்லது தழும்புகள் அல்லது உடல் ஊனம் உள்ளதா?

காவல்துறையினரின் காவலில் வைத்து ஒரு நபரை துன்புறுத்தியதற்கு அந்த நபரின் வாக்குமூலத்தை தவிர மருத்துவ அறிக்கை அல்லது அந்த வாக்குமூலத்தை உறுதி செய்யக்கூடிய சாட்சியம் அல்லது காவல்துறையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை அல்லது அந்த சம்பவம் முற்றிலும் மிகைப்படுத்தப்பட்டோ கூறப்பட்டுள்ளது என்கிற விசயத்தை தெளிவாக அறிந்து கொள்கிற நிலையில், கட்டளை 32 அல்லது 226 ன் கீழ் இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்க இயலாது. ஆனால் பாதிக்கப்பட்ட நபரை உரிமையியல் /குற்றவியல் நடவடிக்கைகள் மூலம் உரிய நிவாரணங்களை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல் உச்சநீதிமன்றம் "நிலா பட்டி பெகரா Vs ஒரிசா மாநில அரசு (1993-2-SCC-746)" என்ற வழக்கில் காவல்துறை காவலில் இருந்த இளைஞர் இறந்த வகைக்கு அவருடைய தாயாருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.

அதேபோல் வரலாற்று சிறப்புமிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பான "D. K. பாசு Vs மேற்கு வங்க மாநிலம் (AIR-1997-SCW-610)" என்ற வழக்கில், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பண ரீதியாக இழப்பீடு வழங்க வேண்டியது அரசின் கடமை என்று தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே தனது மகனுக்கு ஏற்பட்ட காயங்களுக்காக தாயார் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய எவ்வித தடையும் இல்லை என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

W. P. NO - 9606/2010, DT - 16.12.2016

Banumathi Vs The Secretary, TAMILNADU and Others

(2017-1-TLNJ-CRL-19)

IMPORTANT COURT TERMS :-

ADP :- Assistant Director of Prosecution.
APP :- Assistant Public Prosecutor.
CC No :- Calendar Case. Number.
CJM :- Chief Judicial Magistrate.
DDP :- Deputy Director of Prosecution.
DJ :- District Judge.
DW :- Defense Witness.
FTC :- Fast Track Court.
JM :- Judicial Magistrate.
MC :- Magisterial Clerk.
NBW :- Non Bailable Warrant.
PP :- Public Prosecutor.
PRC No. :- Preliminary Registration Case Number.
PT :- Pending Trial.
PT Warrant :- Prisoner Transfer Warrant.
PW :- Prosecution Witness.
SC No. :- Sessions Case Number.
STC No :- Summary Trial Case Number.
PENDING TRIAL CASE ( PT ) CASE
---------------------------------------
STAGE OF CASE
--------------------------------
1.Taken on file
2. Apperence of accused
3. For copies
4. For charge frame
5. For trial Examination of pw1 to io
6. 313 Crpc Questioning
7. Arguments on both side
8. Judgement
TAKEN ON FILE
----------------------------
1. CC- Calender case
2. STC- Summery trial case
3. PRC- Priliminary register case
4. SC- Sessions case
5. JC- Journial case
ACCQUTAL CASE IN SECTION
-----------------------------------
255 Crpc In STC case
248 Crpc In CC case
235 Crpc In SC case
IMPORTANT Crpc SECTIONS IN TRIAL COURT
---------------------------------
317 Crpc - Petition filied for absence of accused
207 Crpc - For copies
311 Crpc - To recall witness at any stage after trial
91 Crpc - To produce documents
205 Crpc - Apperence dispence of accused
239 Crpc - Discharge of accused
257 Crpc - withdrawal of complaint
301 Crpc - To assisting the prosecution
302 Crpc - Private prosecution
156(3) Crpc - Direction to register a case
173(5)(8) Crpc - Additional documents to be filed after filing a charge sheet
167(2) Crpc Bail in mandatory provision in Sessions case -90days Below 3 years punishment cases - 60
days
437 Crpc Lower court bail
438 Crpc sessions bail / Anticipatory bail
439 Crpc High court bail
Txerms used in Investigation and Police Records :-
AR Copy :- Accident Register Copy.
CD :- Case Diary.
Cr.No. :- Crime Number.
FIR :- First Information Report.
FP :- Finger Print.
FR :- Final Report.
IO :- Investigation Officer.
IP :- In Patient.
LCD :- Last Case Diary.
MO :- Modus Offender.
MO :- Medical Officer.
PM :- Post Mortem.
PMC :- Post Mortem Certificate.
PNR :- Prisoner Nominal Roll.(Prison Record ).
RCS :- Referred Charge Sheet.
r/w :- Read with.
Sec. :- Section.
SOC :- Scene of Crime.
UI :- Under Investigation.
u/s :- Under Section.
WC :- Wound Certificate.
AD :- Action Dropped.
UN :- Undetected.
MF :- Mistake of Fact.
ML :- Mistake of Law.
CSR :- Community Service Register.
GCR :- Grave Crime Report or General Conviction Register.
GD :- General. Diary.
LLI :- Loose Leaf Index.
OP :- Out Post / Out Patient.
PSR :- Prisoners Search Register.
SHO :- Station House Officer.
SHR :- Station House Report.
BC :- Bad Character.
DC :- Dossier Criminal.
HO :- Habitual Offender.
HS :- History Sheet.
KD :- Known Depredator.
LFO :- Local First Offender.
LKD :- Local Known Depredator.
NLFO :- Non Local First Offender.
NLKD :- Non Local Known Depredator.
L & O :- Law and Order.
OD :- Other Duty.
PSO :- Police Standing Order / Personnel Security Officer.
ID :- Illicit Distillation.
IMFL :- Indian Made Foreign Liquor.
IMFS :- Indian Made Foreign Sprit.
GSE :- Good Service Entry.
MSE :- Meritorious Service Entry.
............................................................

Case  Type         Description

DC           Special Leave Petition (Civil)                  
SR            Special Leave Petition (Criminal)              
WC           Writ Petition (Civil)                          
WR           Writ Petition(Criminal)                        
AC           Appeal Civil                                    
AR          Appeal Criminal                                
TC            Transfer Petition (Civil)                      
TR            Transfer Petition (Criminal)                    
RC            Review Petition (Civil)                        
RR           Review Petition (Criminal)                      
OC           Original Suit                                  
NC           Transfer Case (Civil)                            
NR           Transfer Case (Criminal)                        
BC            Writ Petition (Civil)...                        
BR            Writ Petition (Criminal)...                    
PC            SLP (Civil) CC No.          
PR           SLP (Criminal) CRLMP No.        
MC          Motion Case(Civil)                              
MR           Motion Case(Crl.)                              
CC            Contempt Petition (Civil)                      
CR           Contempt Petition (Criminal)                    
XC           Tax Reference Case                              
LC            Special Reference Case                          
EC            Election Petition (Civil)                      
QC           Curative Petition(Civil)
QR           Curative Petition(Criminal)                  
FC           Arbitration Petition
RA           REF. U/A 317(1)
DR           Death Ref. Case(Criminal)
DCD       Special Leave Petition (Civil) D. No.[D=Diary]                                
SRD        Special Leave Petition (Criminal)  D. No.                    
WCD        Writ Petition (Civil)   D. No.                              
WRD        Writ Petition(Criminal) D. No.                              
ACD        Appeal Civil   D. No.                                        
ARD        Appeal Criminal    D. No.                                    
TCD         Transfer Petition (Civil) D. No.                            
TRD         Transfer Petition (Criminal)    D. No.                      
RCD         Review Petition (Civil)       D. No.                        
RRD         Review Petition (Criminal)  D. No.                          
OCD        Original Suit   D. No.                                      
NCD        Transfer Case (Civil)   D. No.                
NRD        Transfer Case (Criminal) D. No.                              
BCD         Writ Petition (Civil)...     D. No.                          
BRD         Writ Petition (Criminal)... D. No.                          
PCD         SLP (Civil) CC No.   D. No.              
PRD         SLP (Criminal) CRLMP D. No.    
MCD        Motion Case(Civil)   D. No.                                  
MRD        Motion Case(Crl.)     D. No.                                
CCD        Contempt Petition (Civil)  D. No.                            
CRD        Contempt Petition (Criminal)   D. No.                        
XCD        Tax Reference Case      D. No.                              
LCD         Special Reference Case  D. No.                              
ECD         Election Petition (Civil)  D. No.                            
QCD        Curative Petition(Civil) D. No.    
QRD        Curative Petition(Criminal)  D. No.                      
FCD         Arbitration Petition  D. No.    
RAD        REF. U/A 317(1)  D. No.                                      
DRD       Death Ref. Case(Criminal)    D. No.

 சார் உச்சநீதிமன்றம் "தேவிந்திர சிங் நருலால் Vs மீனாட்சி நன்கியா (2012-3-DMC-1),(AIR - 2012-SC-2890)" என்ற வழக்கில் ஆறுமாத கால காத்திருப்பு என்ற விதிமுறையை தளர்த்தி ஒத்திசை மணமுறிவு வழங்கி தீர்ப்பு கூறியுள்ளது
 அதேபோல் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில அரசு, CRP. NO - 983/2016, DT - 29.2.2016 (2016-3-DMC-1) என்ற வழக்கிலும் இதே மாதிரி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது
 கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்றால் நீதிமன்றம் 6 மாதம் காத்திருப்பு காலத்தை தளர்த்தலாம். K. Thiruvengadam Vs Nil (2008-1-MLJ-751)
 ஒருவரின் ஓய்வூதிய பலன்களை நீதிமன்றத்தின் மூலமாக பற்றுகை செய்ய முடியாது. CRP. NO - 392/2012, Tmt. Saroja Sukumaran Vs R  Padhmanapan (2012-5-LW-CIVIL-451)
 CPC, sec 60(1)( g) and (K), 60(1A) ன்படி ஓய்வு கால பலன்களான பணிக்கொடைத் தொகை மற்றும் வருங்கால வைப்பு நிதித் தொகை ஆகியவற்றை பற்றுகை செய்ய முடியாது. Chennai high Court (1990-1-MLJ-74)
 வருங்கால வைப்பு நிதி தொகையை நீதிமன்றம் பற்றுகை செய்ய முடியாது. Supreme Court (AIR-2009-SC-930)
 இதே கருத்தை வலியுறுத்தி 2009-3-LW-396)லிலும் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது

சிலிண்டர் வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பமும் தெரிந்து கொள்ள வேண்டிய

சிலிண்டர் வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பமும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி.


ஒரு LPG சிலிண்டர் வாங்கி அது தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை….

அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும்
அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை…!

இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால்…
சிலண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரும் அந்த காப்பீட்டுத் தொகையை
கேட்டு உரிமை கோருவதில்லை…!

நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையிலும்
அந்த காப்பீட்டுக்கான பாலிசி தொகையும் சேர்த்துதான் செலுத்தி வருகிறோம்…!

இந்த காப்பீடு குறித்து அரசாங்கமோ, எண்ணெய் நிறுவனங்களோ கூட வாடிக்கயாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதும் இல்லை…!

சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேர்ந்தால்….

சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்!

(இதை உங்கள் சுவற்றிலும் பகிருங்கள் நண்பர்பளே… அனைவரும் அறிந்து கொள்ளட்டும்.)

பிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்தரவு.

பிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்தரவு.
ஓராண்டுக்கு மேல் பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யாவிட்டாலும், அதற்கான சான்றிதழ் பெற, நீதிமன்றம் செல்லாமல், கோட்டாட்சியர்களான, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வேலுார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த, ஆர்.டி.ஓ.,க்களுக்கு, பிறப்பு, இறப்பு பதிவு செய்வது தொடர்பான, சிறப்பு பயிற்சி முகாம், வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமீபத்தில் நடந்தது.

இது குறித்து, பிறப்பு, இறப்பு கூடுதல் பதிவாளரும், பொது சுகாதாரத் துறை இணை இயக்குனருமான, ஈஸ்வரன் கூறியதாவது: பிறப்பு, இறப்பை ஓராண்டுக்கு மேல் பதிவு செய்யாமல் இருந்தால், நீதிமன்ற அனுமதி பெற்றே, பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.

தற்போது, அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி, நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்.அதை, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்த பின், ஆர்.டி.ஒ., பிறப்பு, இறப்பை பதிவு செய்து, சான்றிதழ் வழங்குவார்.இவ்வாறு அவர் கூறினார்

ஒரு முன் ஜாமீனையோ அல்லது ஜாமீனையோ ரத்து செய்வதற்கு

ஒரு முன் ஜாமீனையோ அல்லது ஜாமீனையோ ரத்து செய்வதற்கு தகுந்த காரணம் இருக்க வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் அந்த காரணத்தை நிரூபிக்கும் விதமாக ஆதாரங்களும் இருக்க வேண்டும். ஜாமீன் / முன்ஜாமீன் வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 21 ல் கூறப்பட்டுள்ளவற்றோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஜாமீன் / முன்ஜாமீன் வழங்குவதன் மூலம் ஒரு நபரின் சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் அழித்தல் / நீக்குதல் என்கிற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. அந்த சட்டத்தில் கைது செய்வதற்கான வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே கு. வி. மு. ச பிரிவு 41ல் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளையும், அந்த சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 41(A) ல் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளையும் நீதிமன்றம் தன்னுடைய கவனத்தில் கொள்ள வேண்டும்.

கைது என்பது உரிமையியல் சுதந்திரத்திற்கு எதிரானது ஆகும். கைது செய்வதை யாரும் விரும்பமாட்டார்கள். கைது செய்யப்படுவதால் ஒருவருக்கு எந்த பெருமையும் ஏற்படாது. அதனால்தான் தனி மனித சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. மிகவும் மதிப்பு வாய்ந்த தனி மனித சுதந்திரத்தை ஒரு நபரிடமிருந்து பறிக்கும் பொழுது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

ஒரு குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி புலன் விசாரணையில் குறுக்கிடுகிறார் அல்லது ஏற்கனவே செய்தது போல் ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார் அல்லது வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயல்கிறார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆனால் மட்டுமே ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். ஆனாலும் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும்.

ஒருவர் மோசடி செயல்களில் ஈடுபட்டு ஜாமீன் அல்லது முன்ஜாமீன் உத்தரவுகளை பெறுவது மிகவும் மோசமான செயலாகும். இந்த மாதிரி செயல்களில் வழக்கறிஞர்கள் ஈடுபடக்கூடாது. அது வழக்கறிஞர்கள் மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிடும்.

எனவே ஒருவரின் ஜாமீன் அல்லது முன்ஜாமீனை திரும்பப் பெறும்போது நீதிமன்றங்கள் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டும். கண்ணை மூடிக் கொண்டு ஜாமீனை ரத்து செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. OP. NO - 5984/2015, DT - 11.3.2016

சவானி கோபர் பி. லிட் Vs ஆய்வாளர், மாவட்ட குற்றப்பிரிவு, வேலூர் மாவட்டம் மற்றும் பலர்

(2016-2-MWN-CRL-154)

எஸ்மா_சட்டம்_என்றால்_என்ன_தெரியுமா.??

எஸ்மா_சட்டம்_என்றால்_என்ன_தெரியுமா.??

1981-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த அத்தியவாசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம், ( #Essential_Services_Maintenance_Act – #esma)

போராட்ட காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரங்களை கொடுக்கிறது. அதன்படி, தபால், தந்தி, தொலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு, விமானம், ரயில், சாலை போக்குவரத்து போன்றவை அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் உணவுப் பொருள் கொள்முதல், விநியோகம் போன்ற துறைகளும், பாதுகாப்பு, துறைமுகங்கள் போன்றவையும் இந்த சட்டத்தின் கீழ் உள்ளன. மின்சாரம், குடிநீர், பால் விநியோகம், வங்கி போன்றவற்றையும் அத்தியாவசிய சேவைகளாக கருத இச்சட்டம் வகை செய்கிறது.
அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம், ஸ்டிரைக் போன்ற போராட்டங்களில் இறங்குவதை இச்சட்டம் தடை செய்கிறது. வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதோ, போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதோ, தேவையேற்படும் பட்சத்தில் கூடுதல் நேரம் வேலை செய்ய மறுப்பதோ கூட சட்ட விரோதம்தான்.
அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை வாரண்ட் ஏதுமின்றி கைது செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கு உண்டு. அரசு ஊழியர்கள் எனில் பணி நீக்கம், அத்தியாவசிய சேவைத்துறையில் உள்ள பிற தொழிலாளர்களுக்கு ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது.

2002-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்த போது, சுமார் 2 லட்சம் பேரை அப்போதைய முதலமைச்சர் அம்மா அவர்கள் பணி நீக்கம் செய்தது இச்சட்டத்தை பயன்படுத்தியே. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே, நீக்கப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது....!

Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest

Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest என்பதையே ”SARFAESI ACT” என்று சுருக்கமாக அழைக்கிறோம்.

வங்கிகள் நீதிமன்றங்களுக்குச் செல்லாமலேயே ஒருவருக்கு கொடுத்த கடனை வசூலித்துக் கொள்வதற்கு இந்தச் சட்டம் முழு அதிகாரத்தைத் தருகிறது. இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், “வங்கிக் கடன் வசூல் தீர்ப்பாயம்” என்ற அமைப்பின் உதவியையும் வங்கிகள் பெறலாம்.
இந்தச் சட்டம் கடந்த 2002ம் ஆண்டுதான் இயற்றப்பட்டது.

2002ம் ஆண்டுக்கு முன்பு வரை வங்கிகள் தன்னுடைய வாடிக்கையாளருக்கு வழங்கிய கடனை வசூலிக்க படாதபாடுபட்டு வந்தது.

அதற்கு வங்கியானது முதலில் உரிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். வழங்கப்பட்டிருக்கும் கடன் தொகைக்கு ஏற்ப நீதிமன்றத்தில் கட்டணம் செலுத்த வேண்டும். கடனுக்காக ஜாமீனாக கொடுக்கப்பட்ட சொத்தை ஜப்தி செய்வதற்கு பல சட்ட நடைமுறைகளை பின்பற்றி, வழக்கை நடத்தி தீர்ப்பைப் பெற வேண்டும்.

ஆனால், இந்த சர்பாசி சட்டம் அமுலுக்கு வந்தவுடன் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. யாரையும் எதிர்பார்க்காமல், வங்கியானது தான் கொடுத்த கடனை தானே வசூல் செய்வதற்கு இந்தச் சட்டம் வழிவகுத்தது.

இந்தச் சட்டத்தின் கீழ், 'கடன் வசூல் தீர்ப்பாயம்' (Debit Recovery Tribunal) என்று ஒன்றும் 'கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயம்' (Debit Recovery Appellate Tribunal) என்று ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
. இதில் எளிய முறையில் வங்கியானது கடன்காரர்கள் மீது வழக்கு தொடுக்கலாம். பிணைய சொத்தை வழக்கு தொடுப்பதற்கு முன்பாகவே வங்கியின் அதிகாரம் பெற்ற அலுவலர் மாவட்ட குற்றவியல் நடுவர் (DRO) மற்றும் மாவட்ட ஆட்சியர் வாயிலாக பற்றுகை செய்யலாம். நீதிமன்றம் பக்கம் போகும் வேலையே வங்கிக்கு இல்லை. அதே மாதிரி கடன்காரர்களும் கண்டபடி எதிர்வாதம் செய்யவும் முடியாது.

பிரிவு - 13
அடுத்தவர்கள் வாங்கிய கடனுக்கு உத்தரவாதம் அளித்துள்ளவர்கள், அதற்கு ஈடாக அளித்துள்ள சொத்துகளின் மீது சர்பாசி சட்டம் 2002 - பிரிவு 13-ன் கீழ் நடவடிக்கை எடுக்கமுடியும். ஒரு வேளை உத்தரவாத கையெழுத்திட்ட நபர்கள் அதற்கு ஈடாக நிறுவன பங்குகளைக் காட்டியிருந்தால் அவற்றை விற்பதற்கான நடவடிக்கை எடுக்க முடியும்.

பிரிவு - 17
வங்கியினுடைய சட்ட நடவடிக்கைளில் குறை ஏதாவது இருந்தால் அல்லது வங்கியானது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருந்தால் அது பற்றி கடன்பெற்றவர் சர்பாசி சட்டம் பிரிவு 17-இன்படி கடன் வசூல் தீர்ப்பாயத்திடம் முறையிடலாம்.

பிரிவு - 34
பிரிவு 34-இன்படி சர்பாசி சட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை வங்கிகள் செயல்படுத்துவதை தடுத்து நிறுத்தும்படி எவரும் இடைக்கால உறுத்துக்கட்டளை உள்ளிட்ட இடைக்கால நிவாரணம் எதையும் நீதிமன்றங்களில் இருந்து பெறவே முடியாது.
ஏனென்றால், அவைகளை வழங்குவதற்கு உரிமையியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது.
நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்கும்போது தனி நபர் பிணை அல்லது ஜாமீன் கேட்பது அவர்களின் வழக்கமான நடைமுறையாகும். சொந்தமாக ஜாமீன் அளித்த தொழிலதிபர்களிடமிருந்து கடனை மீட்கும் நடவடிக்கையை வங்கிகள் கடைசிபட்சமாகத்தான் மேற்கொள்கின்றது.

சொந்த ஜாமீன் அளித்தவர்களின்மீது கொடுத்த கடனை வசூலிப்பதற்காக வங்கிகள் எடுத்த நடவடிக்கை மிகக் குறைவாகும்.
கடன் மீட்பு தீர்ப்பாயத்துக்கு செல்லும் முன் உத்தரவாதம் அளித்த நபரின் சொத்துகளை முடக்கி அவற்றை விற்பதற்கான நடவடிக்கையை வங்கிகள் முதலில் எடுக்க வேண்டும்.

கடன் வாங்கிய ஒரு நிறுவனம் நஷ்டமாகி மூடப்பட்டு இருந்தால், அந்நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு சொந்த ஜாமீன் வழங்கியவர்களிடமிருந்து அந்தக் கடன் தொகையை வசூலிக்குமாறு நிதி அமைச்சகம் அனைத்து பொதுத் துறை வங்கிகளுக்கு கடந்த 18.03.2016 அன்று அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக தொடரப்படும் வழக்குகள் மற்றும் சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து இதே போன்ற நடவடிக்கைகளை பிற தொழில் நிறுவனங்களின் தொழிலதிபர்களிடமும் மேற்கொள்ள வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக் கையை ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி அனுப்பியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸுக்கு கடன் அளித்த விஷயத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு சென்று விட்ட நிலையில் அவரிடமிருந்து, ”வழங்கிய கடனை” வசூலிக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. அதனால் இதுபோன்ற நிலை பிற வாராக்கடனை செலுத்தாத நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக நிதி அமைச்சகம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிய வருகிறது.

சர்பாஸி சட்டத்தின் வாயிலாக வங்கி எடுத்து ஏலம் விட்ட சொத்தை ஒருவர் வாங்குகின்றார். அவ்வாறான ஏலத்திற்கு எடுத்த தொகைக்கு Sale Certificate வழங்கப்படுகின்றது. அந்த Sale Certificate அடிப்படையில் ஏலத்தில் சொத்தை எடுத்தவர் அதை பதிவு செய்ய முனையும்பொது, பதிவாளர் அந்த சொத்தின் அரசு மதிப்பிற்கு Stamp Duty செலுத்த சொல்கின்றார். உயர்நீதிமன்றமானது, ection 47-A of the Indian Stamp Act, 1899, பொருந்தாது எனவும் Sale Certificate மதிப்பிற்கு Stamp Duty செலுத்துவதே சரி! என ஆணையிட்டுள்ளது. வழக்கு எண்: 2015 (1) CTC 526 (Mad)

ஒருவர் வீட்டிற்காக வங்கியில் கடன் வாங்கியுள்ளார். அவர் வீட்டை வாடகைக்கு வீட்டை விட்டுள்ளார். இதற்கிடையில் வீட்டிற்காக வங்கியில் வாங்கிய கடனை கட்டமுடியாத நிலையில், வங்கியானது சர்பாஸி சட்டத்தை பயன்படுத்தி அந்த வீட்டின் உடமையை எடுக்க முயற்சி செய்கின்றது. அப்போது ஒரு சட்ட வினா எழுகின்றது. வாடகைதாரர் குடியிருக்கும்போது, மேற்படி சட்டத்தை கொண்டு அவரை வாடகைதாரரை அங்கிருந்து அகற்றிவிட்டு அந்த வீட்டின் உடமையை எடுக்கு சர்பாஸி சட்டம் அனுமதிக்கின்றதா? அதற்கு உச்சநீதிமன்றம் “சர்பாஸி சட்டத்தில் வாடகைதார்ர் இருக்கும்போது அவரை காலி செய்து உடமை எடுக்க அதிகாரம் இல்லை எனவும் வாடகைதாரரை முறையாக சட்டப்படியாக அவரை அந்தவீட்டைவிட்டு காலி செய்த பின்னரே அந்த வீட்டின் உரிமையை எடுக்க முடியும் என தீர்ப்பளித்துள்ளது. வழக்கு எண்: 2016(2) CTC 319 (SC)

சர்பாஸி சட்டத்தின்படி சொத்தின் உடமையை எடுக்கும் வகையில் வங்கியானது நீதிமன்றத்தில் ஆணையிட கோரியதில், வங்கி அதற்கான ஆணையை பிறப்பித்திருக்கும் நிலையில் (உடமை இன்னும் எடுக்கப்படவில்லை) சொத்தின் உரிமையாளர் DRT –ல் மேல்முறையீடு செய்கின்றார். வங்கியானது சொத்தின் உடமை இன்னும் எடுக்கபடாத்தால், மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படவேண்டும் என்று வாதிட்டதின்பேரில் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகின்றது. சொத்தின் உரிமையாளரின் மேல்முறையீட்டின் உரிமையானது சொத்தின் உடமை எடுக்கப்படவில்லை என்பதை காரணமாக கொண்டு, எந்தவிதத்திலும் பாதிக்காது என தீர்ப்பளித்துள்ளது. வழக்கு எண்: 2015(4) CTC 18 (Mad)
SARFAESI சட்டத்தின் படி கடன் பெற்றவரின் சொத்துக்களை வங்கி எடுத்து கொள்கின்றது. அந்த கடன் பெற்றவர் இந்திய அரசுக்கு சுங்கவரி செலுத்த வேண்டும் என்பதால் வங்கியானது அந்த சொத்தை விற்கும்போது விற்ற பணத்தில் இருந்து முதலில் இந்திய சுங்கவரி துறையானது வரியை பெற உரிமை உள்ளது! என்ற வாதத்தை மேற்படி சட்டத்தின் பிரிவு 35 யை காட்டி சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. வழக்கு எண்: 2016 (3) CTC 66 (Mad).

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசு ஊழியரை எவ்வளவு காலத்திற்கு பணியிடை நீக்கத்திலேயே அரசு வைத்திருக்கலாம்?

DSP செல்வமணி லஞ்ச வழக்கு :

செல்வமணி என்பவர் சார்பு ஆய்வாளராக 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணியில் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 1998 ஆம் ஆண்டில் ஆய்வாளராகவும், 2010 ஆம் ஆண்டில் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றார். அவர் இராயபுரம் உதவி ஆணையராகவும், தாம்பரம் உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2011 ஆம் ஆண்டில் மாவட்ட குற்றப் பதிவேட்டு பிரிவிலும், 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திருச்சி மாவட்டம் லால்குடியில் காவல் துணை கண்காணிப்பாளராகவும் பணியமர்த்தப்பட்டார். அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் லால்குடி, கல்லாகுடி, கொல்லடம், சமயபுரம் மற்றும் சிறுகானூர் காவல் நிலையங்கள் இருந்தது.

இந்நிலையில் ராஜமாணிக்கம் என்பவரிடம் ரூ. 25,000/- லஞ்சம் கேட்டதாக ஒரு வழக்கு திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பு ஆய்வாளரால் குற்ற எண். 11/2012 என்கிற எண்ணில் பதிவு செய்யப்பட்டது. அதனால் அவரை பணியிடை நீக்கம் செய்து G. O. 2D. 208 HOME (Pol. 2) Department என்கிற எண்ணில் ஓர் உத்தரவு 27.7.2012 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. DSP மீதான லஞ்ச குற்ற வழக்கில் இறுதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த DSP தன்னை பணியிடை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் W. P. NO - 21014/2013 என்ற எண்ணின் கீழ் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தார். அதனை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், DSP யை பணியிடை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி ஒரு மனுவை அரசிற்கு அளிக்குமாறும், அதனை அரசு பரிசீலனை செய்து DSPயை அதிக முக்கியத்துவம் இல்லாத தொலை தூரத்திலுள்ள ஒரு பதவியில் நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவினால் குறையுற்ற அரசு ஒரு ரிட் மேல்முறையீட்டை W. A. NO - 1552/2014 என்ற எண்ணின் கீழ் தாக்கல் செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் DSP தன்னை பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு ஒரு மனுவை அரசிடம் அளிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டதோடு, அந்த மனுவை இரண்டு வாரங்களில் பரிசீலனை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

மேற்படி உத்தரவுபடி DSP ஒரு கோரிக்கை மனுவை தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளரிடம் 17.12.2012 ஆம் தேதி அளித்தார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட முதன்மை செயலாளர், DSP லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பொறி வைத்து பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருவதால், பொது நிர்வாகத்துறையில் அவருக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்கப்பட்டால், அது மற்ற பொது ஊழியர்களின் நடத்தையை பாதிக்கும் என குறிப்பிட்டு DSP யின் கோரிக்கை மனுவை நிராகரித்து 30.12.2014 ம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்தார். அந்த உத்தரவை எதிர்த்து DSP சென்னை உயர்நீதிமன்றத்தில் W. P. NO - 26606/2015 என்ற ரிட் மனுவை தாக்கல் செய்தார்.

DSP தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் " அம்பிகாபதி Vs இயக்குநர், மக்கள் நல்வாழ்வுத் துறை (1991-WLR-273) மற்றும் அஜய் குமார் செளத்ரி  Vs யூனியன் ஆப் இந்தியா (2015-2- SCALE - 432)" ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, பணியிடை நீக்கம் உத்தரவு 3 ம மேல் நீடித்திருக்ககூடாதென்றும், அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் தவறு செய்ததாக கூறப்படும் அரசு ஊழியர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் மீது உரிய உத்தரவை பிறப்பித்து, அந்த பணியிடை நீக்கத்தை நீட்டித்திருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் இந்த DSP யை எந்தவிதமான காரணங்களையும் குறிப்பிடாமல் பணியிடை நீக்கம் செய்து, நீண்ட காலமாக பணியிடை நீக்கத்திலேயே அரசு வைத்துள்ளது என்றும், எனவே அந்த உத்தரவை ரத்து செய்து DSP யை பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

DSP தரப்பு வாதத்தை கேட்ட உயர்நீதிமன்றம், இந்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம் " அஜய் குமார் செளத்ரி Vs யூனியன் ஆப் இந்தியா"  என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்க வேண்டும் என்று கூறியது.

ஓர் அரசு ஊழியரை பணியிடை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவானது 3 மாதங்களுக்கு மேல் நீடித்திருக்ககூடாது எனவும், அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் தவறு செய்ததாக கூறப்படும் அரசு ஊழியருக்கு அந்த குற்றச்சாட்டு சார்வு செய்யப்பட்டு, அதன் மீது உரிய உத்தரவை பிறப்பித்து, இடைநீக்கத்தை நீட்டித்திருக்க வேண்டுமென்று மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசாங்கம் கடித எண் 13519/எண்/2016-1,P & AR (PER. N) Dept என்கிற 23.07.2015 ஆம் தேதியிட்ட கடிதத்தின் மூலம் அரசு முதன்மை செயலாளர்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகள் மற்றும் அனைத்து துறையினரையும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

எனவே ஒரு அரசு ஊழியரை நீண்ட காலமாக எந்த காரணங்களும் இல்லாமல் பணியிடை நீக்கத்தில் வைத்திருப்பது நியாயமற்றது என்று கூறி இந்த DSP யை தொலை தூரத்தில் உள்ள அதிக முக்கியத்துவம் இல்லாத பணியில் வேலைக்கு அமர்த்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

W. P. NO - 26606/2015, DT - 29.9.2016
K. Selvamani Vs Chief Secretary, Tamilnadu and DGP,
(2017-1-CTC-795)
(2016-7-MLJ-766)

காவல்துறை முக்கிய அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் :

காவல்துறை முக்கிய அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் :


1.  காவல்துறையினர் எப்போதெல்லாம் ஒரு வழக்கின் புலன் விசாரணையை மறுக்கலாம் என்பது குறித்து, அரசாணை எண். 332, நீதித்துறை 28, பிப்ரவரி, 1906 மற்றும் அரசாணை எண். 485 நீதித்துறை 14,மார்ச் 1911 என்ற அரசாணைகளை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழ்நாடு காவல்நிலை ஆணை எண். 562 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 157(1)(b) யிலும் இதுகுறித்து கூறப்பட்டுள்ளது.

2.  கடித எண். வி1 - 24021/97/84/ஜிபிஏஎல், நாள் - 4.7.1978 மற்றும் 10.7.1985 ன்படி இந்திய அரசு, உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மத்திய காவல் அமைப்புகளின் தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில், கண்டிப்பாக காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிகள் குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

3.  காவல்நிலைய பொறுப்பு அலுவலர்கள் FIR நகலை புகார்தாரருக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க மறுப்பது மிகக் கடுமையான குற்றமாகும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் சி. எண். /165918/குற்றம் /(2)(1)/94, நாள் - 27.7.1994 ன்படி கீழ் ஆணை பிறப்பித்துள்ளார்.

4.  காவல் நிலைய ஆய்வாளர் புகாரை பெற்றுக் கொண்டவுடன் அது பிடியாணை வேண்டா குற்றமாக இருந்தால் உடனடியாக FIR பதிவு செய்ய வேண்டும். பிடியாணை வேண்டும் குற்றமாக இருந்தால் அந்த குற்றத்தை விசாரணை செய்ய, குற்றவியல் நடுவரின் அறிவுறுத்தலை பெற வேண்டும். சாதாரண மனுக்களை பெறும்போது, அவை உடனடியாக மனுக்கள் பதிவேட்டில் (CSR) பதிவு செய்யப்பட்டு, புகார்தாரருக்கு உடனடியாக CSR நகல் கொடுக்க வேண்டும். இவைகளை கடைபிடிக்காதது சட்ட விரோதமானதாக கருதப்பட்டு கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் RC. NO /62868/குற்றம் /1(2)/2001,நாள் - 31.3.2001 ன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் இது தொடர்பாக அரசாணை எண். 865, உள் (காவல் - 1) துறை, நாள் - 9.6.1997.என்ற அரசாணை உள்ளது. மேலும்  தலைமை அலுவலக நிலை ஆணை 133622/குற்றம் - 1(1)/97, நாள் - 17.6.1997 ம் உள்ளது.

5.  காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை உள்நோக்கத்துடன் பதிவு செய்யாமல் இருப்பதை கண்காணிக்கவும், தடுத்திடவும் என்ன விதிமுறைகளை காவல்துறையினர் பின்பற்ற வேண்டும் என்று RC. NO - 274292/குற்றம் - 1(1)/2004, நாள் - 3.2.2005 என்ற சுற்றறிக்கையின் கீழ் விதிமுறைகளை வகுத்துள்ளார்.

6.  வரதட்சணை மரணம் வழக்கில், கோட்டாட்சியர் பிரேத பரிசோதனை நடத்திய 15 நாட்களுக்குள் புலன் விசாரணை அதிகாரிக்கு அந்த பிரேத பரிசோதனை அறிக்கையை அனுப்பிட வேண்டும் என தமிழ்நாடு அரசு, உள்துறை, அரசு செயலாளர் கடிதம் (பல்வகை) எண். 1059,நாள் - 23.5.1990 ன் கீழ் ஆணை பிறப்பித்துள்ளார்.

7.  குடும்பத் தகராறு சம்பந்தப்பட்ட புகார்களிலும், சாதாரண பிரச்சினை சம்பந்தப்பட்ட புகார்களிலும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் வீட்டுக்கு நேரிடையாக சென்று அவர்கள் பிரச்சினையை விசாரித்து ஆலோசனை வழங்க வேண்டும். தேவையில்லாமல் இதுமாதிரியான பிரச்சினைகளில் கணவரை கைது செய்யக்கூடாது என காவல்துறை தலைமை இயக்குநர் ந. க. எண். 134085/குற்றம் - 1(3)/2003 என்ற கடிதத்தின் வாயிலாக அனைத்து காவல் நிலையத்திற்கும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

8.  கைது செய்யப்பட்ட பெண்களிடம் காவல்துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநர் ந. க. எண். 15857/குற்றம் 1(1)/2004,நாள் - 21.7.2004 ம் தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

காவல் நிலையத்தில் பணத்தை திருப்பி தருவதாக ஒப்புக்கொண்டு

 காவல் நிலையத்தில் பணத்தை திருப்பி தருவதாக ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுக்கும் ஒப்புதல் கடிதத்தை ஒரு சாட்சிய ஆவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது.
காவல் நிலையத்தில் பணத்தை திருப்பி தருவதாக ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுக்கும் ஒப்புதல் கடிதத்தை ஒரு சாட்சிய ஆவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. அவ்வாறு தாக்கல் செய்ய்யப்படும் ஆவணம் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 27ன் கீழ் தடை செய்யப்பட்ட ஆவணம் ஆகும்.

*Panneerselvam C. Vs. Manoharan (T. Ravindran J) 2017 (1) CTC 18*

28 RIGHTS OF THE ACCUSED PERSONS

28 RIGHTS OF THE ACCUSED PERSONS
1. Protection against arbitrary or unlawful arrest (Article 22 of the Constitution and Section 41, 55 and 151 of Cr.P.C.)
2. Protection against arbitrary or unlawful searches (Sees. 93, 94, 97, 100(4) to (8). and 165 of Cr.P.C.)
3. Protection against “Double Jeopardy” (Article 20(2) of the Constitution and Section 300 of Cr.P.C.)
4. Protection against conviction or enhanced punishment under ex-past facto law (Article 20(1) of the Constitution)
5. Protection against arbitrary or illegal detention in custody (Article 22 of the Constitution and Sees. 56, 57 and 76 of Cr.P.C.)
6. Right to be informed of the grounds, immediately after the arrest (Article 71(1) of the Constitution and Section 50 of Cr.P.C. as also Sees. 55 and 75 of Cr.P.C.)
7. Right of the arrested person not to be subjected to unnecessary restraint (Section 49 of Cr.P.C.)
8. Right to consult a lawyer of his own choice (Article 22(1) of the Constitution and Section 303 of Cr.P.C.)
9. Right to be produced before a Magistrate within 24 hours of his arrest (Article 22(1) of the Constitution and Sees. 57 and 76 of Cr.P.C.)
10. Right to be released on bail, if arrested (Sees. 436, 437 and 439 of Cr.P.C., also Sees. 50, 20 and 167 of Cr.P.C.)
11. Right not to be a witness against himself (Article 20(3) of the Constitution)
12. Right to get copies of the documents and statements of witnesses on which the prosecution relies (Sees. 173(7), 207, 208 and 238 of Cr.P.C.)
13. Right to have the benefit of the presumption of innocence till guilt is proved beyond reasonable doubt (Sees. 101-104 of Evidence Act)
14. Right to insist that evidence be recorded in his presence except in some special circumstances (Section 273 of Cr.P.C., also Section 317 Cr.P.C.)
15. Right to have due notice of the charges (Sees. 218, 228(2), 240(2), etc. of Cr.P.C.)
16. Right to test the evidence by cross-examination (Section 138 of Evidence Act)
17. Right to have an opportunity for explaining the circumstances appearing in evidence against him at the trial (Section 313 of Cr.P.C.)
18. Right to have himself medically examined for evidence to disprove the commission of offence by him or for establishing commission of offence against his body by any other person (Section 54 of Cr.P.C.)
19. Right to produce defence witnesses (Section 243 of Cr.P.C.)
20. Right to be tried by an independent and impartial Judge (The Scheme of Separate of Judiciary as envisaged in Cr.P.C., also Sees. 479, 327, 191, etc. of Cr.P.C.)
21. Right to submit written arguments at conclusion of the trial in addition to oral submission (Section 314 of Cr.P.C.)
22. Right to be heard about the sentence upon conviction (Sees. 235(2) and 248(2) of Cr.P.C.)
23. Right to fair and speedy investigation and trial (Section 309 of Cr.P.C.)
24. Right to appeal in case of conviction (Sees. 351, 374, 379, 380 of Cr.P.C. and Arts. 132(1), 134(1) and 136(1) of the Constitution)
25. Right not to be imprisoned upon conviction in certain circumstances (Section 360 of Cr.P.C., and Section 6 of the Probation of Offenders Act)
26. Right to restrain police from intrusion on his privacy (Article 31 of the Constitution)
27. Right to release of a convicted person on bail pending appeal (Section 380 of Cr.P.C.)
28. Right to get copy of the judgment when sentenced to imprisonment (Sec.363 of Cr.P.C.)

IMPORTANT DECISIONS (25.08.2017)

Agreement to sell - Non execution of sale deed inspite of receiving entire sale amount - Vendor left their place of residence without leaving their addresses and shut off their mobiles - Allegations not of civil nature - Petition for quashing dismissed. (2017(3) Criminal Court Cases 417 (M.P.)

Divorce - Exemption to file divorce petition within one year of marriage - A case of exceptional hardship to husband - Exemption granted. (2017(3) Civil Court Cases 442 (Uttarakhand)
Eye witness fled from the spot - It completely over-rides the direct evidence rule. (2017(3) Criminal Court Cases 346 (S.C.) 
Marriage - Girl aged 14 years and boy aged above 18 years - Till the minor child attains the age of majority, parties are merely contracting parties and not husband and wife. (2017(3) Civil Court Cases 490 (Gujarat)
Partition - Partial partition - Not impermissible in all events. (2017(3) Civil Court Cases 425 (H.P.)

Will - Execution - Scribe of Will one of the attesting witness - There is no law that he is the best witness and he alone is competent to depose about execution of Will. (2017(3) Civil Court Cases 510 (Madras)
Back window

Acquisition of land - Interest - No period can be excluded on whatever account. (2016(1) Apex Court Judgments 664 (S.C.)
Charge framed for higher offence - Accused can be convicted for lesser offence provided such lesser offence is "cognate offence" - Ingredients of such lesser offence has to be common - If offence/s for which charge is framed, is one and other offence for which conviction is recorded is different in its ingredients or it is different in its nature then conviction would not sustain as no charge was framed. (2016(1) Criminal Court Cases 813 (Guj.)

Cross examination - One is required to put one's own version in cross-examination of opponent - Effect of non cross-examination is that statement of witness has not been disputed. (2016(2) Apex Court Judgments 372 (S.C.)

Dishonour of cheque - Jurisdiction - Place where a cheque is delivered for collection has jurisdiction. (2016(1) Criminal Court Cases 545 (S.C.)

Dishonour of cheque - Signed on face and back - Cheque intended to be used as a 'self cheque' and not issued by accused to any other person - Cheque was not delivered to the complainant by accused so as draw presumption u/s 139 of the Act. (2010(1) Civil Court Cases 344 (Karnataka)

Dying declaration - Found to be truthful and statement contained therein made voluntarily and recorded correctly - Not to be doubted for the reason that signature or thumb impression was not obtained on said document. (2016(1) Criminal Court Cases 840 (S.C.)

FIR - No delay in lodging FIR - Question of its manipulation does not arise. (2016(1) Apex Court Judgments 043 (S.C.)
Jurisdiction - Courts where consequence of an offence occur have territorial jurisdiction to try the case. (2014(1) Criminal Court Cases 413 (Rajasthan)

Mortgage - Redemption - Sale of interest of one mortgagor in favour of mortgagee - Co-mortgagor is entitled to seek redemption to the extent of his own share on making payment of proportionate part of amount. (2010(1) Civil Court Cases 744 (Bombay)

Narcotic Drugs - Seizure, sampling, safe keeping and disposal of seized Drugs, Narcotics and Psychotropic substances - Measures to prevent substitution and pilferage from stores - Directions issued. (2016(1) Apex Court Judgments 386 (S.C.)

Pledge - Loan agreement - Default in repayment - Right of precedence of loan amount or repayment of dues of workers and cane growers - Workmen in the absence of liquidation, stand only as unsecured creditors and their right cannot prevail over the rights of the pawnee of goods. (2016(2) Apex Court Judgments 408 (S.C.)
Preliminary issue - An issue for which evidence is required cannot be treated as a preliminary issue. (2014(2) Civil Court Cases 206 (Delhi)

Public servant - Sanction for prosecution - Principles governing - Analysed. (2016(2) Apex Court Judgments 436 (S.C.)

Application for leave to file suit u/s 92 of the Code - has to be annexed with the plaint as maintainability of application can be decided on the basis of averments in the plaint. (2017(1) APEX COURT J 666 (S.C.)

Contempt - High Court cannot initiate contempt proceedings for contempt of Supreme Court - High Court and Supreme Court are empowered to punish for its contempt and contempt of Courts subordinate to it. (2017(1) APEX COURT J 414 (S.C.)

Direction for registration of FIR and investigation u/s 156(3) Cr.P.C. - Complaint should not be improbable and must show sufficient ground and commission of offence on the basis of which registration of a case can be ordered. (2017(2) Criminal Court Cases 353 (S.C.)

Equity - A trespasser or encroacher has no equity in his favour. (2017(2) CIVIL COURT CASES 660 (H.P.)

Maxim - `Boundaries prevail over extent' - Not applicable when demarcation of boundaries of property is absent. (2017(2) Civil Court Cases 261 (Madras)

Production and discovery of documents - Both are distinct and independent - Party may not apply for both at a time and may ask independently for each one. 2017(1) Civil Court Cases 141 (Gujarat)

Self acquired property - Son and daughter-in-law have no legal right to live in that house and can live in the house only at the mercy of parents upto the time parents allow. (2017(1) Civil Court Cases 790 (Delhi)

Agreement to sell 164 bighas 7 biswas of land - Grant of permission to purchase 145 bighas of land -  Contract between parties does not stand frustrated. (2014(3) Civil Court Cases 344 (S.C.)

Consent decree - Counsel appearing for a party is fully competent to put his signature to the terms of any compromise. 2014(4) Civil Court Cases 415 (S.C.)

Dishonour of cheque - `Stop payment' - Make a person liable for offence u/s 138 of the Act. 2014(4) Civil Court Cases 583 (S.C.)

Divorce - Cruelty - Non payment of maintenance - Amounts to cruelty. (2014(2) Civil Court Cases 488 (P&H)

Execution - Possession delivered - Trespass into property thereafter - Petitioner cannot be driven again to Civil Court for recovery of possession of his property - Police protection granted with direction to restore possession and to ensure maintenance of law and order situation - If necessary respondents be evicted by force. 2014(4) Civil Court Cases 729 (Kerala)

Maintenance u/s 125 Cr.P.C.  - Illegitimate child - Husband's plea that he had no access to wife when child was begotten stands proved by DNA test report - Husband not liable to pay maintenance to child. (2014(2) Civil Court Cases 220 (S.C.)

Quashing of FIR at the instance of third parties is unknown to law.  (2010(1) Criminal Court Cases 553 (S.C.)

Rape - Prosecutrix five months pregnant - Accused cannot be convicted on the sole basis of DNA report. (2010(1) Criminal Court Cases 129 (Gujarat) (DB)

S.156(3) Cr.P.C. - Complainant asked to lead his evidence before police can be directed to register FIR - Order passed by Magistrate, upheld. (2010(1) Criminal Court Cases 058 (Delhi)

Service - Misconduct - `Doctrine of Proportionality' - This doctrine has to be followed by the employer/employers at the time of taking disciplinary action against their employees/workmen to satisfy the principles of natural justice and safeguard the rights of employees/workmen. (2014(3) APEX COURT J 652 (S.C.)

Sniffer dog - Said dog traced accused and he was formally arrested thereafter - Accused has not been convicted on ground that sniffer dog tracked down house of accused and barked at him - Contention that identification of accused by sniffer dog cannot be relied upon as it is not admissible in order to prove guilt, rejected. 2014(2) APEX COURT J 205 (S.C.)

Stamp purchased in the name of one `H' by mentioning wrong name of his father - Such document cannot be impounded or the document cannot be declared an instrument having no stamp duty or insufficient stamp duty only for the reason that description of purchaser in the stamp duty is not correctly stated or the purchaser of stamp duty is not the one of the party to the instrument. (2014(2) Civil Court Cases 677 (Allahabad)

Temporary injunction - Cannot be granted when suit for permanent injunction is not maintainable. (2014(3) Civil Court Cases 100 (Rajasthan)

Usufructuary  mortgage - Right to recover possession - Commences when mortgage money is paid out of rents and profits or partly out of rents and profits and partly by payment or deposit by mortgagor - Until then, limitation does not start for purposes of Article 61 of the Schedule to the Limitation Act. (2014(3) APEX COURT J 303 (S.C.)

Written statement - Amendment - A person who denies title of plaintiff does not lose a right to set up a plea of irrevocable licence. (2014(2) Civil Court Cases 377 (P&H)

செக் ரிட்டர்ன்… வழக்கு தொடருவதில் புதிய சட்டத் திருத்தம்!

                செக் ரிட்டர்ன்… வழக்கு தொடருவதில் புதிய சட்டத் திருத்தம்!

                                           பணம் தரவேண்டிய ஒருவர் உங்களுக்குக் காசோலை தருகிறார். ஆனால், அந்தக் காசோலையில் பணம் இல்லை என்று திரும்ப வருகிறது. செக் தந்தவர் மீது வழக்குத் தொடர வேண்டும். அந்த வழக்கை எங்குத் தொடர வேண்டும் என்பதில் நடைமுறையில் உள்ள சட்டத்தில் அரசு திருத்தத்தைக் கொண்டுவரவுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தைப் பார்க்கும்முன், ஏற்கெனவே என்ன மாதிரியான நடைமுறை உள்ளது என்று பார்ப்போம்

                                  பணத்தை மொத்தமாக எடுத்துச் சென்று பரிமாற்றம் செய்வதற்குப் பதிலாகப் பணத்துக்கு நிகரான ஒரு ஆவணத்தைப் பயன்படுத்தும் பழக்கம் ஒழுங்குமுறையின்றி இருந்து வந்தது. அதனை நெறிமுறைப்படுத்த மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் பணத்துக்கு மாற்று ஆவணமாக ஒருவர் பிராமிஸரி நோட், பில் ஆஃப் எக்ஸ்சேஞ்ச், காசோலை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் என்று கூறியது.இந்தச் சட்டம் சிவில் சட்டமாக இருந்தது.அதாவது இந்தச் சட்டத்தை மீறீனால், சிவில் வழக்குகள் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

                       காசோலை மூலமான பரிவர்த்தனையை அதிகப்படுத்த வும், நம்பகத்தன்மையை ஊக்கு விக்கவும் இந்தச் சட்டத்தில் 1988-ல் திருத்தம் கொண்டுவரப் பட்டது. அதன்படி பணமில்லா மல் காசோலை திரும்பினால் சட்டப்படிக் குற்றம் என்றும், அதன்மேல் குற்ற நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சட்டம் திருத்தப்பட்டது. அதன் அடிப் படையில் நாடு முழுவதும் மிக அதிகமான காசோலை மோசடி வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டன.
ஆனால், காலப்போக்கில் குற்றவியல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 30 சதவிகிதத்துக்கும் மேலான வழக்குகள் காசோலை மோசடி வழக்குகளாக இருந்தன. இதற்காக 2002-ல் வழக்குகளை விரைவாக முடிக்க அரசு சட்டத் திருத்தத்தை கொண்டுவந்தது.அதன்படி காசோலை மோசடி குற்றத்துக்கான சிறை தண்டனையை 1 வருடத்தில் இருந்து 2 வருடமாக உயர்த்தியது.

           இப்படி சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டாலும், காசோலை மோசடி வழக்கை எந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது என்பதில் சரியான விளக்கம் சட்டத்தில் இல்லை. அதனால் நீதிமன்ற தீர்ப்புகள்தான் வழிகாட்டியாக இருந்தன.அதன்படி பிரிவு 138-க்குக் கீழான காசோலை மோசடி வழக்கை கீழ்க்கண்ட ஏதாவது ஒரு இடத்துக்கு உட்பட்ட நீதிமன்றத் தில் தாக்கல் செய்து கொள்ளலாம். குறிப்பிட்டு இந்த நீதிமன்றத்தில் மட்டும்தான் வழக்குத் தொடர வேண்டும் என உறுதியான நிலை இல்லை.

1. காசோலை பெறுபவர் /புகார்தாரர் இருக்கும் இடம்
 2. காசோலை வழங்கியவர்/குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும் இடம் 3. காசோலை வழங்கிய வங்கி உள்ள இடம் 
4. காசோலையை பணமாக்க செலுத்தப்பட்ட வங்கி இருக்கும் இடம்.

இதற்கேற்ப இந்தியா முழுவதும் கிளைகள் உள்ள ஒரு தனியார் வங்கி, ஒரு வாடிக்கை யாளரிடம் இருந்து கடனுக்காகப் பெற்ற காசோலைகளில் பணம் இல்லை என திரும்ப வந்தது. அந்த வங்கியின் தலைமை இடமான மும்பையிலும், மேலும் டெல்லி மற்றும் கொல்கத்தாவில் வழக்குத் தொடர்ந்தது. ஒரே நபர் மீது ஒரே பரிவர்த்தனைக்காக மூன்று வெவ்வெறு இடங்களில் ஒரே நிறுவனம் வழங்குத் தொடர்ந்தது பழிவாங்கும் விஷயமாக அமைந்தது.
இதனையெல்லாம் சரி செய்யும் விதத்தில் 2014-ல் மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதி மன்ற அமர்வு இதற்குத் தீர்வு கண்டு,

                          காசோலை எந்த வங்கியில் இருந்து வழங்கப்பட்டதோ அந்த வங்கி அமைந்துள்ள நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றத் தில் வழக்குத் தொடரலாம் எனக் கூறியது. இதனால் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த பல லட்சம் வழக்குகள் ஒரு நீதிமன்றத்திலிருந்து வேறு நீதி மன்றங்களுக்கு நாடு முழுவதும் மாற்றப்பட்டது. பிரச்னை தீர்ந்ததா என்றால் இல்லை.
இந்த தீர்ப்பு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் சிரமம் தருவதாக அமைந்ததால் அவர்கள் மத்திய அரசை அணுகி தங்கள் சிரமத்தை முன் வைத்தார்கள். அதன் காரணமாக தற்போது அரசு இந்தச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வரவுள்ளது. இனி காசோலை பெற்றவர்/புகார்தாரர், தான் காசோலையைச் செலுத்தும் வங்கிக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் வழக்கைத் தொடரலாம்.

                                மேலும், ஒரே பரிவர்த்தனையில் ஒருவர் வழங்கிய பல காசோலைகள், அனைத்தும் திரும்பி இருந்தாலும் வெவ்வேறு இடங்களில் வழக்குப் பதிவுசெய்ய முடியாது. அனைத்து வழக்குகளும் ஒரே நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என்ற திருத்தத்தைக் கொண்டு வரவுள்ளது.

                          இந்தச் சட்டம் திருத்தப்படும் பட்சத்தில் உங்களுக்குக் காசோலை தந்து அதில் பண மில்லை என்று திரும்பவந்தால், நீங்கள் காசோலையைச் செலுத்திய வங்கி எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றத்திலேயே வழக்குத் தொடரலாம். இதற்காக இனி நீண்ட தூரம் அலைந்து வழக்குத் தொடரும் சிரமம் தனிநபருக்கோ அல்லது வங்கிகளுக்கோ இருக்காது.

உரிமையியல் வழக்குகளில் காவல்துறையினர் தலையிடலாமா?

உரிமையியல் வழக்குகளில் காவல்துறையினர் தலையிடலாமா?


சொத்தின் உரிமையாளர் யார் என்று கண்டறியும் உரிமையியல் நீதிபதிக்கான பணியை காவல்துறையினர் செய்யக்கூடாது. ஒரு காவல்துறை அதிகாரி நீதிபதியை போன்று செயல்பட முடியாது. எனவே உரிமையியல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் காவல்துறையினர் தலையிடக்கூடாது.

மதுரை உயர்நீதிமன்றம்

CRL. OP. NO - 17302/2014, DT - 12.11.2014

A. சிக்கந்தர் Vs காவல்துறை அதிகாரிகள், மதுரை

2015-1-MLJ-CRL-5

மணவாழ்வு மீட்புரிமை சட்டம்:

மணவாழ்வு மீட்புரிமை சட்டம்:

கணவனோ, மனைவியோ திருமண வாழ்விலிருந்து பிரிந்து செல்லும் நிலை ஏற்படும்போது, அப்பிரிவை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து மணவாழ்வை மீண்டும் தொடர சட்டம் வழிகாட்டுகிறது.
மணவாழ்வு மீட்புரிமை சட்டம் (Restitution of Conjugal Rights) எனப்படும் இந்த சட்டம், சிறப்புத் திருமணச்சட்டம், இந்துத் திருமணச்சட்டம், கிறிஸ்தவ திருமணச்சட்டம் ஆகிய சட்டங்களின்கீழ் திருமணம் செய்தவர்களுக்கு பயனளிக்கிறது.
மணவாழ்வில் ஈடுபட்டுள்ள தம்பதிகளில் ஒருவர், ஏற்கக்கூடிய காரணம் இன்றி வாழ்க்கைத்துணைய
ைவிட்டு பிரிந்து சென்றுவிட்டால், பாதிக்கப்பட்டவர் தமது தாம்பத்திய வாழ்க்கையை மீட்டுத்தருமாறு கோரி உரிய குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியும். சிறப்புத் திருமணச்சட்டத்தின் பிரிவு 22, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 9, இந்திய கிறிஸ்தவர்களுக்கான திருமண முறிவுச்சட்டம் ஆகியவை மணவாழ்வை மீட்பதற்கும், தாம்பத்திய வாழ்வை பெறுவதற்குமான உரிமைகளை வலியுறுத்துகின்றன.

இந்த சட்டங்களின் கீழ், பிரிந்து சென்ற வாழ்க்கைத்துணையுடன் மீண்டும் இணைந்து வாழவிரும்பும் ஒரு நபர் உரிய தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில், இதற்கான மனுவை பதிவு செய்ய வேண்டும்.

அந்த மனுவுடன் திருமணம் நடந்ததற்கான சான்றுகள், சேர்ந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், குழந்தைகள் இருந்தால் அக்குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள், பிரிவு ஏற்படுவதற்கான காரணங்கள் (தெரிந்திருந்தால்), மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் ஆகியவற்றை குறித்து தெளிவான வாக்குமூலங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
இவற்றைப் பரிசீலித்து பார்க்கும் நீதிமன்றம், பிரிந்து வாழும் எதிர்தரப்பினருக்கு இந்த வழக்கு குறித்து தகவல் தெரிவித்து, அவர்களுடைய தரப்பை எடுத்துக் கூறுமாறு அழைப்பாணை (Summon) விடுக்கும். நிர்ணயிக்கப்பட்ட நாளில் எதிர்தரப்பினர் அந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பை எடுத்துக்கூற உரிய வாய்ப்பு அளிக்கப்படும்.

               மீண்டும் இணைந்து வாழ விரும்பாத நிலையில் எதிர்தரப்பினர் இருந்தால் அதற்கான காரணங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அந்த காரணங்கள் ஏற்கத் தகுந்ததாக இருந்தால், உரிய முறையில் மணவிலக்கு பெறுவதற்கான ஆலோசனையுடன் அந்த வழக்கு தீர்க்கப்படும்.

              அதற்கான காரணங்களை உரிய சான்றாதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியது, பிரிந்து வாழும் எதிர்தரப்பினரின் கடமையாகவே கருதப்படும். பிரிந்து வாழ்வதற்கான காரணங்களை எதிர் தரப்பினர் உரிய முறையில் நிரூபிக்காவிட்டால், அவர் கூறும் காரணங்கள் ஏற்கத் தகுந்தது இல்லை என்று தீர்மானிக்கப்பட்டு, மனுதாரருடன் இணைந்து வாழுமாறு எதிர்தரப்பினருக்கு உத்தரவு வழங்கி வழக்கு தீர்க்கப்படும்.

                                     சின்னஞ்சிறு அற்பக் காரணங்கள் காரணமாக வாழ்க்கைத்துணையை பிரிந்து தனிமையில் தவிக்கும் தம்பதிகளுக்கு தேவையான ஒரு சட்டமாகவே இந்த மணவாழ்வை மீட்டளிக்கும் சட்டம் செயல்படுகிறது. பிரிந்து சென்ற இணையர்கள் இருவரும் மீண்டும் சந்திக்கவும், மனம் விட்டு பேசி தங்கள் கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ளவும் இந்த வழக்கின்போது தேவையான வாய்ப்புகள் உள்ளன. சட்டரீதியாக மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் தம்பதிகள் இருவரும் மீண்டும் தங்கள் நிலையை சுயபரிசோதனை செய்து கொள்ளவும் எதிர்காலம் கருதி உரிய முடிவு மேற்கொள்ளவும் இந்த சட்டம் பயன்படுகிறது.

கையெழுத்துக்களை மெய்ப்பிக்கும் முறைகள்!


கையெழுத்துக்களை மெய்ப்பிக்கும் முறைகள்!

இன்று பல வழக்குகளுக்கு கையெழுத்துக்கள்தான் மூல காரணமாக இருக்கிறது. அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

➤  இது கையெழுத்தே இல்லை.

➤  இது என்னோட கையெழுத்து இல்லை.

➤  இது அவருடைய கையெழுத்து இல்லை

➤  இது  யாரோட கையெழுத்து என்று தெரியவில்லை.

மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படுகிறது. பிறர்  கையெழுத்தை நாம் எழுதுவதும் கையெழுத்து போடத் தெரிந்த ஒருவர் கையெழுத்து போட வேண்டிய இடத்தில், தன்னுடைய கையெழுத்தைப் போடாமல், தனது பெயரை தானே எழுதினாலும் அவை தண்டணைக்குரிய குற்றம் ஆகும்.

இந்த போலியான கையெழுத்துக்கள் எப்படி மெய்ப்பிக்கப்படுகிறது?

கையெழுத்துக்கு உரியவர் உயிரோடு இருந்தால்...?

1) ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இருக்கின்றார் என்றால்,  நேரடியாக அழைத்து விசாரணை அதிகாரி அவரை விசாரிக்கலாம். அவர் அதை தன்னுடைய கையெழுத்து இல்லை என்று கூறும் பட்சத்தில் அதனை பொய் கையெழுத்து என்று முடிவு செய்யலாம்.

கையெழுத்துக்கு உரியவர் உயிரோடு இல்லை என்றால்...?

2) ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இல்லை என்றால், அவரது கையெழுத்தை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அல்லது உடன் பணி புரிந்தவர்கள் ஆகியோர்களிடம் விசாரணை அதிகாரி  விசாரிக்கலாம்.  அவர்கள் அதை இறந்தவருடைய கையெழுத்து இல்லை என்று கூறும் பட்சத்தில் அதனை பொய் கையெழுத்து என்று முடிவு செய்யலாம்.

 கையெழுத்துக்கு உரியவரும், சாட்சியும் உயிரோடு இல்லை என்றால்...?

3)  ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இல்லை மேலும்  அவரது கையெழுத்தை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அல்லது உடன் பணி புரிந்தவர்கள் என்று யாருமே இல்லை அல்லது உயிருடன் இல்லை என்றால், அந்தக் கையெழுத்துக்குரிய ஆவணத்தையும், கையெழுத்துப் போட்டவரது வேறு ஒரு பழைய ஆவணத்தையும் Forensic field என்று சொல்லப்படக்கூடிய தடயவியல் துறையின் ஆய்வகத்திற்கு அனுப்பி ஒப்பிட்டுப் பார்த்து, அவர்கள் தரக்கூடிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் அந்தக் கையெழுத்து பொய்யானதா? உண்மையானதா? என்று விசாரணை அதிகாரி முடிவு செய்ய வேண்டும்.

Tamilnadu Forensic Sciences Department and Lab. 

அரசு பணியில் சேர்ந்த ஒருவர் ஓராண்டு காலத்திற்குள் இறந்துப்போனால் அவருடைய விதவை மனைவி வழங்க வேண்டுமா?

அரசு பணியில் சேர்ந்த ஒருவர் ஓராண்டு காலத்திற்குள் இறந்துப்போனால் அவருடைய விதவை மனைவி வழங்க வேண்டுமா?


தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 ல் விதி 45(3)(a) மற்றும் (b)  ன்படி ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றி இறந்த அரசு ஊழியருக்கு இறப்பு மற்றும் ஓய்வுகால பயனாக இரண்டு மாத காலச் சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில், விதி 49(2) ல் வரம்புரையில் (PROVISO) குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படி ஓராண்டு காலத்திற்கு குறைவாக பணியாற்றிய அரசு ஊழியர் இறந்து போனால், அவருடைய விதவை மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த விதி 49(2) கீழே தரப்பட்டுள்ளது.

49(2) துணை விதி 3-ல் கூறப்பட்டுள்ளதற்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில், ஒரு அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் 1(a) ஓராண்டு காலத்திற்கு குறைவில்லாமல் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும். அல்லது அவருடைய பணிக் காலத்தில் எந்தவொரு நேரத்திலும் இறக்க நேரிடுதல்

(b)  பணி ஓய்வுக்கு பிறகு அவர் இறக்கும் நாளில் ஓய்வூதியம் பெற்றுவருவாரேயானால், இறந்த போனவரின் குடும்பத்தினர் அந்த குடும்ப ஓய்வூதியத்தை எப்படி பெற தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஒருவரை அரசு ஊழியராக பணி நியமன செய்வதற்கு முன்பு உரிய மருத்துவ அதிகாரியால் பரிசோதிக்கப்பட்டு அவர் பணியில் சேர்வதற்கு தகுதி என்று அறிவிக்கப்பட்டு பணியில் சேர்ந்து ஓராண்டு காலம் பணி நிறைவடைவதற்கு முன்பாக அந்த அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

எனவே மேற்கண்ட விதியின்படி ஓராண்டு காலம் பணி நிறைவடைவதற்கு முன்பாக ஓர் அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்தினருக்கு, குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

இந்த தீர்ப்பை " தமிழ்நாடு அரசு Vs M. தெய்வசிகாமணி (2009-3-MLJ-1) மற்றும் உச்சநீதிமன்றம் S. K. துவா Vs ஹரியானா மாநில அரசு (AIR-2008-SC-1077) ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வழங்கியுள்ளது.

W. P. NO - 12437/2007, dt - 3.12.2014

Radha Bai and Another Vs The Secretary, Tamilnadu

2015-1-MLJ-819

அந்த குழந்தைக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்

ஒரு பெண்ணிற்கு திருமணமாகாமல் குழந்தை பிறந்துள்ள நிலையில், அந்த குழந்தை பிறப்பதற்கு காரணமான நபர் அந்த குழந்தைக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?


உச்சநீதிமன்றம் " தரம் டியோ யாதவ் Vs உத்திர பிரதேச அரசு (2014-4-SCALE-730)" என்ற வழக்கில் DNA TEST அறிக்கை மிகவும் நம்பகமான ஒன்று என்றும், அதன் சிறப்பு என்னவென்றால் அதனை வைத்து ஒரு தனிப்பட்ட நபர் மற்றும் அவருடைய இரத்தம் சம்பந்தப்பட்ட உறவினர்களான தாயார், தந்தை, சகோதரன் போன்றவர்களை அடையாளம் காண முடியும் என்று தீர்ப்பு கூறியுள்ளது. மேலும் DNA TEST குறித்து விரிவாக விளக்கியுள்ளது.

அதேபோல் உச்சநீதிமன்றம் " கம்டி தேவி Vs ஒஷிராம் (2001-5-SCC-311)" என்ற வழக்கில் DNA TEST அறிக்கை அறிவியல் ரீதியாக மிகவும் துல்லியமானது. ஆனால் அதனடிப்படையில் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 112 ல் உறுதியாக கூறப்பட்டுள்ளதிலிருந்து விடுபடுவதற்கு DNA TEST அறிக்கையின் முடிவு மட்டும் போதுமானதல்ல. ஒரு கணவனும், மனைவியும் சேர்ந்து வாழ்ந்திருந்த காலத்தில் அந்த மனைவி கருவுற்றிருந்த நிலையில், DNA பரிசோதனையில் அந்த குழந்தை அந்த கணவருக்கு பிறக்கவில்லை என்று தெரிய வந்தாலும் பிரிவு 112 ல் கூறப்பட்டுள்ளதை மறுத்துரைக்க வேண்டியது கணவரின் கடமையாகும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அண்மையில் உச்சநீதிமன்றம் " நந்த்லால் வசுதியோ பெட்வாக் Vs லதா நந்த்லால் பெட்வாக் (2014-2-SCC-576)" என்ற வழக்கில் DNA பரிசோதனை அறிக்கை மிகவும் துல்லியமானது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே DNA பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் ஒரு குழந்தைக்கு தந்தை என்று கருதப்படும் நபர் அந்த குழந்தைக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CR. Revision. No - 483/2012, DT - 19.8.2014

துவாரகா ஹல்பா Vs சாவித்திரி பாய் மற்றுமொருவர்

2015-1-DMC-824

நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது அந்த சொத்தை விற்பனை செய்தால் அது செல்லுமா?

ஒரு சொத்து குறித்து ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது அந்த சொத்தை விற்பனை செய்தால் அது செல்லுமா?

அவ்வாறு வழக்கு நிலுவையில் இருக்கும் போது அந்த சொத்தை கிரையம் வாங்கிய ஒருவர் தீர்ப்பை பெற்றவருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்ய முடியுமா?

ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அந்த வழக்கு சொத்து விற்பனை செய்யப்பட்டிருந்தால் உ. வி. மு. ச கட்டளை 21,விதி 97 ன் கீழ் அல்லது கட்டளை 21,விதி 98 மற்றும் 102 ன் கீழ் ஒரு தடங்கல் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய முடியாது.

உ. வி. மு. ச கட்டளை 21 விதி 102 ஆனது உரிமையியல் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, உரிமை மாற்றம் பெற்றவர் இந்த பிரிவின் கீழ் எந்த பரிகாரமும் கோர முடியாது என்று கூறுகிறது.

N. S. S. நாராயண சர்மா மற்றும் பலர் Vs M/s கோல்டு ஸ்டோன் எக்ஸ்போர்ட்ஸ் பி. லிட் (2001-4-CTC-755) மற்றும் பானுமதி (எ) கருணையம்மாள் Vs A. P. அர்த்தநாரி மற்றும் பலர் (2002-5-CTC-483) மற்றும் உச்சநீதிமன்றம் "உஷா சிம்கா Vs டைனாராம் (2008-7-SCC-144)" ஆகிய வழக்குகளில், ஒரு அசல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு, அதில் தீரப்பாணையும் வழங்கப்பட்டிருந்தால், அந்த வழக்கு சொத்து குறித்து ஏதேனும் உரிமை மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் அதன் அடிப்படையில் ஒரு தடங்கல் விண்ணப்பத்தை அந்த சொத்தை வாங்கியவர்கள் தாக்கல் செய்வதற்கு ஒரு தடையை உ. வி. மு. ச கட்டளை 21,விதி 102 ஏற்படுத்தும் என்று தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது.

எனவே வழக்கு நிலுவையில் இருக்கும் போது சொத்தை கிரையம் வாங்கினால் அது அந்த தீர்ப்பை பொறுத்து கட்டுப்படுத்தப்படும் என்றும், வழக்கு நிலுவையில் இருக்கும் போது சொத்தை கிரையம் வாங்கிய ஒருவர் தீர்ப்பை எதிர்த்து மனுத்தாக்கல் ஏதும் செய்ய முடியாது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

C. M  S. A. (MD). No - 12/2014

Dt - 27.1.2015

செல்லத்துரை மற்றுமொருவர் Vs ஆவுடையப்ப கோனார் மற்றும் பலர்

2015-1-TLNJ-970